Google search engine
‘​திருப்​பரங்​குன்​றம் மலையை சிக்​கந்​தர் மலை என அழைக்க என்ன ஆதா​ரம் உள்​ளது?’ என உயர் நீதி​மன்​றம் கேள்வி எழுப்பி உள்ளது. திருப்​பரங்​குன்​றம் மலை​யில் ஆடு, கோழி பலி​யிட​வும், அசைவ உணவு பரி​மாற​வும் தடை விதிக்​கக் கோரிய வழக்கில் 2 நீதிப​தி​கள் மாறு​பட்ட தீர்ப்பு வழங்​கிய​தால் இந்த வழக்​கு​கள் 3-வது நீதிபதி விசா​ரணைக்கு மாற்​றப்​பட்​டது. இந்த வழக்கை நீதிபதி ஆர்​.​விஜயகு​மார் விசா​ரித்து வரு​கிறார். இந்த வழக்கு நேற்று விசா​ரணைக்கு வந்​த​போது, “திருப்​பரங்​குன்​றம்...
 சென்னை அருகே பெரும்​பாக்​கத்​தில் புதி​தாக 135 மின்​சார ஏசி பேருந்​துகள் சேவையை துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் நேற்று தொடங்கி வைத்​தார். தமிழகத்​தில் முதன்​முறை​யாக சென்னை மாநகர போக்​கு​வரத்து கழகம் சார்​பில் ரூ.208 கோடி மதிப்​பில் 120 புதிய தாழ்தள மின்​சார பேருந்​துகளின் சேவையை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் கடந்த ஜூன் மாதம் தொடங்கி வைத்​தார். இந்​நிலை​யில் செங்​கல்​பட்டு மாவட்​டம் பெரும்​பாக்​கம் பணிமனை​யில் இருந்து ரூ.233 கோடி மதிப்​பீட்​டில் 55 மின்​சார...
‘தமிழகத்​தில் கஞ்​சா​வும் உற்​பத்​தி​யாக​வில்​லை, சாராய​மும் காய்ச்​ச​வில்​லை. வெளி மாநிலங்​களில் இருந்து வரும் அவற்றை மத்​திய அரசு​தான் தடுக்க வேண்​டும்’ என அமைச்​சர் எஸ்​.ரகுபதி தெரி​வித்தார். இதுதொடர்​பாக, புதுக்​கோட்​டையில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: பிஹார் மாநில வாக்​காளர் பட்​டியல் திருத்​தம் தொடர்​பான பிரச்​சினை உச்ச நீதி​மன்​றம் வரை சென்​றுள்​ளது. தமிழகத்​தில் வாக்​காளர் பட்​டியலில் தேர்​தல் ஆணை​யம் தவறு செய்​தால், உச்ச நீதி​மன்​றம் செல்​வோம். தமிழகத்​தில் கஞ்​சா​வும் உற்​பத்​தி​யாக​வில்​லை, சாராய​மும் காய்ச்​ச​வில்​லை. வெளி...
சென்​னை​யில் இருந்து ஆன்​மிகச் சுற்​றுலா சென்ற குழு​வினர் பரு​வதமலை​யில் இருந்து கீழே இறங்​கிய​போது, மழை வெள்​ளத்​தில் சிக்கி 2 பெண்​கள் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். திரு​வண்​ணா​மலை மாவட்​டம் கலசப்​பாக்​கம் அடுத்த தென்​ம​காதேவ மங்​கலம் கிராமத்​தில் உள்ள பிரசித்தி பெற்ற மல்​லி​கார்​ஜுனர் மற்​றும் பிரம்​மாம்​பிகை கோயில் 4,560 அடி உயர​முள்ள பரு​வத மலை​யில் உள்​ளது. இந்​தக் கோ​யிலுக்கு நேற்று முன்​தினம் அதி​காலை சென்னை திரு​வேற்​காடு பகு​தியி​லிருந்து 15 பேர் வாக​னத்​தில் வந்​துள்​ளனர். இவர்​கள்,...
தேமுதிக தலைவர் விஜயகாந்த் 2006-ல் முதன்முதலில் போட்டியிட்டு வென்ற தொகுதி விருத்தாசலம், பாமக-வுக்கு செல்வாக்கான இந்தத் தொகுதியில் கேப்டன் தனித்துப் போட்டியிட்டு வென்றதால் தேர்தலுக்கு தேர்தல் இந்தத் தொகுதி தனித்த கவனத்தைப் பெற்று வருகிறது. அதுபோல இந்தத் தொகுதி மீதான தேர்தல் கணிப்புகள் இந்தத் தேர்தலுக்கும் இப்போதே பரபரக்க ஆரம்பித்துவிட்டன. தொகுதிப் பங்கீட்டில் மதிமுக-வுடன் மனஸ்தாபம் ஏற்பட்டால் அந்தக் கட்சிக்குப் பதிலாக தேமுதிக-வை திமுக கூட்டணிக்குள் இழுத்துப் போடும் ஆயத்த...
