ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: ரயில் கட்டணத்தை தீர்மானிக்கும்போது, சேவைக்கான செலவு, சேவையின் மதிப்பு, வழங்கப்படும் சேவையின் வகை மற்றும் வசதிகள், மக்களின் வாங்கும் திறன் ஆகிய அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்படுகின்றன.
கடந்த 2019ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட வந்தே பாரத் ரயில் சேவை 82 வழித் தடங்களில் 164 ரயில்கள் இயக்கப்படுகின்றன. 300 முதல் 400 கிலோ...
கேரள பொதுக் கல்வித் துறை அமைச்சர் வி.சிவன்குட்டி திருவனந்தபுரத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ”உலகளவில் செயற்கை நுண்ணறிவு மற்றும் பிறதுறைகள் பெரும் மாற்றங்களுக்கு உள்ளாகி வரும் நேரத்தில், 'டிஜிட்டல் அடிக் ஷன்' பிரச்சினைக்கு தீவிர ஆய்வு மற்றும் தேவைப்பட்டால், சட்டமன்ற நடவடிக்கைகள் தேவையா என்பதை ஆராய வேண்டியுள்ளது.
கல்வித் துறைக்கு தொடர்ந்து வரும் புகார்கள் மற்றும் சில சம்பவங்கள், இந்தப் பிரச்சினையை தீவிரமாகக் கையாள வேண்டிய நேரம் வந்துவிட்டதாக காட்டுகின்றன....
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை காங்கிரஸ் எம்.பி.க்கள் திட்டியதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறினார்.
மக்களவையில் கடந்த 2ம் தேதி, முன்னாள் ராணுவத் தளபதி எம்.எம்.நரவனேவின் வெளியிடப்படாத நூலின் பகுதிகளை அடிப்படையாக கொண்ட ஒரு கட்டுரை பற்றி பேச காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார். அப்போது முதல், மக்களவையில் அமளி ஏற்பட்டு வருகிறது.
எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக பிப்ரவரி 4ம் தேதி, குடியரசுத...
இந்திய விமானப்படை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை வாயு சக்தி என்ற பெயரில் பிரம்மாண்ட போர் பயிற்சியை பொக்ரானில் நிகழ்த்துவது வழக்கம். இந்தாண்டு வாயு சக்தி போர் பயிற்சி வரும் 27ம் தேதி நடைபெறவுள்ளது.
இது குறித்து விமானப்படை துணைத் தளபதி ஏர் மார்ஷல் நாகேஷ் கபூர் கூறியதாவது: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, விமானப்படை வெற்றிகரமாக பங்காற்றியது குறித்து இந்த பயிற்சியின்போது விளக்கப்படும். இந்த போர் பயிற்சி பாகிஸ்தான் எல்லைக்கு...
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது மக்களவையில் பிரதமர் மோடி ஆற்ற வேண்டிய உரை ரத்து செய்யப்பட்டது.
இது குறித்து விளக்கம் அளித்த சபாநாயகர் ஓம் பிர்லா, "காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் சிலர் பிரதமர் இருக்கை அருகே நின்று தகாத செயல்களில் ஈடுபடக் கூடும் என தகவல் கிடைத்ததால், அவைக்கு வரவேண்டாம் என பிரதமரை கேட்டுக்கொண்டேன்" என்றார்.
இதுகுறித்து சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு, ஜோதி மணி உள்ளிட்ட காங்கிரஸ்...
மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தில் நேற்று ஏற்பட்ட வன்முறையில் வீடுகளும் அரசு குடியிருப்புகளும் தீவைத்து எரிக்கப்பட்டன. வன்முறை காரணமாக பலர் அப்பகுதியை விட்டு வெளியேறினர்.
இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் ஓராண்டு கால குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பிறகு முதல்வர் யும்னம் கெம்சந்த் சிங் தலைமையில் புதிய அரசு கடந்த 4-ம் தேதி பதவியேற்றது. எனினும் மாநிலத்தில் மறுநாளே வன்முறை வெடித்தது. குகி சமூகத்தினர் அதிகம் வசிக்கும் சுராசந்த்பூர் மாவட்டம் முழுவதும்...
மாணவர்கள் தங்கள் ஆற்றலை வளர்க்க ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி அறிவுரை
admin - 0
ஏஐ போன்ற நவீன தொழில் நுட்பங்களை கண்டு அஞ்சாமல் மாணவர்கள் அவற்றை தங்களின் அறிவாற்றலை பெருக்குவதற்காக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கினார்.
குஜராத்தின் தேவமொக்ரா, தமிழகத்தின் கோயம்புத்தூர், சத்தீஸ்கரின் ராய்ப்பூர் மற்றும் அசாமின் குவாஹாட்டி உள்ளிட்ட நகரங்களில் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது: தலைமைப் பண்பு என்பது தேர்தலில் போட்டியிடுவதோ அல்லது அரசியல் கட்சி தொடங்குவதோ அல்ல;...
தூத்துக்குடி திமுக எம்.பி.கனிமொழி மக்களவையில் எழுப்பிய ஒரு கேள்விக்கு மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பதில் அளித்துள்ளார்.
அதில், “2021- 2026ம் ஆண்டு காலகட்டத்தில் தொல்லியல் அகழாய்வுக்காக மத்திய அரசின் ஒப்புதலை பெறுவதற்காக தமிழ்நாடு தொல்லியல் துறை மொத்தம் 45 பரிந்துரைகளை அனுப்பியது. 2021ல் 12, 2022ல் 8, 2023ல் 3, 2024ல் 10, 2025ல் 12 என 45 பரிந்துரைகள் வந்தன. இதில் 2025ல் வந்த 12...
டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியால் பாதித்தோருக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
admin - 0
டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்ய பாக்சி, அன்ஜாரியா அமர்வு முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் வெங்கடரமணி ஆஜரானார். அவர் கூறும்போது, “டிஜிட்டல் அரெஸ்ட் மோசடிகளை தடுக்க ரிசர்வ் வங்கி வரைவு கொள்கையை தயாரித்து உள்ளது. இதுதொடர்பாக தொடர்ந்து ஆலோசனை நடத்தப்பட்டு...
கர்நாடக மாநிலத்தில் பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த பைலட் உட்பட இரண்டு பேர் காயத்துடன் உயிர் தப்பினர்.
கர்நாடகாவின் கலபுர்கி பகுதியில் இருந்து தனியார் பயிற்சி விமானம் ஒன்று பெலகாவி நோக்கி நேற்று புறப்பட்டது. நடுவானில் அந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் பயிற்சி விமானத்தை விஜயப்புரா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வயலில் தரை இறக்க பைலட் முயன்றார்.
அந்த விமானம் தரையில் மோதி...
