Google search engine

கிள்ளியூர்: கல்லூரி மாணவி திடீர் மாயம் போலீஸ் விசாரணை

கிள்ளியூர், நல்லூர் பகுதியைச் சேர்ந்த 23 வயது கல்லூரி மாணவி கிரேசிலின் ஷீனா கல்லூரிக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரைத் தேடி வந்த நிலையில், அவரது தந்தைக்கு ஒரு மர்ம எண்ணிலிருந்து அழைப்பு வந்துள்ளது. பேசிய நபர், 'உங்கள் மகள் என்னுடன் நலமாக இருக்கிறார்'...

குமரி: நாளை உள்ளூர் விடுமுறை.. ஆட்சியர் அறிவிப்பு

அய்யா வைகுண்டரின் 194வது அவதார தினத்தை முன்னிட்டு, நெல்லை, தென்காசி மற்றும் குமரி மாவட்டங்களில் நாளை (மார்ச் 4) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் மார்ச் 14 ஆம் தேதியும், தென்காசி மாவட்டத்தில் மார்ச் 7...

மண்டைக்காடு: தற்காலிக கடைகளில் தாசில்தார் தலைமையில் ஆய்வு

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகளில் கல்குளம் தாசில்தார் சுனில், குளச்சல் வருவாய் ஆய்வாளர் ரெஜி மற்றும் ஸ்ரீஜித் ஆகியோர் திடீர் ஆய்வு நடத்தினர். விலை பட்டியல் வைக்காத கடைகளுக்கு அறிவுறுத்தலும், உணவுப்பொருட்கள் சுகாதாரமாக விற்பனை...

தக்கலை: ராகுல்காந்தி உருவ பொம்மை எரிக்க முயன்ற பா ஜ வினர்

தக்கலை தாலுகா அலுவலகம் எதிரே நேற்று பாரதிய ஜனதா கட்சியினர் வட்டாரத் தலைவர் ஜெகன் ஜோதி தலைமையில் திடீரென குவிந்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதிராஜா தலைமையிலான போலீசார் உருவ பொம்மையை பறிமுதல் செய்து, போராட்டக்காரர்களை...

பளுகல்: வீட்டில் அழுகிய நிலையில் சடலம்; போலீசார் விசாரணை

பளுகல் பகுதியைச் சேர்ந்த 62 வயதான, மனநலம் பாதிக்கப்பட்ட டாளி என்பவர் நேற்று அவரது வீட்டில் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். அக்கம்பக்கத்தினர் துர்நாற்றம் வீசியதை அடுத்து கதவை உடைத்து பார்த்தபோது இந்த சம்பவம் தெரியவந்தது. பளுகல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு குமரி...

குமரி: தமிழக துணை முதல்வர் வருகை அமைச்சர் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதிக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வரும் 6-ம் தேதி மாலையில் வருகிறார். குலசேகரம் மினி ஸ்டேடியத்தில் விளையாட்டு வீரர்கள், உடற்பயிற்சி ஆர்வலர்கள், பயிற்சியாளர்களை அவர் சந்திக்க உள்ளார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று ஆய்வு செய்தார்....

மணிமேடை அருகே உள்ள பள்ளத்தை சரி செய்ய கோரிக்கை

நாகர்கோவில் மாநகராட்சி மணிமேடையிலிருந்து கல்லூரிக்கு செல்லும் பிரதான சாலையில் உள்ள பள்ளம் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை பெரிதும் பாதிக்கிறது. இப்பகுதி வழியாக ஏராளமான வாகனங்கள் செல்வதால், அசம்பாவிதங்கள் நிகழும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பள்ளத்தை சரிசெய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்....

குமரி: கோவில் சமய மாநாடு; உயர்நீதிமன்ற நீதிபதி துவக்கினார்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழா நேற்று தொடங்கியது. தொடர்ந்து 89வது சமய மாநாடு துவக்க நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி விக்டோரியா கௌரி கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தார். இளைய தலைமுறையினருக்கு பக்தியை கற்றுக்...

அருமனை: தூக்கில் அழுகிய நிலையில் பெயிண்டர் சடலம்

அருமனை, கிராங்கோணம் பகுதியைச் சேர்ந்த 47 வயதான பெயிண்டர் மதுசிவசங்கரப் பிள்ளை கடந்த 2 நாட்களாக காணாமல் போயிருந்தார். நேற்று அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது, அவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். அருமனை போலீசார் உடலை மீட்டு பிரேத...

மேல்புறம்: மாற்றுத்திறனாளிக்கு கத்திக்குத்து.. 2 பேர் கைது

மேல்புறம், பாகோடு பகுதியைச் சேர்ந்த வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஜஸ்டஸ் (53) என்பவரை, அதே பகுதியைச் சேர்ந்த பிரபின் (23) மற்றும் ஜான் ஆகியோர் நேற்று முன்தினம் மாலை தகராறு செய்து கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றனர். இதில் காயமடைந்த ஜஸ்டஸ் குழித்துறை அரசு மருத்துவமனையில்...