அரசு மருத்​து​வர்​களின் நீண்ட நாள் கோரிக்​கைகளை சுதந்​திர தினத்​தில் நிறைவேற்ற வேண்​டும் என்று தமிழக முதல்​வருக்கு அரசு மருத்​து​வர்​கள் கோரிக்கை வைத்​துள்​ளனர். இதுதொடர்​பாக அரசு மருத்​து​வர்​களுக்​கான சட்​டப் போராட்​டக் குழு தலை​வர் எஸ்​.பெரு​மாள் பிள்ளை வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: இந்​தி​யா​வில் பல்​வேறு சுகா​தார குறி​யீடு​களில் தமிழக சுகா​தா​ரத் துறை முன்​னணி​யில் உள்​ளது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்​சை​யில் தொடர்ந்து 8-வது முறை​யாக சிறந்த மாநிலம் என்ற விருதை பெற்று தமிழகம்...
இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் முத்​தரசன், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனுவில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தில் ஆறுகள், அரசு நிலங்​கள் மற்​றும் ரயத்​து​வாரி நிலங்​களில் சட்​ட​விரோதக் குவாரி​கள் மூலம் விதி​களை மீறி உவர், சவடு, கிராவல் மணல் அள்​ளப்​படு​கிறது. இதனால் இயற்கை வளம் கடுமை​யாகப் பாதிக்​கப்​படு​கிறது. வைகை, காவிரி, பாலாற்​றில் மணல் அள்​ளிய​தால் இயற்கை நீரோட்​டத்​தில் பாதிப்பு ஏற்​பட்​டுள்​ளது. பாசனக் கண்​மாய்​களுக்கு தண்​ணீர் சென்​றடைய​வில்​லை. நிலத்​தடி...
சர்​வா​தி​கார ஆட்சி நடத்த பாஜக திட்​ட​மிட்​டுள்​ள​தாக இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் தேசி​யத் தலை​வர் கே.எம்​.​காதர் மொகிதீன் கூறி​னார். நாகூரில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: மத்​தி​யில் ஆளும் பாஜக அரசு அரசி​யல் சாசனத்​துக்கு அப்​பாற்​பட்டு ஆட்சி செய்து வரு​கிறது. வாக்​காளர் பட்​டியலை ஆண்​டுக்கு 3 அல்​லது 4 முறை மட்​டுமே திருத்​து​வதற்கு தேர்​தல் ஆணை​யத்​துக்கு உரிமை உள்​ளது. ஆனால், சட்​டத்​தில் இல்​லாத சிறப்பு வாக்​காளர் பட்​டியல் திருத்​தத்தை தேர்​தல்...
பேச்சு​வார்த்​தை​யில் தீர்வு கிடைக்​காத நிலை​யில் 10-வது நாளாக நேற்​றும் ரிப்​பன் மாளிகை முன்பு தூய்​மைப் பணியாளர்​கள் போராட்டத்தில் ஈடு​பட்​டனர். சென்னை மாநக​ராட்​சி​யில் ராயபுரம், திரு.​வி.க.நகர் மண்​டலங்​களில் தூய்​மைப் பணி​களை தனி​யாருக்கு விட்​டதை கண்​டித்​தும், பணி நிரந்​தரம் கோரி​யும், ஏற்​கெனவே என்​யூஎல்​எம் திட்​டம் மூலம் வழங்கப்பட்ட தூய்​மைப் பணியை தொடர வலி​யுறுத்​தி​யும் தூய்​மைப் பணியாளர்​கள் ரிப்​பன் மாளிகை முன்​பு, இரவு, பகலாக அங்​கேயே தங்​கி, நேற்​றும் 10வது நாளாக போராட்​டத்தை தொடர்ந்​தனர். இது​வரை...
“தேர்தல் ஆணையத்தை மோசடி இயந்திரமாக பாஜக மாற்றிவிட்டது.” என்று சாடியுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். மேலும், வாக்குத் திருட்டுக்கு எதிராக ராகுல் காந்தி முன்னெடுக்கும் போராட்டுத்துக்கு திமுக தோளோடு தோள் கொடுக்கும் என்றும் உறுதியளித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த பதிவில், “தேர்தல் ஆணையத்தை மோசடி இயந்திரமாக பாஜக மாற்றிவிட்டது. பெங்களூரு மஹாதேவபுரா தொகுதியில் நடந்தது ஏதோ நிர்வாகத் தவறு அல்ல. அது, வாக்கு...