உ.பி.யில் உயிருடன் இருந்தவர் பெயரில் உடற்கூறாய்வு: மருத்துவர் உள்ளிட்ட மூவர் பணியிடை நீக்கம்
admin - 0
உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் ஜிஎஸ்விஎம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிருடன் இருந்த ஒருவர் பெயரில் உடற்கூராய்வு அறிக்கை அனுப்பிய சம்பவத்தில் மருத்துவர் உள்ளிட்ட மூவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கான்பூரில் பிரபல ஜிஎஸ்விஎம் மருத்துவக் கல்லூரியில் ஹாலெட் மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு ஓர் அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடைபெற்றுள்ளது. வார்டு எண் 12-ல் உள்ள படுக்கை எண் 42-ல் ஒரு அடையாளம் தெரியாத நபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு...
வான் தகவல் தொடர்பு கருவிகளை தயாரிக்க இந்திய விமானப்படை, சென்னை ஐஐடியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
விமானப்படை பயன்பாட்டுக்காக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் வான் தகவல் தொடர்பு கருவிகளை தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக விமானப்படையின் மென்பொருள் மேம்பாட்டு மையம் (எஸ்டிஐ) ஐஐடி சென்னையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் தற்சார்பு நிலையை ஏற்படுத்துவதிலும், தற்சார்பு இந்தியா தொலைநோக்கை நனவாக்குவதிலும் இந்த ஒப்பந்தம் மிக முக்கியமான நடவடிக்கை. இந்த ஒப்பந்தத்தில் விமானப்படையின்...
கடந்த சில வாரங்களாக டெல்லி, உத்தர பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. பனிமூட்டம் தொடர்பாக டெல்லி மற்றும் உத்தர பிரதேசத்துக்கு நேற்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த சூழலில் வடஇந்தியா முழுவதும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று காலை நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக 128 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. 200-க்கும் மேற்பட்ட விமானங்கள்...
2026-27-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா விதித்துள்ள 50% வரியால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை இந்த பட்ஜெட் எவ்வாறு சரிசெய்யப் போகிறது என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இந்நிலையில் பட்ஜெட் குறித்து பொருளாதார அறிஞர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாட உள்ளதாக மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நிதி ஆயோக் துணைத்...
கேரள மாநிலத்தில் பாஜக வளர்ச்சிக்கு காங்கிரஸ் கட்சி வழிவகுப்பதாக முதல்வர் பினராயி விஜயன் நேற்று குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து பினராயி விஜயன் பேஸ்புக் பதிவில் கூறியுள்ளதாவது: மட்டத்தூரில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலில் 8 காங்கிரஸ் கவுன்சிலர்கள் அக்கட்சியிலிருந்து விலகி, தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஒரு சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவளிக்க பாஜகவுடன் கைகோத்தனர். இதன்மூலம், காங்கிரஸார் பாஜகவில் சேருவதற்கு வாய்ப்புக்காக காத்திருப்பதை மட்டத்தூர் சம்பவம் உறுதிப்படுத்தியுள்ளது. பாஜக அவர்களை முழுவதுமாக விழுங்கிவிட்டது. இத்தகைய...
ஆந்திர மாநிலம் அனகாபல்லி மாவட்டத்தில் இன்று அதிகாலை டாடாநகர் - எர்ணாகுளம் அதிவிரைவு பயணிகள் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அந்த ரயிலின் இரண்டு பேட்டிகள் தீயில் எரிந்து சேதமடைந்தன. ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
அனகாபல்லி மாவட்டத்தில் உள்ள எலமஞ்சிலி ரயில் நிலையம் அருகே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வண்டி எண் 18189-ன் பி-1 மற்றும் எம்-2 ஆகிய இரண்டு பெட்டிகளில் தீ பரவியது....
டெல்லியின் துவாரகா பகுதியில் விசா இல்லாமல் வெளிநாட்டினர் சிலர் தங்கியிருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
கடந்த 24-ம் தேதி அங்கு போலீஸார் சோதனை நடத்திய போது, நைஜீரியாவைச் சேர்ந்த 7 பேர் விசா காலம் முடிந்த பின்னரும் தங்கி இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவர்களை வெளிநாட்டினர் மண்டல பதிவு அலுவலகத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர். அவர்களை நாடு கடத்துமாறு பதிவு அலுவலக அதிகாரி உத்தரவிட்டார். இதையடுத்து, நாடுகடத்தும் நடைமுறைகளை முடிக்கும் வரையில்...
பிஹார் மாநிலத்தின் ஜாமுயி மாவட்டத்தில் லகாபான் மற்றும் சிமுல்தாலா ரயில் நிலையங்களுக்கு இடையே சரக்கு ரயிலின் 8 பெட்டிகள் நேற்று முன்தினம் இரவு 11.25 மணிக்கு தடம்புரண்டன.
இதனால் 20-க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. தடம்புரண்ட பெட்டிகளை அகற்றும் பணி, போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.
இந்த விபத்து காரணமாக இந்த வழித்தடத்தில் செல்லும் பல எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. பல ரயில்கள் தன்பாத் - கயா வழித்தடத்தில்...
ஆர்எஸ்எஸ் அமைப்பை பாராட்டிய விவகாரம்: காங். மூத்த தலைவர் திக் விஜய் சிங்குக்கு சசி தரூர் ஆதரவு
admin - 0
ஆர்எஸ்எஸ் அமைப்பை பாராட்டிய விவகாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங்குக்கு சசி தரூர் எம்.பி. ஆதரவு தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் சமூக வலைதளத்தில் பிரதமர் மோடியின் பழைய புகைப்படத்தை பதிவிட்டு ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஒழுக்கம், கட்டுப்பாட்டை புகழ்ந்தார். அதோடு காங்கிரஸின் கட்டமைப்புகளை வலுப்படுத்த ராகுல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த சூழலில் காங்கிரஸ் கட்சியின் 140-வது...
“ஸ்டாலினிடம் ஆங்கிலம், உருது மொழியில் பேச கோருவீர்களா?” – நிருபர்களிடம் மெகபூபா முப்தி கேள்வி
admin - 0
காஷ்மீர் முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயக கட்சியின் (பிடிபி) தலைவருமான மெகபூபா முப்தி, ஸ்ரீநகரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் காஷ்மீரி மொழியில் பேசினார். சில நிருபர்கள் குறுக்கிட்டு, உருது மொழியில் பேசுமாறு வற்புறுத்தினர்.
அப்போது மெகபூபா முப்தி கூறும்போது, “காஷ்மீரி மொழிக்கு மதிப்பு அளியுங்கள். நமது மொழியைக் காப்பாற்ற வேண்டியது நமது கடமை. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஆங்கிலம் அல்லது உருது மொழியில் பேச கோருவீர்களா?”...
