Google search engine

நாகர்கோவில்: இடர் தீர்த்த பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள வடிவீஸ்வரம் இடர் தீர்த்த பெருமாள் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மாலையில் ஸ்ரீதேவி பூதேவி சமய இடர் தீர்த்த பெருமாள் திருக்கல்யாண வைபோக நிகழ்ச்சியும், கருட சேவை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு...

குமரியில் தற்செயல் விடுப்பு எடுத்து ஊழியர்கள் போராட்டம்

ஓய்வூதியம் தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி குமரி மாவட்டத்தில் வணிகவரி துறை சங்கம், ஊரக வளர்ச்சித் துறை, உதவி வேளாண்மை அலுவலர் சங்கம், உதவி தோட்டக்கலை அலுவலர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு துறை சங்கங்கள் நேற்று தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில்...

கருங்கல்:   தலைமை ஆசிரியர் அடித்ததில் மாணவி காயம்

கருங்கல், கண்ணன்விளை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மகள், அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் பள்ளி அருகே ஏற்பட்ட புகை மூட்டத்தால் மாணவிகள் தும்மியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த தலைமை ஆசிரியர் மாணவிகளைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.  தலைமை ஆசிரியர் தனது மகளைத் தாக்கியதில், அவர்...

ராஜகமங்கலம்: குளத்தில் தலை இல்லாத குழந்தையின் சடலம்

ராஜாக்கமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சம்பகுளத்தில் நேற்று (செப்.11)  மதியம் தலை இல்லாத நிலையில் பச்சிளம் குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது. கிராம நிர்வாக அலுவலர் பென்சியா பிரைட் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடலை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு...

கொல்லங்கோடு: காரில் 2 ஆயிரம்  லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்

கொல்லங்கோடு காவல் நிலைய போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பூத்துறை பகுதியில் இருந்து படகுகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் ஏற்றிக் கொண்டு சொகுசு கார் ஒன்று கேரளா நோக்கி வருவதாக தகவல் கிடைத்தது.  அப்போது சம்பந்தப்பட்ட கார் இரவு சுமார் 11.30 மணி...

குமரி: தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், கட்டுமானம், தையல், ஆட்டோ உள்ளிட்ட முறைசாரா தொழிலாளர்களின் நிலுவையில் உள்ள பணப் பயன் மனுக்களை உடனடியாக வழங்கிட வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

நாகர்கோவிலில் போக்குவரத்து ஊழியர்கள் 23-வது நாளாக போராட்டம்

அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 23 மாத கால ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி, ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று 23-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பொது மேலாளர்...

ஆசாரிப்பள்ளம் மருத்துவ மனையில் 2500 பேருக்கு சிகிச்சை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினசரி சுமார் 2500 வெளி நோயாளிகள் சிகிச்சை பெறுவதாக கல்லூரி முதல்வர் லியோடேவிட் தெரிவித்துள்ளார். விடுமுறை நாட்களில் இந்த எண்ணிக்கை 1000-க்கும் அதிகமாக இருப்பதாகவும், நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். மருத்துவமனைக்கு வரும்...

மண்டைக்காடு: பகவதி அம்மன் கோயிலில் சுமங்கலி பூஜை

குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில், ஆவணி அஸ்வதி பொங்கல் விழாவின் முக்கிய நிகழ்வாக சுமங்கலி பூஜை நேற்று புதன்கிழமை இரவு நடைபெற்றது. இதில் பெண்கள் அனைவரும் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டியும், எல்லாவித நன்மையும் பெற்று வாழ சிறப்பு பூஜை...

வேர்க்கிளம்பி: பத்திர பதிவு அலுவலகம் முன்பு ஜமாஅத் போராட்டம்

வேர்க்கிளம்பி அருகே ஜமா அத்துக்கு சொந்தமான 4 ஏக்கர் 87 சென்ட் நிலம், சார் பதிவாளர் விடுப்பில் இருந்தபோது தனிநபர் பெயருக்கு பதிவு செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதை கண்டித்து திருவிதாங்கோடு ஜமாத் நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமியர்கள் நேற்று சார் பதிவாளர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம்...