மேற்குவங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ ஹுமாயூன் கபிர் முர்சிதாபாத் மாவட்டத்தில் பாபர் மசூதி போன்ற கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டினார். இதையடுத்து அவர் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்நிலையில் அவர் ஜனதா உன்னயன் என்ற பெயரில் புதிய கட்சியை நேற்று தொடங்கினார். இதுகுறித்து பெலதங்காவில் அவர் கூறும்போது, ‘‘எனது கட்சி சார்பில் 8 வேட்பாளர்கள் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தலில் நிறுத்தப்படுவர். நான் ரெஜிநகர் மற்றும் பெலதங்கா...
“இந்திய அரசமைப்பை முழுமையாக அப்புறப்படுத்த பாஜக முயற்சி” – பெர்லினில் ராகுல் காந்தி பேச்சு!
admin - 0
ஜெர்மனி சென்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அதன் தலைநகர் பெர்லினில் உள்ள ஹெர்டி பள்ளியில் பேசுகையில், பாஜக இந்திய அரசமைப்பை முழுமையாக அப்புறப்படுத்த முயற்சிப்பதாகக் கூறியது சர்ச்சையாகியுள்ளது.
பெர்லின் நகரின் ஹெர்டி பள்ளியில், மாணவர்கள் மத்தியில் சுமார் 1 மணி நேரம் ராகுல் காந்தி பேசிய வீடியோவை காங்கிரஸ் கட்சி அதன் அதிகாரபூர்வ சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளது.
அந்த வீடியோவில் ராகுல் காந்தி பேசியதாவது: இந்தியாவின் மிகப்பெரிய மற்றும்...
வங்கதேசத்தில் இந்து இளைஞரான தீபு சந்திர தாஸ் அடித்துக் கொல்லப்பட்டதைக் கண்டித்து, விஷ்வ இந்து பரிஷத் (விஹெச்பி) அமைப்பினர் இன்று டெல்லியில் உள்ள வங்கதேச தூதரகத்துக்கு முன்பு நடத்திய போராட்டத்தில் ஏற்பட்ட மோதலில், காவல் துறையினருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டு தடுப்புகளை உடைத்தனர்.
வங்கதேசத்தில் இந்து இளைஞர் கொல்லப்பட்டதற்கு அந்நாட்டு அரசு பொறுப்பேற்க வேண்டும் எனவும், வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு நீதி மற்றும் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, டெல்லியில் உள்ள...
நாளை (டிசம்பர் 24) பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறவிருந்த விஜய் ஹசாரே கோப்பை போட்டிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக பெங்களூரு நகர காவல் ஆணையர் சீமந்த் குமார் சிங் தெரிவித்தார்.
பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் கடந்த ஜூன் 4-ம் தேதி நடைபெற்ற ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் இறந்தனர். இதன் பின்னர் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் போட்டிகள் நடத்த தடைவிதிக்கப்பட்டது.
இந்நிலையில்,...
கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வு முடிவுகள் தொடர்பான அறிக்கையை மத்திய அரசு விரைவில் வெளியிட வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி. திருச்சி சிவா வலியுறுத்தினார்.
மாநிலங்களவையில் நேற்று பூஜ்யநேரத்தின்போது திருச்சி சிவா பேசியதாவது: தமிழ்நாட்டின் மதுரையில் உள்ள கீழடி பகுதியில் தொல்பொருள் ஆராய்ச்சியை இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2013-14-ம் ஆண்டு முதல் இந்த ஆய்வுகள் தொல்பொருள் ஆய்வாளர் கே.அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையில் நடத்தப்பட்டு வந்தன.
ஆய்வு தொடங்கிய...
எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில் புதிய ஊரக வேலை உறுதி மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறியது. இதையடுத்து அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
புதிய ஊரக வேலை உறுதி திட்ட (விபி-ஜி ராம் ஜி) மசோதாவை மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மக்களவையில் கடந்த செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார். 20 ஆண்டுகள் பழமையான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு மாற்றாக...
புகழ்பெற்ற இந்திய சிற்பியும் பத்ம பூஷண் விருது பெற்றவருமான ராம் வி. சுதார் (100) காலமானார்.
குஜராத்தின் கெவாடியாவில் மிக உயரமான சர்தார் வல்லபபாய் படேலின் சிலையை வடிவமைத்தவர்தான் ராம் சுதார். வயது முதிர்வு காரணமாக உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் உள்ள தனது மகனின் இல்லத்தில் ஓய்வெடுத்து வந்த அவர் நேற்று காலமானதாக அவரது குடும்பத்தார் தெரிவித்தனர்.
மகாராஷ்டிராவின் கோண்டூர் கிராமத்தில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த ராம் சுதார் தனது...
காங்கிரஸ் கட்சியில் முக்கிய முடிவுகள் எடுக்கும் உயர் அதிகார அமைப்பான செயற்குழுவின் கூட்டம் டிசம்பர் 27-ம் தேதி நடைபெற உள்ளது.
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு பதிலாக புதிய சட்டத்தை கொண்டுவரும் அரசின் நடவடிக்கை மற்றும் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
பிஹார் தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கு பிறகு நடைபெறும் கட்சியின் முதல் செயற்குழு கூட்டம் இதுவாகும். மேலும் தமிழ்நாடு, புதுச்சேரி,...
ரூ.50,000 கடனை அடைக்க முடியாததால் விவசாயியை கம்போடியா அழைத்துச் சென்று சிறுநீரகத்தை எடுத்த கும்பல்!
admin - 0
மகாராஷ்டிர மாநிலம் சந்திரபூரைச் சேர்ந்த விவசாயி ரோஷன் குடே(29). இவருக்கு சுமார் 4 ஏக்கர் நிலம் உள்ளது. விவசாயத்தில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதால், பால் பண்ணை வைக்க மாடுகளை வாங்கியுள்ளார்.
இதற்காக, உள்ளூர் கந்து வட்டிக்காரர்களிடம் கடந்த 2021-ம் தேதி ரூ.50,000 கடன் வாங்கியுள்ளார். அவர்களுக்கு வட்டியாக ரூ.7.5 லட்சம் வரை கொடுத்து வந்துள்ளார். எனினும், கடன் முடியவில்லை என கந்து வட்டிக்காரர்கள் மிரட்டியுள்ளனர். மேலும், ஒரு சிறுநீரகத்தை விற்று...
நாட்டில் இலக்கியத்துக்கான உயரிய சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிப்பு திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனால் எழுத்தாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்தியாவில் 24 மொழிகளில் சிறந்த கவிதை, நாவல், சிறுகதை, இலக்கிய ஆய்வுகளுக்கு சாகித்ய அகாடமி விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், 2025ம் ஆண்டு விருதுகளுக்கான எழுத்தாளர்களின் பட்டியலை தேர்வுக் குழுக்கள் பரிந்துரை செய்தன. அதன் பின்னர் சாகித்ய அகாடமி தேசிய நிர்வாகக் குழுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் 24 மொழிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட...
