உயர்கல்வி நிறுவனங்களுக்கான புதிய விதிமுறைகளில் பாகுபாடு காட்டப்படாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்துள்ளார்.
பல்கலைக்கழக மாணவர்கள் ரோஹித் வெமுலா மற்றும் பயல் தட்வி ஆகியோரின் மரணத்தைத் தொடர்ந்து, அவர்களது தாய்மார்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2012ம் ஆண்டின் பழைய விதிமுறைகளை மறுபரிசீலனை செய்யுமாறு பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு (யுஜிசி) உத்தரவிட்டது. இதன் அடிப்படையில், உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான 2026-ம் ஆண்டின் புதிய...
பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடக்கம்; அனைத்துக் கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கோரிக்கை நிராகரிப்பு
admin - 0
விபி-ஜி ராம் ஜி சட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. ஆனால், மத்திய அரசு இதை நிராகரித்துள்ளது.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (ஜனவரி 28) தொடங்குகிறது. இந்தக் கூட்டத் தொடர் ஏப்ரல் மாதம் 2ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனிடையே பிப்ரவரி 1ம் தேதி 2026- 27ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக,...
கர்நாடக சட்டப்பேரவை கடந்த 22ம் தேதி கூடியபோது ஆளுநர் தாவர்சந்த் கெலாட் உரையாற்றாமல் வெளிநடப்பு செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் ஆளுநரை சூழ்ந்துக்கொண்டு கூச்சல் போட்டனர். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் கர்நாடக பாஜக, மஜத எம்எல்ஏ.க்கள், எம்எல்சி.க்கள் எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோகா தலைமையில் சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு எதிரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது ஆளுநருக்கு ஆதரவாகவும், காங்கிரஸாருக்கு எதிராகவும் முழக்கம்...
மத்திய பிரதேச மாநிலம் சீஹோர் மாவட்டம் டோரஹா கிராமத்தில் மதரசா பள்ளி உள்ளது. குடியரசு தினத்தன்று மாநில காவல் துறை ஏடிஜிபி (பயிற்சி) ராஜா பாபு சிங் அந்த மதரசா மாணவர்களிடையே காணொலி மூலம் உரையாற்றினார்.
இதுகுறித்து பிடிஐ செய்தியாளரிடம் சிங் கூறும்போது, ”டோரஹா கிராமத்தில் உள்ள மதரசாவின் மவுலானா எனது பழைய நண்பர். குடியரசு தினத்தன்று மாணவர்களிடையே உரையாற்றுமாறு அவர் என்னைக் கேட்டுக்கொண்டார்.
மாணவர்கள் பெற்று வரும் கல்விக்காக அவர்களுக்கு...
நாட்டின் 77-வது குடியரசு தின விழா தலைநகர் டெல்லி உட்பட நாடு முழுவதும் கோலாகலமாக இன்று கொண்டாடப்படுகிறது. டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்றார். 21 குண்டுகள் முழங்க தேசியக் கொடி பறக்கவிடப்பட்டது. தேசத்தின் வலிமையை பறைசாற்றும் வகையில் முப்படைகளின் பிரம்மாண்ட அணிவகுப்பு டெல்லியில் நடைபெற்றது.
நாட்டின் 77-வது குடியரசு தின விழா மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. தலைநகர் டெல்லியில் உள்ள கடமைப்...
நாட்டின் 77-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் உள்ள கடமைப் பாதையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
நாட்டின் 77-வது குடியரசு தினம் நேற்று மிகுந்த உற்சாகத்துடன் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. தலைநகர் டெல்லியில் உள்ள கடமைப் பாதையில் பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் குடியரசு தின விழா கோலாகலமாக நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக ஐரோப்பிய...
நாட்டின் 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு கேரளாவில் நேற்று நடந்த விழாவில் பங்கேற்ற காங்கிரஸ் (மதச்சார்பற்ற) கட்சியின் தலைவரும், கேரள அமைச்சருமான காடனபள்ளி ராமச்சந்திரன் (82) மயக்கமடைந்தார்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், ”கன்னூர் மைதானத்தில் குடியரசு தின விழாவுக்காக ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் ராமச்சந்திரன் தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீஸ் மரியாதையை ஏற்றார். அப்போது நிகழ்ச்சி முடிவடையும் நேரத்தில் அவருக்கு மயக்கம் ஏற்பட்டது....
டெல்லியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல், கார்கேவுக்கு 3-வது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அதேநேரம், முதல் வரிசையில் ஓம் பிர்லா பக்கத்தில் ஜெகதீப் தன்கர் அமர்ந்திருந்தார்.
டெல்லியில் உள்ள கடமைப் பாதையில் 77-வது குடியரசு தினவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜே.பி.நட்டா, எஸ்.ஜெய்சங்கர், சிவராஜ்...
பெங்களூருவில் நேற்று நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பின்போது சிறை கைதிகளால் தயாரிக்கப்பட்ட தின்பண்டங்களை கர்நாடக ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள் ருசித்து சாப்பிட்டனர்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள சிறை கைதிகளுக்கு ஒரு மாத பேக்கிங் பயிற்சியும், பேக்கரி தின்பண்டங்கள் தயாரித்து விற்பனை செய்யும் வாய்ப்பும் அம்மாநில சிறைத்துறையால் வழங்கப்படுகிறது. பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை கைதிகளால் தயாரிக்கப்பட்ட தின்பண்டங்கள் சிறைக்கு வெளியே திறக்கப்பட்டுள்ள பேக்கரி மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், பரப்பன...
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மக்களவை தொகுதி காங்கிரஸ் எம்.பி. சசி தரூர். மத்தியில் உள்ள பாஜக அரசு, பிரதமர் மோடியின் செயல்பாடுகளை வெளிப்படையாக புகழ்ந்து வருகிறார்.
இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், நாட்டு நலனுக்கு எது நல்லதோ அதை செய்வேன் என்று சசி தரூர் உறுதியாக கூறினார்.
கேரளாவில் விரைவில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு கொச்சியில் கடந்த 19-ம் தேதி நடைபெற்ற...
