நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனா ரணாவத், பிரதமர் நரேந்திர மோடியை விட் பெரிய பெண்ணியவாதி வேறொருவர் இருக்க முடியாது என்று பாராட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இது குறித்துப் பேசிய அவர், “இன்று, பாரதத்தின் மகள்கள் பிரதமர் மோடியை விடப் பெரிய பெண்ணியவாதி யாரும் இல்லை என்று நம்புகிறார்கள். பெண்ணியத்தின் ஒரே அடையாளமாக அவரே திகழ்கிறார். இந்த நாட்டின் மகள்கள் அவருக்கு என்றென்றும்...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியின் போது, கலப்பட நெய் வாங்கப்பட்டதாக தற்போதைய ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு அறிவித்ததை தொடர்ந்து இந்த விவகாரம் பக்தர்களிடையே பேரதிர்வை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் திருப்பதி மற்றும் திருமலையில் ஆய்வு நடத்தி சிலரை கைதும் செய்தனர். இந்நிலையில் சமீபத்தில் ஆந்திராவில் நடைபெற்ற 7ம் வகுப்பு சமூக அறிவியல்...
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், பிரதமர் நரேந்திர மோடியுடன் நேற்று போனில் பேசினார். ஈரான் போர் நிலவரம் கவலை அளிப்பதாக தெரிவித்த தலைவர்கள் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து நடைபெற வேண்டும் என வலியுறுத்தினர்.
ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் எரிபொருள் கப்பல் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. அமெரிக்கா - ஈரான் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்துள்ளது. ஈரானுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தும் முயற்சிகள் நடைபெறுகின்றன.
இந்நிலையில்...
நாட்டில் பயணிகள் ரயில் போக்குவரத்து தொடங்கி 173-வது ஆண்டு நிறைவு: அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்
admin - 0
பயணிகள் ரயில் போக்குவரத்து தொடங்கி 173-வது ஆண்டு நிறைவு பெற்றுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
நாட்டின் முதலாவது பயணிகள் ரயில் போக்குவரத்து 1853-ம் ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி மகாராஷ்டிர மாநிலம் போரி பந்தர் (மும்பை) மற்றும் தானே இடையே தொடங்கப்பட்டது. இந்த போக்குவரத்து தொடங்கப்பட்டு நேற்றுடன் 173-வது ஆண்டு நிறைவடைந்துள்ளது.
இதுதொடர்பாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் தானே...
பெங்களூரு மாநகர காவல் ஆணையர் சீமந்த் குமார் சிங் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீஸார் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருடன் இணைந்து பாகலூர், பானசவாடி உள்ளிட்ட 8 காவல் நிலைய சரகத்துக்குட்பட்ட இடங்களில் போதைப் பொருள் கடத்தலைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் மொத்தமாக 5.91 கிலோ எம்டிஎம்ஏ, 21.82 கிலோ ஹைட்ரோ கஞ்சா, 1.51கிலோ கோக்கைன் உள்ளிட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது...
வங்காள புத்தாண்டு ‘பொய்லா பைசாக்’-ஐ முன்னிட்டு மேற்கு வங்க மக்களுக்கு பிரதமர் எழுதிய வாழ்த்து கடிதத்தில் கூறியிருப்பதாவது: வங்காள புத்தாண்டை முன்னிட்டு மேற்கு வங்க மக்களுக்கு வாழ்த்துகள்.
கடந்த 15 ஆண்டுகளாக மேற்கு வங்கத்தில் குழப்பமான ஊழல் ஆட்சி நடைபெறுகிறது. மக்கள் தங்களின் அடிப்படை உரிமை, கவுரவம் மற்றும் வளமான கலாச்சார பாரம்பரியத்தை இழந்துள்ளனர். மேற்கு வங்கத்தில் தற்போது நிலவும் சூழல் பெண்களின் பாதுகாப்பு, இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு,ஏழைகளின் உரிமைகள்...
ஹரியானாவில் நிலம் வாங்கியதில் முறைகேடு நடந்தது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவரும், தொழிலதிபருமான ராபர்ட் வதேராவுக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
ஹரியானா மாநிலம் ஷிகோப்பூரில் ஓம்காரேஷ்வர் பிராப்பர்டீஸ் என்ற நிறுவனத்திடமிருந்து கடந்த 2008-ல் ராபர்ட் வதேராவுக்குச் சொந்தமான ஸ்கைலைட் ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவனம் 3.53 ஏக்கர் நிலத்தை வாங்கியது. இந்த நிலத்தை வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக ராபர்ட் வதேரா உள்ளிட்ட 9 பேர் மீது அமலாக்கத்...
பிரேன் சிங், சாம்ராட் சவுத்ரி உட்பட பிற கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து முதல்வரான 9 பேர்!
admin - 0
பிற கட்சிகளில் இருந்து பாஜகவில் இணைந்த பலரும் முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளைப் பெற்றுள்ளனர். அந்தப் பட்டியலில் பிஹார் முதல்வராகப் பதவியேற்ற சாம்ராட் சவுத்ரியும் இணைந்துள்ளார்.
சாம்ராட் சவுத்ரி முதலில் லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சியில் கடந்த 1990-ம் ஆண்டுகளில் அரசியலைத் தொடங்கினார். அப்போது முதல்வராக இருந்த ராப்ரி தேவியின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார். பின்னர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தில் 2014-ல்...
ஆந்திர மாநிலம் கும்மராவான்லபல்லியில் குவாரி தொழிலாளர்கள் குடும்பத்துடன் வசித்து வந்தனர். இவர்கள் குவாரிக்கு தேவையான டெட்டனேட்டர், அமோனியம் சல்பேட், டீசல் போன்றவற்றை வைத்திருந்தனர்.
இந்நிலையில், நேற்று வெடி விபத்து ஏற்பட்டதில் 4 பேர் அதே இடத்திலும் ஒருவர் மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். காயம் அடைந்த 20 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 12 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டம், பரத்வாடா நகரை சேர்ந்தவர் முகமது அயாஸ் என்கிற தன்வீர் (19). இவர் மீது, பாலியல் வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல் மற்றும் ஆபாச வீடியோக்களை பதிவு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக போலீஸார் கூறுகையில், “வாட்ஸ்-அப், ஸ்னாப்சாட் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் 180 சிறுமிகளை முகமது அயாஸ் காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். பிறகு அவர்களை மும்பை மற்றும் புனேவுக்கு அழைத்துச் சென்று, ஆபாச வீடியோக்களை...










