கல்யாண் டோம்பிவிலி மாநகராட்சியில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சிக்கு ராஜ் தாக்கரே தலைமையிலான நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) கட்சி ஆதரவு கொடுத்துள்ளது.
மகாராஷ்டிராவில் கடந்த 15-ம் தேதி நடைபெற்ற பல்வேறு நகராட்சிகள், மாநகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தலில் மகாயுதி கூட்டணிக் கட்சிகள் இணைந்துப் போட்டியிட்டன. அதேபோல் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, எம்என்எஸ் கட்சிகள் இணைந்து போட்டியிட்டன.
இந்நிலையில் 122 கவுன்சிலர்கள் கொண்ட...
தடை செய்யப்பட்ட நக்லைட் இயக்கமான என்எஸ்சிஎன்(ஐஎம்) அமைப்பைச் சேர்ந்த ஒருவர், மணிப்பூர் மாநிலம் இம்பால் கிழக்குப் பகுதியில் நேற்று முன்தினம் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டார்.
மேலும் பிஆர்இபிஏகே (விசி) நக்சலைட் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் சாவோம்புங் வைரி பகுதியிலிருந்து கைது செய்யப்பட்டார். மேலும் கேசிபி (தைபான்கன்பா) நக்சலைட் அமைப்பைச் சேர்ந்த 2 பேரை பாதுகாப்புப் படையினர் கடந்த ஞாயிற்றுக் கிழமை அசாம் மாநிலத்தில் கைது செய்துள்ளனர். இவர்கள் அசாமின் துவாரகா நகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து...
இந்திய விமானப்படையின் இலகு ரக பயிற்சி விமானம் ஒன்று உத்தர பிரதேசம் பிரயாக்ராஜ் பகுதியில் நேற்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டது. அதில் 2 விமானிகள் பயணம் செய்தனர். இது பொதுவாக பயிற்சி மற்றும் கண்காணிப்பு பணிக்கு பயன்படுத்தப்படும்.
சங்கமம் பகுதியில் இந்த விமானம் நேற்று பறந்து கொண்டிருந்தபோது, அதில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து ஜார்ஜ் டவுன் பகுதியில் உள்ள கே.பி. கல்லூரி அருகே உள்ள குளத்தில் பயிற்சி...
செலவுகளை பிரதிபலிக்கும் கட்டணம் என்ற கருத்தில் மின்சார சட்டத் திருத்த மசோதா பட்ஜெட் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய மின்சாரம், வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரத் துறை அமைச்சர் மனோகர் லால் நேற்று தெரிவித்தார்.
நாட்டில் மின்சாரத்தை விநியோகிக்கும் நிறுவனங்கள் (டிஸ்காம்ஸ்) பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. மேலும், மின்சார உற்பத்தி, விநியோகம், மக்களுக்கு வழங்கப்படும் மானியம், விநியோகத்தின் போது மின்சார இழப்பு போன்ற பல காரணங்களால் டிஸ்காம்ஸ்...
கர்நாடக அரசின் பட்டுத் தொழில் கழகத்தின் சார்பில் விற்பனை செய்யப்படும் மைசூரு பட்டுப் புடவைகள் மிகவும் பாரம்பரியமானவை. புவிசார் குறியீடு பெற்ற இந்த புடவைகளுக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு நிலவுகிறது. இதனை வாங்குவதற்காக கர்நாடகாவை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களை சேர்ந்தவர்களும் குவிவதால், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் டோக்கன் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.
பெங்களூருவில் உள்ள கர்நாடக அரசின் பட்டுத் தொழில் கழகத்தின் விற்பனையகத்தில் புடவை வாங்குவதற்காக பெண்கள்,...
மத்திய அரசின் பணியாளர்களுக்கு எதிரான ஊழல் வழக்கை மாநில காவல் துறை விசாரிக்க முடியும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான் மாநில ஊழல் தடுப்பு பிரிவு பதிவு செய்த வழக்கை எதிர்த்த மத்திய அரசின் ஊழியர் நாவல் கிஷோர் மீனா தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
இந்த விவகாரத்தில் ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை...
பாஜகவின் 12-வது தேசிய தலைவராக நிதின் நபின் நேற்று பொறுப்பேற்றார். கட்சி விவகாரங்களில் அவரே தனது தலைவர் என அறிவித்து பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.
பாஜகவின் புதிய தேசிய தலைவர் பதவிக்கான தேர்தல் டெல்லியில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் கட்சியின் செயல் தலைவர் நிதின் நபின் சார்பில் மட்டும் 37 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவர் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியானது....
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தனது மக்களவை தொகுதியான ரேபரேலிக்கு நேற்று சென்றார்.
அங்கு கட்சித் தொண்டர்களிடையே அவர் கூறியதாவது: மத்திய அரசு ‘மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின்' பெயரை மாற்றியதன் மூலம் அந்தத் திட்டத்தை அவமதித்துள்ளது. மிக முக்கியமாக, விளிம்புநிலை மக்களுக்கு இத்திட்டம் வழங்கி வந்த பாதுகாப்பை அரசு திரும்பப் பெற்றுள்ளது. இது ஜனநாயகத்தின் வேர்கள் மீதான தாக்குதலாகும். இதன் மூலம் இந்த திட்டத்தை...
மகாத்மா காந்தி, சர்தார் வல்லப பாய் படேல், பிரதமர் நரேந்திர மோடி ஆகிய 3 பெரும் தலைவர்களை குஜராத் மாநிலம் நாட்டுக்கு வழங்கியிருக்கிறது என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள காந்தி ஆசிரமத்தில் ஹரிஜன் சேவை சங்கத்தில் மகாதேவ் தேசாய் நூலகம் கட்டப்பட்டு உள்ளது. இந்த நூலகத்தை குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று திறந்து வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தின் மதுரையில் விவசாயிகளின்...
பிரபல எழுத்தாளர் லீலாவதிக்கு பிரியதர்ஷினி இலக்கிய விருதை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேற்று வழங்கினார்.
கேரள காங்கிரஸ் கமிட்டியின் பிரியதர்ஷினி பதிப்பகம், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவாக பிரியதர்ஷினி இலக்கிய விருதை சமீபத்தில் உருவாக்கியது. இலக்கியத்தில் சிறந்த பங்களிப்பை அளித்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இந்நிலையில் இந்த விருதை கேரளாவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் லீலாவதிக்கு (98), கொச்சியில் நடைபெற்ற விழாவில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர்...
