Google search engine

கொல்லங்கோடு: கன்னியாஸ்திரி இல்லத்தில் திருடிய வாலிபர்

கொல்லங்கோடு அருகே அம்புலிகோணத்தில் உள்ள மலங்கரை கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் இல்லத்தில், குரு மாணவன் போல் நடித்து வந்த வாலிபர் ஒருவர் பீரோவில் இருந்த ₹2 லட்சத்தை திருடிச் சென்றார். தலைமை பாதிரியாரைப் பார்க்க வேண்டும் என்று கூறி உள்ளே சென்ற அவர், தலைமை கன்னியாஸ்திரி உள்ளே சென்ற...

JUST IN குமரி: கலெக்டர் ஆபிஸில் பாஜகவினர் வாக்குவாதம்

நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்திற்கு ஸ்டாலின் முகாம் பணிகளுக்காக தையல் மிஷின்கள் கண்டெய்னர் லாரியில் கொண்டுவரப்பட்ட நிலையில், அதனை இறக்கக் கூடாது என பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். 50,000 ரூபாய் கொண்டு செல்ல அனுமதிக்காத நிலையில் எப்படி தையல் மிஷின்கள் கொண்டு வந்து இறக்கலாம் என்று அவர்கள் கேள்வி...

மண்டைக்காடு: கோயிலில் நள்ளிரவு வலிய படுக்கை பூஜை

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் மாசி கொடை விழா மற்றும் 8ம் கொடை விழா நடந்து முடிந்தது. நேற்று மீனபரணி கொடை விழாவை முன்னிட்டு பொங்கல் விழா, நள்ளிரவு 12 மணிக்குள் முக்கிய வழிபாடான வலிய படுக்கை...

குமரி: கல்லூரி பேராசிரியரிடம் ரூ 25 லட்சம் மோசடி – வழக்கு

அகஸ்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த பேராசிரியர் பாஸ்கரன், களியக்காவிளை பகுதியைச் சேர்ந்த ஜெயசேகர் என்பவரிடம் கடந்த 2023 ஆம் ஆண்டு ரூ. 25 லட்சத்து 9 ஆயிரத்து 963 முதலீடு செய்துள்ளார். பணத்தை திரும்பத் தர ஜெயசேகர் மறுத்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக பாஸ்கரன் அளித்த புகாரின் பேரில்,...

மார்த்தாண்டம்: நாயை கல்லால் அடித்து கால் உடைப்பு – வீடியோ

மார்த்தாண்டம் பகுதியில் முன்விரோதம் காரணமாக ஷானு என்பவரின் ஜெர்மன் ஷெப்பர்டு நாயை ராஜின் மற்றும் பிபின் ஆகியோர் கல்லால் தாக்கி அதன் காலை ஒடித்து விட்டனர். காயமடைந்த நாய் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. மார்த்தாண்டம் போலீசார் இது...

கொல்லங்கோடு: கோயிலில் விடிய விடிய தூக்க நேர்ச்சை

கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மீனபரணி நாளில் நடைபெறும் பச்சிளம் குழந்தைகளின் தூக்க நேர்ச்சை நேற்று அதிகாலை தொடங்கி இன்று (மார்ச் 23) காலை நிறைவடைந்தது. ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்த 1124 குழந்தைகளுடன், அம்மன் 26 என மொத்தம் 1150 குழந்தைகள் நேர்ச்சையில் பங்கேற்றனர். தமிழகம்...

குமரி: தேர்தல் கட்டுபாட்டு அறையை ஆய்வு செய்த அதிகாரிகள்

தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் ஏப்ரல் 23 அன்று நடைபெறுவதை முன்னிட்டு, நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள நாஞ்சில் கூட்டரங்கில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான அழகுமீனா மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு செய்தனர். பொதுமக்களிடம் இருந்து வரும் புகார்களை...

குளச்சல்: வாக்குச்சாவடி மையங்களில் அலுவலர் ஆய்வு

குமரி மாவட்டத்தில் நடைபெற உள்ள தேர்தலை முன்னிட்டு, குளச்சல் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட உதவி தேர்தல் அலுவலர் மற்றும் வருவாய் அலுவலர் பூங்கோதை தீவிர ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக கடியப்பட்டணம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் சரல்விளை அரசு நடுநிலைப்பள்ளி ஆகியவற்றில்...

திருவட்டாறு: கோயில் கருவறைக்குள் விழுந்த சூரிய ஒளி

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் பங்குனி மாதத்தில் 3 முதல் 6-ம் தேதி வரை மாலை வேளையில் சூரிய ஒளி கருவறை வரை பாய்ந்து, உற்சவர் மற்றும் சயனகோலத்தில் காட்சி தரும் ஆதிகேசவப்பெருமாளின் திருமேனியை தழுவிச்செல்லும் அதிசயம் நிகழ்கிறது. நேற்று (மார்ச் 19) மாலை இந்த அற்புதக்...

குமரி: நிதி நிறுவனங்கள் நடத்தி ரூ. 10 கோடி மோசடி

குமரி - கேரளா எல்லைப் பகுதியான களியக்காவிளையில் கோகுல், கெளதம் என்ற பெயர்களில் செயல்பட்டு வந்த நிதி நிறுவனங்களின் உரிமையாளர் ஜெய்சேகர், சுமார் 10 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துவிட்டு குடும்பத்துடன் தலைமறைவானதாகக் கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும்...