சாலைகளில் ரம்ஜான் தொழுகைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் உ.பி.யில் போலீஸை கண்டித்து முஸ்லிம்கள் கோஷம்
admin - 0
இந்தியா முழுவதும் முஸ்லிம்கள் நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடினர். இந்நிலையில், சாலைகளில் தொழுகை நடத்த விதிக்கப்பட்ட தடையை கண்டித்து, மீரட் நகர தெருக்களில் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
அவற்றில், “முஸ்லிம்கள் மட்டும் தெருக்களில் தொழுகை நடத்த வில்லை. இந்துக்கள் தெருக்களில் ஹோலி கொண்டாடு கிறார்கள், சிவராத்திரியும் தெருக்களில் கொண்டாடப்படுகிறது. காவடிகளுடன் தெருக்களில் வலம் வருகிறார்கள். ராமநவமி யாத்திரையும் தெருக்களில் நடத்தப்படுகிறது. தீபாவளியன்று தெருக்களில் பட்டாசு வெடிக்கப்படுகிறது, விநாயகர் சதுர்த்தி...
இன்றைய நவீன யுகத்தில் சமூக வலைதளங்களில் புதிய புதிய அப்டேட்கள் அவ்வப்போது வைரலாகி கொண்டு வருகின்றன. கடந்த சில நாட்களாக ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் தளங்களில் முழு ட்ரெண்டிங்கில் இருப்பது இந்த ‘கிப்லி’(Ghibli) ஆர்ட் எனப்படும் அனிமேஷன் புகைப்படங்கள்தான்.
ஜப்பானைச் சேர்ந்த ‘ஸ்டூடியோ கிப்லி’ என்ற நிறுவனம் தயாரித்த அனிமேஷன் திரைப்படங்கள் உலகம் முழுவதும் பிரபலமானவை. இந்த கிப்லி ஸ்டைல் படங்களுக்கு உலகம் முழுவதும் தனி ரசிகர் பட்டாளம்...
“காஷ்மீரில் இருந்து பிரிவினைவாதம் தூக்கி வீசப்பட்டுள்ளது; பிரதமர் மோடிக்கு கிடைத்த வெற்றி” – அமித் ஷா பெருமிதம்
admin - 0
அனைத்து கட்சி ஹுரியத் மாநாடு கூட்டணியில் இருந்து 2 அமைப்புகள் விலகி உள்ளன. இது, பிரதமர் நரேந்திர மோடிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் கடந்த 1993-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி, ‘அனைத்து கட்சி ஹுரியத் மாநாடு’ என்ற கூட்டணி உருவாக்கப்பட்டது. இதில் பல்வேறு அரசியல் கட்சிகள், மத அமைப்புகள், பிரிவினைவாத அமைப்புகள் இணைந்தன.
இந்த கூட்டணி காஷ்மீர் முழுவதும்...
எரிந்த நிலையில் பண மூட்டைகள் சிக்கிய விவகாரம் தொடர்பாக, டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் உள் விசாரணைக்குழு நேற்று ஆய்வை தொடங்கியது.
டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவர் யஷ்வந்த் வர்மா. இவரது அரசு இல்லத்தில் உள்ள பொருட்கள் வைக்கும் அறையில் கடந்த 14-ம் தேதி இரவு தீப்பிடித்தது. அங்கு எரிந்த நிலையில் பண மூட்டைகள் சிக்கிய விஷயம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவுக்கு தகவல்...
ஆன்லைனில் நடத்தப்படும் ஏலங்களின் மூலம் பழைய ஒரு ரூபாய் நோட்டு, ரூ.7 லட்சம் வரை விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கடந்த 1917-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி ஒரு ரூபாய் நோட்டு முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த 1926-ம் ஆண்டில் ஒரு ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பது நிறுத்தப்பட்டது. இதன்பிறகு கடந்த 1940-ம் ஆண்டு மீண்டும் ஒரு ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டன.
நாடு...
ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை ஆய்வு செய்யும் நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பதவிக்காலம் நீட்டிப்பு
admin - 0
ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாக்களை ஆய்வு செய்யும் நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பதவிக் காலத்தை மக்களவை நேற்று நீட்டித்தது.
நாடு முழுவதும் சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் மக்களவை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தும் வகையில் அரசியல்சாசன (12வது திருத்தம்) மசோதா, யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்தம்) மசோதா ஆகியவை மக்களவையில் கடந்தாண்டு டிசம்பர் 17-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டன. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து இந்த...
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி லண்டன் வீதிகளில் சேலையுடன் நடைப்பயிற்சி செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
மேற்கு வங்க மாநிலத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக முதல்வர் மம்தா பானர்ஜி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த சனிக்கிழமை மாலை இங்கிலாந்துக்கு புறப்பட்ட அவர் அங்குள்ள தொழிலபதிர்களை சந்தித்துப் பேசுகிறார்.
இந்த நிலையில், அவருக்கு பிடித்தமான வெள்ளை சேலை, காலில் செருப்பு மற்றும் மேல்சட்டை...
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின மேலாளராக இருந்தவர் திஷா சலியன். மும்பையில் வசித்து வந்த இவர், கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 8-ம் தேதி 14-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் நடந்த சில நாட்களில் சுஷாந்த் சிங் ராஜ்புத் தனது குடியிருப்பில் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார். இதுவும் தற்கொலை என மும்பை போலீஸார் முதலில் தெரிவித்தனர். எனினும், அவரது குடும்பத்தினரின்...
டிஜிட்டல் கைது மோசடி தொடர்பாக 83,668 வாட்ஸ் அப் எண்கள், 3,962 ஸ்கைப் அக்கவுன்டுகளை மத்திய அரசு முடக்கியுள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.
டிஜிட்டல் கைது மோசடி தொடர்பாக பாஜக உறுப்பினர் மகேஷ் கா்ஷ்யாப் எழுப்பிய கேள்விக்கு, உள்துறை இணையமைச்சர் பண்டி சஞ்சய் குமார் மக்களவையில் நேற்று அளித்த பதிலில் கூறியதாவது:
சைபர் மோசடிகளை கட்டுப்படுத்தும் முயற்சியாக 7,81,000 சிம் கார்டுகள், 2,08,489 ஐஎம்இஐ எண்கள் செயல் இழக்கம் செய்யப்பட்டன. 83,668 வாட்ஸ்...
புற நகருக்கு மாறுகிறது டெல்லி திகார் சிறை: ரூ.1 லட்சம் கோடியில் பட்ஜெட் தாக்கல் செய்த முதல்வர் ரேகா குப்தா தகவல்
admin - 0
டெல்லியில் உள்ள திகார் சிறை புற நகருக்கு மாற்றப்பட உள்ளது. இதற்கான சர்வே பணிகளுக்கு டெல்லி அரசின் பட்ஜெட்டில் ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் 26 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்துள்ள பாஜக அரசு, தனது முதல் பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தது. நிதித் துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரேகா குப்தா, இதனை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
அவர் தனது பட்ஜெட் உரையில் கூறியதாவது: இது ஒரு சாதாரண பட்ஜெட்...










