குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு: திருவேற்காடு நகராட்சி ஆணையர் ஆய்வு செய்ய ஐகோர்ட் உத்தரவு
admin - 0
மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விதிகளை மீறி குடியிருப்புப் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கில், திருவேற்காடு நகராட்சி ஆணையர் சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவேற்காடு கோலடி கிராமத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் எம்.காமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார். வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.வஸ்தவா, நீதிபதி சுந்தர்...
‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் கேம் டெவலப்பர், ஆர்டிஸ்ட் மற்றும் புரோகிராமர் திறன் பயிற்சிக்காக கூகுள், யூனிட்டி நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இடையே துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: ‘நான் முதல்வன்’ திட்டத்தில், ஆண்டுதோறும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் திறன்சார்ந்த பயிற்சிகள் பெற்று வருகின்றனர். மேலும் தமிழக மாணவர்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில்...
திருநெல்வேலியில் ஐடி ஊழியர் சாதிய படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாளையங்கோட்டையில் ஐடி ஊழியர்கவின் சாதிய படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து விசிக தலைவர் திருமாவளவன் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்த கொடூர சாதிய கொலைக்கு உடந்தையாக இருந்த பெண்ணின் பெற்றோரை உடனடியாக கைது செய்ய வேண்டும். அவர்களை காவல் துறை பணியிலிருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும்.
மேலும் இவ்வழக்கை...
நீதிபதிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர துடிப்பது கண்டிக்கத்தக்கது: எழுத்தாளர் தர்மன் கருத்து
admin - 0
சுதந்திரமாகச் செயல்பட்டுவரும் நீதிபதிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரத் துடிப்பது கண்டிக்கத்தக்கது என்று எழுத்தாளர் சோ.தர்மன் கூறியுள்ளார்.
உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீது அவதூறு பரப்பும் வகையில் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டதற்காக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது நடவடிக்கை எடுக்குமாறு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், கே.ராஜசேகர் அமர்வு பரிந்துரை செய்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக எழுத்தாளர் சோ.தர்மன், அவரது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்...
குற்றம்சாட்டப்பட்ட 2,000 பேரிடமும் விசாரித்தால் செந்தில் பாலாஜி மீதான விசாரணை வாழ்நாள் முழுவதும் முடிவுக்கு வராது: உச்ச நீதிமன்றம்
admin - 0
போக்குவரத்துத் துறையில் வேலைவாங்கித் தருவதாக பணம் பெற்று மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வாழ்நாள் முழுவதும் இந்த விசாரணை முடிவுக்கு வராது என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
போக்குவரத்து துறையில் வேலைக்கு பணம் பெற்ற விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஒய்.பாலாஜி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு...
மதுரை பிரச்சினைகளை டெல்லியில் அவர் என்றாவது பேசியுள்ளாரா? – சு.வெங்கடேசனுக்கு எதிராக கொந்தளித்த மேயர், கவுன்சிலர்கள்
admin - 0
‘திமுக தொண்டர்கள் ரத்தமும், வியர்வையும் சிந்தி உழைத்ததாலேயே சு.வெங்கடேசன் எம்.பி.யாகியுள்ளார்’ என்று மாநகராட்சி கூட்டத்தில் திமுக மேயரும், அக்கட்சியின் கவுன்சிலர்களும் கொந்தளித்தனர்.
இந்தியாவின் தூய்மை நகரங்களின் பட்டியலில் மதுரை கடைசி இடம் பிடித்தது குறித்து சு.வெங்கடேசன் எம்.பி. விமர்சித்திருந்தார். மதுரை நகரின் தூய்மை மோசமாக உள்ளது, மாநகராட்சி சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். தூய்மையைப் பாதுகாக்க முதல்வர் தலையிட வேண்டும் என்று அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில்...
கிராம ஊராட்சிகளில் சிறிய கடைகளுக்கும் உரிமத்தைக் கட்டாயமாக்கும் சட்டத்தை தமிழக அரசு திரும்பப் பெறவேண்டும் என்று தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: இது உழைக்கும் வர்க்கத்தின் மீது நிகழ்த்தப்படும் வன்முறை. விலைவாசி உயர்வு, மின்கட்டணம், குடிநீர் கட்டணம், பால்விலை உயர்வு என தள்ளாடும் சிற்றுண்டிக் கடைகளை மொத்தமாக இழுத்து மூட முடிவு செய்து விட்டதா திமுக அரசு.
ஏழை, எளிய மக்களின் தோள்களின் மீது நிதிச் சுமை ஏற்றப்படுவதை...
திருவாரூர் மாவட்ட திமுக-வில் அசைக்கமுடியாத சக்தியாக இருக்கும் பூண்டி கலைவாணன் எம்எல்ஏ, 18 ஆண்டுகளாக மாவட்டச் செயலாளராகவும் இருக்கிறார். திமுக தலைவர் கருணாநிதி திருவாரூரில் இரண்டு முறை வென்றபோதும் தொகுதியில் அவருக்கான ஆக்டிங் எம்எல்ஏ-வாக இருந்த கலைவாணன், இந்த முறை அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால், இதே மாவட்டத்தைச் சேர்ந்த டி.ஆர்.பி.ராஜாவும் அதற்கான போட்டியில் இருந்ததால் இருவருக்கும் அமைச்சரவையில் இடமளிக்காமல் சாதுர்யமாக தவிர்த்துக் கொண்டது தலைமை.
இதனால்,...
‘தமிழகம் என்றுமே ஆன்மிகம் தழைத்தோங்கும் புண்ணியபூமி என்பது மீண்டுமொருமுறை நிரூபணமாகியுள்ளது’ என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ராஜேந்திர சோழனின் வீர வரலாற்றின் ஆயிரமாவது வெற்றி விழாவில் பங்கேற்பதற்காகவும், தூத்துக்குடி நவீன விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகவும் 2 நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் மோடி 26-ம் தேதி இரவு தமிழகம் வந்தார்.
தூத்துக்குடி விமான நிலைய...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காவல் துறை செல்வப்பெருந்தகையை விசாரிக்க தவறிவிட்டது: பகுஜன் சமாஜ் வாதம்
admin - 0
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகையிடம் விசாரிக்க காவல் துறை தவறிவிட்டது என பகுஜன் சமாஜ் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்தாண்டு ஜூலை 5-ம் தேதி தனது வீட்டின் அருகே வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கை செம்பியம் காவல் துறையினர் நியாயமாக விசாரிக்கவில்லை என கூறி, விசாரணையை சிபிஐக்கு...






