ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான ஊக செய்திகளை ஊடகங்கள் தவிர்க்க மத்திய அமைச்சர் வேண்டுகோள்
admin - 0
ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான ஊக செய்திகள் வெளியிடுவதை மேற்கத்திய ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு கிஞ்சாரபு நேற்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: ஏர் இந்தியா விமான விபத்து குறித்த இறுதி அறிக்கைக்காக அரசு காத்திருக்கிறது. அதுவரை மேற்கத்திய ஊடகங்கள் ஊகங்களை பயன்படுத்தி செய்திகள் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். இந்தியாவில் கருப்புப் பெட்டித்...
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பிறந்த கிராமம் சுற்றுலாத் தலமாகிறது. இதற்காக, உத்தர பிரதேச அரசு ரூ.27 கோடி நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமரான, பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாயின் 101-வது பிறந்த நாள் வரும் டிசம்பர் 24-ல் கொண்டாடப்பட உள்ளது. இதை விமரிசையாகக் கொண்டாட மத்திய அரசும் பாஜகவும் தயாராகி வருகிறது.
இச்சூழலில், ஆக்ராவில் உள்ள வாஜ்பாயின் மூதாதையர் கிராமமான படேஷ்வரை ஒரு முக்கிய...
சமூக விரோதிகள் காவி உடையில் ஊடுருவி கன்வர் யாத்ரீகர்களின் புகழை கெடுக்க முயற்சி: உ.பி. முதல்வர் குற்றச்சாட்டு
admin - 0
சமூக விரோதிகள் காவி உடையில் ஊடுருவி கன்வர் யாத்ரீகர்களின் புகழை கெடுக்க முயற்சிகள் நடைபெறுகின்றன என உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றம் சாட்டியுள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தில் கன்வர் யாத்திரை பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மிர்சாபூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் வாங்குவதில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த வீரர் ஒருவருக்கும், கன்வர் யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் சிஆர்பிஎப் வீரரை...
மாவட்ட நீதித் துறையின் நீதிமன்ற செயல்பாடுகளில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழிநுட்பத்தின் பொறுப்பான மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பயன்பாடு தொடர்பான கொள்கையை கேரள உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.
அதில், ஏஐ தொழில்நுட்பத்தை கண்மூடித்தனமாக பயன்படுத்துவது தனியுரிமை உரிமைகளை மீறுதல், தரவு பாதுகாப்பு அபாயங்கள், நீதித் துறை முடிவெடுப்பதில் நம்பிக்கை இழப்பு உள்ளிட்ட எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் மாவட்ட நீதித் துறை அதன் பயன்பாட்டில் தீவிர முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
நீதிமன்ற உத்தரவுகளை மொழிபெயர்க்க...
லவ் ஜிகாத் நாட்டின் ஒற்றுமைக்கு ஆபத்து என கூறிய யமுனா நகர் நீதிமன்றம், இதற்கு வற்புறுத்திய நபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. ஹரியானா மாநிலத்தில் உள்ள யமுனா நகரைச் சேர்ந்த 14 வயது சிறுமி காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புகார் அளித்தார்.
அதில் பள்ளிக்கு செல்லும் போது முஸ்லிம் இளைஞர் ஒருவர் பின்தொடர்ந்து வருவதாகவும், அவருடன் நட்பாக பழகும்படி ஷாபாஜ் என்பவர்...
ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவரும் பிஹார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ், கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை ரயில்வே அமைச்சராக பதவி வகித்தார். அப்போது மேற்கு மத்திய ரயில்வேயில் குரூப் டி பிரிவில் வேலை வழங்குவதற்கு பிஹாரில் நிலத்தை லஞ்சமாக பெற்றதாக லாலு மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதற்கிடையில், லாலுவுக்கு எதிராக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்நிலையில், விசாரணை நீதிமன்றம் வழக்கை விசாரிக்க...
கேரளாவில் காரிமனூர் அருகே உள்ள வாடகை வீட்டில் தனது மைனர் மகளை மூன்று ஆண்டுகளாக தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்துவந்துள்ளார் தந்தை. இந்தநிலையில், அந்த சிறுமி 8 வயதாக இருந்தபோது வயிற்றுவலியால் அவதிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது தனது தாயிடம் நடந்த சம்பவங்களை தெரிவித்துள்ளார்.
சிறுமியின் வாக்குமூலத்தின்படி, அவள் 1-ம் வகுப்பு படிக்கும் காலத்திலிருந்தே தந்தை தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து தந்தை மீது போக்சோ சட்டத்தின் கீழ்...
கட்டுக்கட்டாக பணம் மீட்கப்பட்ட விவகாரத்தில் பதவி நீக்க நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மா மனு தாக்கல் செய்துள்ளார். டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் யஷ்வந்த் வர்மா.
இவரது வீட்டில் கடந்த மார்ச் 14-ம் தேதி நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டது. தீயணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டபோது வீட்டின் ஓர் அறையில் பாதி எரிந்த நிலையில் மூட்டை மூட்டையாக ரூ.500 நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இது நாடு...
மகாராஷ்டிர மாநிலம் சாங்லி மாவட்டத்தில் உள்ளது இஸ்லாம்பூர். இந்தப் பகுதியின் பெயரை மாற்ற வேண்டும் என்று இந்துத்துவா அமைப்பான ஷிவ் பிரதிஸ்டான் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இந்த கோரிக்கை கடந்த 1986-ம் ஆண்டு முதல் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மகாராஷ்டிர சட்டப்பேரவை மழைக்கால கூட்டத் தொடரின் கடைசிநாள் அலுவல்கள் நேற்று நடைபெற்றன. அப்போது, உணவு மற்றும் சிவில் சப்ளைஸ் துறை அமைச்சர் சாகன் புஜ்பால் பேசும்போது, ‘‘சாங்லி மாவட்டத்தில் உள்ள...
சத்தீஸ்கர் அரசு நடத்தும் மதுக் கடைகளில் ரூ.3,200 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்று இருக்கிறது. இந்த ஊழல் வழக்கில் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேலின் மகன் சைதன்யா பாகேல் நேற்று கைது செய்யப்பட்டார்.
சத்தீஸ்கர் முழுவதும் 750-க்கும் மேற்பட்ட மதுக்கடைகளை மாநில அரசு நடத்தி வருகிறது. இதற்காக தனியார் நிறுவனங்களிடம் இருந்து மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின்போது மதுபானங்களை கொள்முதல் செய்ததில்...










