சுகாதாரத் துறை மா.சுப்பிரமணியன். கடந்த 22-ம் தேதி காய்ச்சல் காரணமாக, கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதியானார். அவருக்கு தேவையான சிகிச்சைகளை மருத்துவர்கள் அளித்தனர்.
உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அமைச்சர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டில் ஓய்வு எடுத்து வந்த நிலையில், நேற்று காய்ச்சல் பாதிப்பு அதிகரித்ததால் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.
அவரது உடல்நிலையைப் பரிசோதனை...
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே புலி தாக்கியதில் முதியவர் உயிரிழந்தார்.
ஊட்டி அருகேயுள்ள சின்னகாடி மந்தையில் வசிக்கும், தோடர் இனத்தைச் சேர்ந்த புஸ்தால் குட்டன் (58) என்பவர் நேற்று முன்தினம் இரவு காடி மந்துக்குச் சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பாததால், பல இடங்களிலும் தேடினர்.
இந்நிலையில், நேற்று காலை காடிமந்து அருகேயுள்ள வனப் பகுதியில் அவரது உடல் கிடந்தது தெரிய வந்தது. தகவலறிந்து வந்த வனத்துறையினர் அவரது உடலை மீட்டு,...
முதியோர் இல்லத்தில் தஞ்சமடைந்த 72 வயது தாயை மீட்கக் கோரிய தத்து மகனுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு
admin - 0
திண்டுக்கல்லைச் சேர்ந்த செல்வகணேஷ், மாயமான தனது 72 வயது தாயார் ஜெயலட்சுமியை மீட்க வலியுறுத்தி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்தநீதிபதி ஜி.கே.இளந்திரையன், ஆர். பூர்ணிமா அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
மனுதாரர் குறிப்பிட்டுள்ள ஜெயலட்சுமி (72) திருமணம் ஆகாதவர். ஏராளமான சொத்துகள் உள்ளன. உதவிப் பேராசிரியராக பணிபுரிந்த அவர், செல்வ கணேஷை தத்தெடுத்துள்ளார். ஆனால், ஜெயலட்சுமியை மிரட்டி சில சொத்துகளை...
வேலூர் மாவட்டத்தில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு, மனு அளித்த 4 நாட்களில் அனுமதி வழங்கப் பட்டுள்ளது. மேலும், விதிமுறை களை மீறி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளதாக காவல் துறையினர் குற்றஞ் சாட்டியுள்ளனர்.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த அகரம்சேரியில் தவெக சார்பில் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. தவெக தலைவர் நடிகர் விஜய் பங்கேற்ற இந்த நிகழ்ச்சிக்கு பிப்.22-ம் தேதிதான் போலீஸார் அனுமதி...
எண்ணூரில் மக்களின் வசதிகளுக்காக ரூ.10 கோடியில் பேருந்து நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம், நவீன நூலகம்
admin - 0
திருவொற்றியூர் தொகுதிக்கு உட்பட்ட எண்ணூரில் பொதுமக்களின் வசதிகளுக்காக ரூ.10 கோடியில் பேருந்து நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம், நவீன அரசு நூலகம் ஆகியவற்றை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டப்பேரவை தொகுதிகளுக்குட்பட்ட பேகம் 5-வது தெருவில், ரூ.1.10 கோடியில் 2,250 சதுரஅடி பரப்பளவு கொண்ட இறகு பந்து விளையாட்டு உள்ள ரங்க மைதானம், திருவல்லிக்கேணி ராஜாஜி நகரில் மாநகராட்சி சார்பில் ரூ.4.44...
கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 2007 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார். இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை பெரம்பூர் டான்பாஸ்கோ பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளைச் சார்ந்த 2007 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்.
மேலும், வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சிஎம்டிஏ சார்பில் ரூ.1.61 கோடி நவீன...
சென்னை கொடுங்கையூர் பகுதியில் உள்ள ஒரு கோயில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக கூறி, 7 நாட்களில் அதை இடிக்க வேண்டுமென மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் கடந்த ஆண்டு கோயில் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
இதை எதிர்த்து கோயில் நிர்வாகம் தரப்பில் ஜெயா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘தங்களது தரப்பில் விளக்கம் அளிக்க எந்தவொரு கால அவகாசமும் அளிக்காமல், கோயில் ஆக்கிரமிப்பில் உள்ளதா என்பதை கண்காணிப்பு...
ஆசிரியர் சிறப்பு தகுதித்தேர்வில் எம்பிசி பிரிவினருக்கும் சிறப்பு மதிப்பெண் சலுகை: ராமதாஸ் வலியுறுத்தல்
admin - 0
பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை: பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்காக டிஆர்பி சார்பில் ஜூலை 4, 5 தேதிகளில் சிறப்பு தகுதித்தேர்வு நடத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதில் உள்ள தேர்ச்சி மதிப்பெண் நடைமுறை ஆசிரியர்களிடையே பாகுபாட்டை ஏற்படுத்துவதாக உள்ளது. 2003, 2004 ஆண்டுகளில் வெளியிடப்பட்ட அரசாணைகள் மூலம் சத்துணவு அமைப்பாளர்கள் ஆசிரியர்களாக பணி ஈர்ப்பு செய்யப்பட்டபோது, அனைவருக்கும் பொதுவான ஒரே குறைந்தபட்ச மதிப்பெண் மட்டுமே தேர்ச்சியாக நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால் தற்போது...
“கழகத்தினர் இன்னும் இரண்டு மாதங்களுக்கு தூக்கம் மறந்து உழைக்க வேண்டும்” என சூரியக் கட்சி தலைவர் சூளுரைத்து வரும் நிலையில், ‘சத்திய சோதனை’ தலைவரின் பெயர் கொண்ட மாண்புமிகுவானவர் தனது துறை சார்ந்த நிகழ்ச்சிக்கே தாமதமாக வந்து சூரியக் கட்சி தலைவரின் சுட்டெரிக்கும் பார்வைக்கு ஆளானாராம்.
போதாதுக்கு, “புதிதாக அரசியலுக்கு வந்திருக்கும் நடிகரை எனக்கு ரொம்பப் பிடிக்கும்” என வலை தொலைக் காட்சி ஒன்றுக்கு வம்படியாய் பேட்டியளித்ததும் மாண்புமிகுவுக்கு உண்மையிலேயே...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியும் அவரை புகழ்ந்து பேசியுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி: “ஜெயலலிதா பிறந்த நாளில் அவரை நினைவுகூர்கிறேன். மனம் கவர்ந்த தலைவர் மற்றும் தலைசிறந்த நிர்வாகியாக எண்ணற்ற மக்களின் இதயங்களிலும், மனங்களிலும் அவர் இடம் பிடித்துள்ளார். அவரது வாழ்க்கைப் பயணம் மன உறுதி மற்றும் தீர்மானத்துடன் இருந்தது.
தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில், பெண்களுக்கு அதிகாரமளித்தல் குறித்து வலுவான...









