Google search engine
’ஜனநாயகன்’ ரீமேக் என்று பரவி வரும் தகவல்களுக்கு ‘பகவந்த் கேசரி’ இயக்குநர் அனில் ரவிப்புடி விளக்கமளித்துள்ளார். ‘பகவந்த் கேசரி’ தமிழ் ரீமேக் தான் ‘ஜனநாயகன்’ என்று தகவல்கள் பரவி வருகின்றன. இது தொடர்பாக ‘பகவந்த் கேசரி’ படத்தின் இயக்குநர் அனில் ரவிப்புடியிடம் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு “’ஜனநாயகன்’ விஜய் சார் படம் என்று இயக்குநர் கூறியிருக்கிறார். எனவே படம் வெளியாகும் வரை அப்படித் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். விஜய் சாருடைய...
திரைப்​படங்​களைப் பார்க்​கத் தொடங்​கிய ஆரம்ப காலத்​திலிருந்தே மனிதன் திரை​யில் நிஜத்​தைக் காண விரும்​பி​னான். சமதள​மாக இருக்​கும் வெள்​ளைத் திரை​யில் ஆழத்தை (டெப்த்) ஏற்​படுத்​தி, 2டி திரை​யில் முப்​பரி​மாணத் தோற்​றத்தை உரு​வாக்கி பார்​வை​யாளரை அந்த உலகுக்​குள் இழுப்​பதே ஒளிப்​ப​தி​வாளர்​களின் கனவாக இருந்​தது. அந்த விருப்​பத்​தின் தொழில்​நுட்ப வடிவமே 3டி சினி​மாடோகிராஃபி. இது புதிய கண்​டு​பிடிப்​பல்ல. ஆனால் ஒவ்​வொரு கால​கட்​டத்​தி​லும் மெரு​கேறிய புதிய புரிதலோடு மீண்​டும் மீண்​டும் பிறக்​கும் சினிமா மொழி. இண்​டரோகுலர் டிஸ்​டன்ஸ்...
தமிழ் திரையுலகைப் பொறுத்தவரை 2025-ம் ஆண்டில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான பெரிய பட்ஜெட் படங்கள் ஏமாற்றத்தையும், எந்தவித எதிர்பார்ப்பும் இன்று வெளியான பல சிறிய பட்ஜெட் படங்கள் ஆச்சர்யத்தையும் தந்தன. பல தசாப்தங்களுக்குப் பிறகு இணைந்த ஆளுமைகளின் கூட்டணி கூட ரசிகர்களை ஏமாற்றிய நிலையில், எந்தவித ஆரவாரமும் இன்றி வந்த எளிய கதைகள் வசூலில் சாதனை படைத்துள்ளன. பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு ஏமாற்றிய 'பெரிய பட்ஜெட்' படங்கள்: தக் லைஃப்: 'நாயகன்' படத்துக்குப் பிறகு...
எப்போதும் இல்லாத அளவுக்கு 2025-ம் வருடம் திரைப்படங்களின் ரிலீஸில், தமிழ் சினிமா சாதனைப் படைத்திருக்கிறது. ஒவ்வொரு வருடமும் தமிழில் உருவாகும் திரைப்படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன என்றாலும் இந்த வருடம் யாரும் எதிர்பார்க்காத வரையில் 285 திரைப்படங்கள் வெளியாகி வியப்பை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு முன் இவ்வளவு திரைப்படங்கள் வெளியானதில்லை. கடந்த 2024-ம் ஆண்டு 241 திரைப்படங்கள் மட்டுமே வெளியாகி இருந்தன. 2025-ல் ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரை 262...
நூறு கோடியைத் தாண்டி வசூல் செய்யும் மாஸ் மசாலா படங்கள் சினிமாவை ஒரு தொழிலாகத் தக்க வைக்கின்றன. தற்காலத்தில் சினிமா பெருநிறுவன மயமாகியிருப்பதற்கும் இவ்வகை வணிகப் படங்களின் வியாபாரமும் அவற்றுக்கு ரசிகர்கள் தரும் வரவேற்புமே காரணம். ஆனால், சினிமா என்கிற தொழிலுக்கு ‘கலை’ என்கிற அங்கீகாரத்தைக் கொடுப்பவை ‘மிடில் சினிமா’ என்கிற இடைநிலை பொழுதுபோக்குப் படங்கள்தான். ‘ஆஃப் பீட் சினிமா’, ‘ஃபீல் குட் சினிமா’ எனப் பல பெயர்களில்...
