Google search engine

குமரியில் இன்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள்

குமரி மாவட்டத்தில் இன்று 16ஆம் தேதி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தின் கீழ் மக்களை சந்திக்கிறார். மருங்கூர், மண்டைக்காடு, புதுக்கடை பேரூராட்சிகள் மற்றும் ஆலங்கோடு, பிராகோடு, சாந்தபுரம் ஆகிய ஊராட்சிகளில் பொதுமக்களுக்காக முகாம்கள் நடைபெறுகின்றன. ராஜாவூர், மண்டைக்காடு, புதுக்கடை, ஆலங்கோடு, பிராகோடு, சாந்தபுரம்...

குமரி: கேரளாவிற்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ரயில் நிலையத்தில், சென்னையிலிருந்து கொல்லம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் ரயில்வே போலீசார் சோதனை நடத்தினர். முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் இருக்கையின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 160 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் கண்டெடுக்கப்பட்டன. கேரளாவிற்கு கடத்த முயன்றதாகக் கூறப்படுகிறது. இது...

பார்வதிபுரம் அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள்

நாகர்கோவில் பார்வதிபுரம் அரசு பள்ளியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 44 லட்சம் செலவில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கான பணிகள் நேற்று தொடங்கின. நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். காந்தி இந்த பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் மேரி...

கப்பியறை: அரசு சுகாதார நிலைய கட்டிடம் ; எம்எல்ஏ அடிக்கல்

கப்பியறை பேரூராட்சி, ஓலவிளையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 15வது நிதி ஆணைய சுகாதார மானிய திட்டத்தின் கீழ் புதிய கட்டிடம் அமைக்க ரூ. 75 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் குளச்சல் எம்.எல்.ஏ. பிரின்ஸ் கலந்து...

நித்திரவிளை:  பஸ்சுக்கு நின்ற மனைவியை தாக்கிய கணவர்

நித்திரவிளை அருகே சாத்தன்கோடு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஜெபின் தாஸ், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த தனது மனைவி நிஷாவை, நேற்று சாலையோரம் பேருந்து ஏறுவதற்காக நின்றிருந்தபோது தகாத வார்த்தைகள் பேசி அடித்து காயப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து நித்திரவிளை...

மார்த்தாண்டம்:   பைக் மோதி மத போதகர் மனைவி படுகாயம்

மார்த்தாண்டத்தில் நேற்று மத போதகர் ஜெஸ்லின் ஜாய் (43) தனது மனைவி புனிஜோவுடன் (35) பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த மற்றொரு பைக் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் புனிஜோ படுகாயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து...

கன்னியாகுமரியில் 1315 சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்: பாதுகாப்பு தீவிரம்

கன்னியாகுமரி மாவட்ட ஊர்காவல் கண்காணிப்பு திட்டத்தின் கீழ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் ஞாயிற்றுக்கிழமை புதுக்கடை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட விளாத்துறை காமராஜர் படிப்பகத்தின் முன் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் புதுக்கடை போலீசார் மற்றும் ஊர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்....

கிள்ளியூர்: தமிழகத்தின் சிறந்த திமுக பேரூர் செயலாளர் தேர்வு

திமுக தலைமை கழகம் சார்பில் ஆண்டுதோறும் கட்சிப் பணிகளில் சிறப்பாக செயல்படும் நிர்வாகிகளுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது. இந்த ஆண்டு, குமரி மேற்கு மாவட்டம், கிள்ளியூர் பேரூராட்சி திமுக செயலாளர் சத்யராஜ் சிறந்த பேரூராட்சி செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரும் 17-ம் தேதி கரூரில் நடைபெறும் திமுக...

கிள்ளியூர்: நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்

கிள்ளியூர் தாலுகா பயணம் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நாளை 13ஆம் தேதி நலம் காக்கும் ஸ்டாலின் முழு உடல் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. முகாம் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் காலை...

நாகர்கோவில்: உங்களுடன் ஸ்டாலின் முகாமை துவங்கி வைத்த மேயர்

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களின் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ், மக்களின் குறைகளை வீட்டிற்கே வந்து கேட்டறிந்து தீர்வு காணும் சிறப்பு முகாம் நேற்று நாகர்கோவில் மாநகராட்சி 22-வது வார்டு பகுதியில் நடைபெற்றது. குமரி மாநகராட்சி மேயர் மகேஷ் பெதஸ்தா காம்பிளக்ஸ்ல் நடைபெற்ற இந்த...