குஜராத் மாநிலம் சூரத் நகரில், பூஜைப் பொருட்களுடன் தவறுதலாகக் கால்வாயில் வீசப்பட்ட ரூ.2 லட்சம் ரொக்கப் பணத்தை தீயணைப்பு வீரர்கள் துரிதமாகச் செயல்பட்டு மீட்டு கொடுத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
சூரத் நகரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் அண்மையில் தங்கள் இல்லத்தில் சிறப்புப் பூஜை நடத்தினர். பூஜை முடிந்தவுடன், வழிபாட்டிற்குப் பயன்படுத்தப்பட்ட மலர்கள் மற்றும் இதரப் பொருட்களை ஒரு பையில் சேகரித்து பீரோவில் வைத்திருந்தனர். அதே பீரோவில்...
கர்நாடகாவில் பட்டியலின உள் ஒதுக்கீட்டுக்கு கடும் எதிர்ப்பு: 56,432 பணி இடங்களை நிரப்பும் அரசாணை நிறுத்திவைப்பு
admin - 0
கர்நாடகாவில் பட்டியலில் உள்ள 101 சாதியினருக்கு உள் ஒதுக்கீடு வழங்க, எஸ்சி - ஏ (மாதிகா, அருந்ததியர் உள்ளிட்ட சாதிகள்), எஸ்சி - பி (ஹொலையா, ஆதிதிராவிடர் உள்ளிட்ட சாதிகள்), எஸ்சி - சி என 3 பிரிவுகளாக பிரித்துள்ளது.
அரசின் இந்த முடிவால் எஸ்சி- பி மற்றும் எஸ்சி- சி பிரிவில் உள்ள 70-க்கும் மேற்பட்ட சாதியினர் கல்வி, வேலை வாய்ப்பில் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதனால் அந்த...
உலகளவில் ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 2-ம் இடத்தில் இருப்பதாக ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் (சிப்ரி) ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைகளில் நிலவும் பதற்றமான சூழலே இந்தியா அதிக அளவில் ஆயுதங்களை வாங்கி குவிப்பதற்கு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது. இது குறித்து அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த 2016- 20 கால கட்டத்தை விட, 2021- 25 கால கட்டத்தில் இந்தியாவின்...
மேற்கு ஆசிய நிலவரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நேற்று அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நேற்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு நேற்று தொடங்கியது. மக்களவை நேற்று, நண்பகல் 12 மணிக்கு மீண்டும் கூடியது. இதையடுத்து மேற்காசிய நிலவரம் குறித்து வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தனது உரையை வாசிக்கத் தொடங்கினார்.
அப்போது இந்த விவகாரம் குறித்து முழு அளவில் விவாதம் நடத்த வேண்டும் என...
ஈரானின் 3 போர்க் கப்பல்களை இந்திய துறைமுகத்தில் நிறுத்த அனுமதி வழங்கப்பட்டது என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மாநிலங்களவையில் தெரிவித்தார்.
இந்தியாவில் கடற்படை கூட்டு பயிற்சியில் பங்கேற்றுவிட்டு ஈரான் திரும்பிய ஐஆர்ஐஎஸ் தேனா என்ற போர்க்கப்பலை, அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் இந்தியப் பெருங்கடல் பகுதியில் தாக்கி அழித்தது. இதுகுறித்து இந்தியா மவுனம் காப்பது ஏன் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.
இந்நிலையில் ஈரான் போருக்குப்பின் நடந்தது என்ன, இந்தியா எடுத்த...
பெண்களின் வலிமை மற்றும் சாதனைகளைப் பாராட்டிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பெண்கள் தங்கள் முழு ஆற்றலை உணர வேண்டும் என வலியுறுத்தினார்.
சர்வதேசப் பெண்கள் தினத்தை முன்னிட்டு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்று பேசியதாவது: கல்வி, நிர்வாகம், நீதித்துறை, பாதுகாப்பு, மருத்துவம், அறிவியல், தொழில்நுட்பம், கலைகள், தொழில் முனைவு மற்றும் விளையாட்டு ஆகிய அனைத்துத்...
டெல்லி யூனியன் பிரதேசத்தில் ரூ.33,500 கோடி மதிப்பிலான திட்டங்களை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். சில திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
தலைநகர் டெல்லியில் சிவப்பு, மஞ்சள், நீலம், பச்சை, ஊதா, இளஞ்சிவப்பு (பிங்க்), மெஜந்தா உள்ளிட்ட பெயர்களில் 10-க்கும் மேற்பட்ட வழித் தடங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. இதில் பிங்க் மற்றும் மெஜந்தா வழித் தடங்கள் இணைக்கப்பட்டு நாட்டின் முதல் வட்ட மெட்ரோ பாதை (ரிங்...
நிதிஷ் மகன் நிஷாந்த் குமார் ஜேடியு கட்சியில் இணைந்தார் – துணை முதல்வராக்க கட்சியினர் ஆதரவு
admin - 0
பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் (50) ஐக்கிய ஜனதா தள கட்சியில் (ஜேடியு) உறுப்பினராக நேற்று சேர்ந்தார். அவரை துணை முதல்வராக்க கட்சி எம்எல்ஏ.க்கள், எம்.பி.க்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பிஹாரில் கடந்தாண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், தே.ஜ.கூட்டணி அமோக வெற்றி வெற்றது. நிதிஷ் குமார் 10-வது முறையாக பிஹார் முதல்வரானார். இந்நிலையில் நிதிஷ் குமாரின் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் தனது மகன்...
வரும் டிசம்பருக்குள் ஹைதராபாத்தில் டீசல் பேருந்துகள் இருக்காது என தெலங்கானா முதல்வர் ரேவந்த் தெரிவித்துள்ளார்.
சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு, பெண் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசியதாவது: கல்லூரி மாணவர்களுக்கு மின்சார ஸ்கூட்டர்கள் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தோம். அது இந்த நிதியாண்டில் சாத்தியம் இல்லை. ஆனால், இத்திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது.
ஹைதராபாத் நகரை மாசற்ற நகரமாக மாற்ற, இங்கு ஓடும் 2,800...
உத்தரப் பிரதேசத்தில் ஓடும் ரயிலின் கழிவறையில் மதுரா துறவி அசுதோஷ் பிரம்மச்சாரி தாக்கப்பட்டு அவரது மூக்கறுக்கப்பட்டது. இவர், ஜோதிர்மடத்தின் சங்கராச்சாரியார் சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி மீது போக்ஸோ வழக்கு பதிவாகக் காரணமானவர்.
பிரயாக்ராஜ் செல்ல கடந்த சனிக்கிழமை இரவு காஜியாபாத்தில் ரீவா எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறியுள்ளார். ரயிலில் அவர் கழிவறைக்கு சென்றபோது அடையாளம் தெரியாத சிலர் துறவி அசுதோஷ் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். முகச்சவரக் கத்தியில் துறவியின் மூக்கை அறுத்து...