உல​கம் முழு​வதும் அதி​கம் வசூலித்த திரைப்​படங்​களாக ஒவ்வொரு வருட​மும் ஹாலிவுட் படங்​களே முதலில் இருக்​கும். ஆனால், 2025-ம் ஆண்டு அதி​கம் வசூல் அள்​ளிய திரைப்​பட​மாக, ‘நே ஜா 2’ (Ne Zha 2) என்ற அனிமேஷன் திரைப்​படம் முதலிடம் பிடித்துள்ளது. சீனா​வில் உரு​வான இந்​தக் கற்​பனை சாகசப் படம் இந்த ஆண்டு ஜன. 29-ல் வெளி​யானது. அப்​போ​திருந்தே பாக்ஸ் ஆபீஸில் சாதனை​களைப் படைத்து வரு​கிறது. இப்​படம் உலகள​வில் 2.2 பில்​லியன்...
“வடக்கன் என்கிற வெறுப்பு மனநிலையில் செயல்படுவது சமூக சீர்குலைவிற்கே வழிவகுக்கும். வடக்கன் என்ற மனநிலை மிகவும் ஆபத்தான போக்காகும்” என திருத்தணி சம்பவம் குறித்து திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘திருவள்ளுர் மாவட்டம், திருத்தணியில் நடந்த மனிதமற்ற கொடூர செயலை கண்டு நெஞ்சம் பதறுகிறது. அண்மைக் காலமாகத் தமிழகத்தில் அதிகரித்துவரக் கூடிய போதைப் பொருள் கலாச்சாரத்தைத் தடுக்கத் தவறிய ஆட்சியாளர்களுடைய மெத்தனப்...
கதை​யின் நாயகர்​களாக ராதா ரவி, ரவி மரியா நடிக்​கும் படத்​தை, ‘பழகிய நாட்​கள்’, ‘மூன்​றாம் மனிதன்’ ஆகிய திரைப்படங்களைத் தயாரித்​து, இயக்​கிய ராம்​தேவ் இயக்குகிறார். கஞ்சா கருப்​பு, இயக்​குநர் பேரரசு, நிழல்​கள் ரவி, பழ.கருப்​பை​யா, நாஞ்​சில் சம்​பத் உள்​ளிட்ட பலர் இதில் நடிக்​கின்​றனர். கார்த்​திக் நாயர் ஒளிப்​ப​திவு செய்​யும் இப்​படத்​தைக் கண்​ணகி மைந்​தன் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்​கிறது. இப்​படம் பற்றி இயக்​குநர் கூறும்​போது, ”இது அரசி​யல் நையாண்டி, காமெடி திரைப்​படம். சமூகத்​துக்​குத்...
சிந்தியா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகை சிந்தியா லூர்டே தயாரித்து, ஹீரோயினாக நடித்துள்ள திரைப்படம், ‘அனலி’. அறிமுக இயக்குநர் தினேஷ் தீனா எழுதி இயக்கியுள்ள திரைப்படத்தில், சக்தி வாசுதேவன், குமரவேல், இனியா, கபிர் துகான் சிங், அபிஷேக் வினோத், ஜென்சன் திவாகர் உள்பட பலர் நடித்துள்ளனர். இதன் செய்தியாளர்கள் சந்திப்பில் சிந்தியா லூர்டே கூறும்போது, “‘வர்ணாஸ்ரமம்’, ‘தினசரி’ படங்களுக்குப் பிறகு 'அனலி' என்னுடைய மூன்றாவது தயாரிப்பு. இந்த படத்தில் நானே நாயகியாகவும் நடித்திருக்கிறேன்....
லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு எல்லைப் பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு இந்திய- சீன ராணுவ வீரர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இருதரப்பும் ஒருவரை ஒருவர் கட்டையாலும், இரும்புக் கம்பிகள் மற்றும் கற்களாலும் தாக்கிக்கொண்டனர். முந்தைய ஒப்பந்தங்கள் காரணமாகத் துப்பாக்கி மோதலில் ஈடுபடவில்லை. இம்மோதலில், இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணமடைந்தனர். சீன தரப்பில் 38 பேர் கொல்லப்பட்டதாக ஆஸ்திரேலிய பத்திரிகை செய்தி வெளியிட்டது. இந்த மோதல்...