மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் 2025-ம் ஆண்டுக்கான சுற்றுலா கண்காட்சியை ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா நேற்று தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: 2025-ம் ஆண்டு எங்களுக்கு எளிதான ஆண்டு அல்ல. இந்த ஆண்டை பஹல்காம் தாக்குதலுக்கு முன்பு மற்றும் பின்பு என 2 பகுதிகளாகப் பிரிக்கலாம். பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு ஜம்மு-காஷ்மீரில் தற்போது சுற்றுலா மீண்டும் எழுச்சி பெற்று வருகிறது. மேற்கு வங்க மக்கள் ஜம்மு...
மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து நேற்று நாடு முழுவதும் பொது வேலைநிறுத்தம் நடைபெற்றன.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள தொழிலாளர் சீர்திருத்தங்கள் மற்றும் பொருளாதார கொள்கைகளுக்கு தொழிலாளர் அமைப்புகளிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மத்திய அரசின் நடவடிக்கைகள் தொழிலாளர்களின் உரிமைகளை பறிப்பதை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டி வருகின்றன.
காலியாக உள்ள அரசு பணியிடங்களை உடனடியாக நிரப்புதல், 100 நாள் வேலைதிட்டத்தின் கீழ்...
மகாராஷ்டிர மாநிலம் புல்தானா தொகுதி சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே அணி) எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட். இவர் மும்பை சர்ச்கேட்டில் உள்ள எம்எல்ஏ விடுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, கேன்டீனில் உணவு ஆர்டர் செய்துள்ளார். இதில் அவருக்கு அறையில் கொண்டுவந்து தரப்பட்ட உணவு கெட்டுப்போய் இருந்ததாக தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த கெய்க்வாட், கேன்டீன் சென்று ஊழியர் ஒருவரை சரமாரியாக தாக்கினார். கேன்டீன் ஊழியரை கெய்க்வாட் தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி...
நிபந்தனைகளை மீறி ஆயிரக்கணக்கில் குவிந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸார்: சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ஸ்தம்பிப்பு
admin - 0
மாம்பழ விவசாயிகளிடம் குறைகளை கேட்க நேற்று சித்தூர் மாவட்டம் வந்த முன்னாள் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்திக்க போலீஸ் நிபந்தனைகளை மீறி ஆயிரக்கணக்கான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் குவிந்ததால், சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
இந்த ஆண்டு மா விளைச்சல் அதிகமானதால், மாங்காய் மண்டிகளில் மாங்காய்களை மிக குறைந்த விலைக்கு விவசாயிகள் விற்க நேரிட்டது. கிலோவுக்கு ரூ.4 மானியம் கொடுப்பதாக ஆந்திர அரசு அறிவித்தும்...
அமெரிக்காவில் ‘பிரேக்கிங் பேட்' என்ற தொலைக்காட்சி தொடர் கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பானது. அதில், ஆசிரியர்களாக பணிபுரிந்தவர்கள் போதை மருந்து தயாரிக்கும் காட்சிகள் இடம்பெற்றன. இதே பாணியில் ராஜஸ்தான் மாநிலம் கங்கா சாகர் மாவட்டம் முக்லவா நகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர் மனோஜ் பார்கே (25), போட்டித் தேர்வு பயிற்சி மையத்தின் இயற்பியல் ஆசிரியர் இந்திரஜீத் விஷ்னோய் ஆகிய இருவரும் போதை மருந்து தயாரித்துள்ளனர்.
ஒரு...
ஹைதராபாத்தில் கலப்பட கள் குடித்ததில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஹைதராபாத் கூகட்பல்லியில் நேற்று அதிகாலை கலப்பட கள் குடித்த 19 பேர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்தனர்.
இவர்களில் சிலர் தனியார் மருத்துவமனைக்கும், சிலர் செகந்திராபாத் காந்தி அரசு மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 12 பேர் தொடர்ந்து...
உத்தர பிரதேசத்தில் முதன்முறையாக மதுபானத் தொழில் முதலீட்டு மாநாடு: ரூ.5,000 கோடி ஒப்பந்தங்களை எதிர்பார்க்கும் அரசு
admin - 0
உத்தரபிரதேசத்தில் முதன்முறையாக மதுபானத் தொழிலுக்கான மெகா முதலீட்டு மாநாடு இன்று (ஜுலை 10) நடைபெற உள்ளது. இதில், ரூ.5,000 கோடி மதிப்பிலான முதலீட்டு திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உ.பி.யில் பல்வேறு தொழில்களை ஊக்குவிக்க முதலீட்டு மாநாடுகள் நடைபெற்று வருகின்றன. இதில் முதன்முறையாக மது உற்பத்தியை ஊக்குவிக்கும் முதலீட்டு மாநாடும் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை லக்னோவின் இந்திரா காந்தி பிரதிஷ்டானில் மாநில கலால் துறை நடத்துகிறது....
சத்தீஸ்கரின் தண்டேவாடாவில் 2 பெண்கள் உள்ளிட்ட 12 நக்சலைட்கள், போலீஸ், சிஆர்பிஎப் அதிகாரிகள் முன்னிலையில் சரணடைந்துள்ளனர். இவர்களில் ரூ.28.50 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்ட 9 பேரும் அடங்குவர். அரசின் ‘உங்கள் வீடு, கிராமத்துக்கு திரும்பு' பிரச்சாரத்தின் கீழ் மாவட்டத்தில் இதுவரை 1,005 நக்சலைட்கள் சரண் அடைந்துள்ளனர்.
இந்த சாதனை அரசின் தொலைநோக்கு கொள்கைகள், பாதுகாப்புப் படைகளின் தொடர் நடவடிக்கை மற்றும் உள்ளூர் சமூகங்களின் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. மாவோயிஸ்ட்களின் வெற்று சித்தாந்தத்தால்...
இறக்குமதி-ஏற்றுமதி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு 25 ஆண்டுகள் அமெரிக்காவில் தலைமறைவாக இருந்த பொருளாதார குற்றவாளி மோனிகா கபூர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். இதற்கான அனுமதியை நியூயார்க் நகர நீதிமன்றம் வழங்கியது. இதையடுத்து, அவரை சிபிஐ காவலில் எடுக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
‘‘மோனிகா ஓவர்சீஸ்’’ என்ற நிறுவனத்தின் உரிமையாளர் மோனிகா கபூர். இவர் தனது இரண்டு சகோதரர்களான ராஜன் கன்னா மற்றும் ராஜீவ் கன்னாவுடன் சேர்ந்து நகை வணிகத்திற்கான வங்கி...
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன் மாவட்டத்தில் கடந்த 40 நாட்களில் 45 வயதுக்குட்பட்ட 23 பேர் மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தனர். இதேபோல கதக் மாவட்டத்திலும் 20-க்கும் மேற்பட்டோர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்தனர்.
இதுகுறித்து ஆய்வு செய்வதற்காக கர்நாடக அரசு 10 மருத்துவர்கள் அடங்கிய நிபுணர் குழுவை அமைத்தது. மருத்துவ நிபுணர் குழு சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவிடம் ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது.
அதனை பெற்றுக்கொண்ட பின்னர், தினேஷ் குண்டு ராவ் கூறியதாவது:...










