Google search engine
இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறிதாவது: உயர் நீதிமன்ற உத்தரவுடன், தமிழகம் முழுவதும் அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி வருகிறோம். அவர் தேசியத் தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் அல்ல. உயர் நீதிமன்ற உத்தரவின்படி, சென்னையில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் ஏப். 14-ம் தேதி (இன்று) மாலை மாலை அணிவிக்க உள்ளோம். பெண்களை தவறாகப் பேசிய...
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பெரியார், அம்பேத்கர் சிலை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. திக தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் சிலைகளைத் திறந்துவைத்தனர். இதில், அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்வில் திருமாவளவன் பேசியதாவது: திமுக அரசியல் இயக்கமாகவும், ஆளும் கட்சியாகவும் வீரநடை போடுகிறது. எனவே, இன்னொரு கட்சி திமுகவுக்கு முட்டுக்கொடுக்க வேண்டிட அவசியமில்லை. திமுக பலவீனமாகவும் இல்லை. திமுகவை...
வக்பு சட்டத் திருத்தத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தவெக தலைவர் விஜய் வழக்கு தொடர்ந்துள்ளார். வக்பு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளும் மசோதா மற்றும் முஸல்மான் வக்பு (ரத்து) மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இண்டியா கூட்டணியின் கடும் எதிர்ப்புக்கு இடையே நிறைவேறியது. இதைத் தொடர்ந்து மசோதாவுக்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்த நிலையில், சட்டத் திருத்தம் அமலுக்கு வந்தது. இதற்கிடையே, தமிழக சட்டப்பேரவையில் மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு,...
பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை 3 நாள் ஆன்மிக பயணமாக நேற்று உத்தரகாண்ட் புறப்பட்டுச் சென்றார். அங்கிருந்து இமயமலை செல்லவும் அண்ணாமலை திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக பாஜக அமைப்பு தேர்தல் நடைபெற்று வந்த நிலையில் அண்ணாமலை மாற்றப்பட்டு, புதிய மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையை அடுத்த வானகரத்தில் நடைபெற்ற பதவி ஏற்பு விழா நிகழ்ச்சியில், பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக்கொண்டார். அதேமேடையில்,...
திமுக​வுடன் பாஜக மறை​முக கூட்​டணி என்று விஜய் பொத்​தாம் பொது​வாக கூறு​வதை பொருட்​படுத்த தேவை​யில்லை என்று தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தெரி​வித்​துள்​ளார். தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் நேற்று சென்​னை​யில் இருந்து விமானம் மூலம் தூத்​துக்​குடி புறப்​பட்டுச் சென்​றார். சென்னை விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: நான் பாஜக மாநில தலை​வ​ராக புதி​தாக பொறுப்​பேற்​றாலும், கட்சி தொண்​டர்​களு​டன் கடந்த 9 ஆண்​டு​களாக பழகி வரு​கிறேன்....
தமிழ் புத்​தாண்டு புதிய எழுச்​சி​யை​யும், மகிழ்ச்​சி​யை​யும் வழங்​கும் ஆண்​டாக அமையட்​டும் என தமிழக ஆளுநர் ஆர்​.என்​.ரவி மற்​றும் பல்​வேறு அரசி​யல் கட்சி தலை​வர்​கள் வாழ்த்து தெரி​வித்​துள்​ளனர். இதுதொடர்​பாக அவர்​கள் வெளி​யிட்ட வாழ்த்து செய்​தி​யில் கூறி​யிருப்​ப​தாவது: ஆளுநர் ஆர்​.என்​.ர​வி: தமிழ்ப் புத்​தாண்​டு, பெரு​மைமிக்க பண்​டைய, வளமான தமிழ் கலாச்​சா​ரம் மற்​றும் பாரம்​பரி​யத்​தின் நம்​பிக்​கைக்​குரிய எதிர்​காலத்​தின் கொண்​டாட்​ட​மாகும். இந்த புத்​தாண்டு அனை​வருக்​கும் வளம், நல்ல ஆரோக்​கி​யம், புதுப்​பிக்​கப்​பட்ட ஆற்​றல் மற்​றும் ஏராள​மான வாய்ப்​பு​களை கொண்​டு​வரட்​டும். அதி​முக...
தமிழகத்தில் இன்றும், நாளையும் வழக்கத்தைவிட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடலோர ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று (ஏப்.14) இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்....
பாமகவில் தந்தை ராமதாஸுக்கும், மகன் அன்புமணிக்கும் இடையே நடைபெற்று வரும் கட்சியை வழிநடுத்துவது யார் என்ற அதிகார மோதல் போக்கால் யார் பின்னால் செல்வது என தெரியாமல் நிர்வாகிகளும், தொண்டர்களும் குழப்பம் அடைந்துள்ளனர். இந்த மோதல் போக்கு ஏதோ புதிதாக இப்போது ஏற்பட்டது அல்ல. கட்சியின் இளைஞர் அணி தலைவரில் இருந்து கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற அன்புமணி, கட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்த போதே, தந்தைக்கும், மகனுக்கும்...
தொழில்நுட்ப வளர்ச்சி, வெளிநாடுகளின் செயல்பாடுகள் போன்றவற்றால் பாதுகாப்பு சூழல் வேகமாக மாறி வருகிறது. இதைக் கருத்திக் கொண்டு, தக்க வியூகங்கள் வகுத்து முப்படை அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். நீலகிரி மாவட்டம் வெலிங்டன் முப்படை அதிகாரிகள் பயிற்சித் கல்லூரியில் நேற்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், 45 வார பயிற்சியை நிறைவு செய்த 478 அதிகாரிகளுக்கு பட்டங்கள் வழங்கி பாதுகாப்புத் துறை அமைச்சர்...
 சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு நேற்று வந்த நாகலாந்து ஆளுநர் இல.கணேசன், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவை அவரது இல்லத்தில் சந்தித்தார். பின்னர் இல.கணேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாகலாந்து மிக குளிர்ச்சியாகவும், இயற்கை எழில் நிறைந்த மாநிலமாகவும் உள்ளது. இந்த மாநிலத்தில் முந்தைய காலத்தில் ஆயுதம் ஏந்திய போராளிகள் இருந்தனர். மோடி பிரதமரான பிறகு போராளிகளுக்கும், அரசுக்குமிடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. இனி ஆயுதத்தை ஏந்த மாட்டோம் என்று போராளிகள் உறுதியளித்தனர். அதை...