குழித்துறை: பொருள்காட்சி நிறைவு
குழித்துறை நகராட்சி சார்பில் 100வது வாவுபலி பொருள்காட்சி கடந்த 9ஆம் தேதி தொடங்கி நேற்று வரை 20 நாள்கள் நடந்தது. நேற்று இரவு நிறைவு விழா பொருள்காட்சி திடலில் உள்ள விஎல்சி மண்டபத்தில் நடந்தது. நகரமன்றத் தலைவர் பொன். ஆசைதம்பி தலைமை வகித்தார். ஆணையாளர் ராஜேஸ்வரன் மற்றும்...
கருங்கல்: சிஎஸ்ஐ மத போதகர் திடீர் மரணம்
கருங்கல் அருகே கப்பியறை பகுதியைச் சேர்ந்தவர் காட்பிரே (27). இவர் சிஎஸ்ஐ ஆலயத்தில் போதகராக இருந்து வந்தார். இந்த நிலையில் காய்ச்சல் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் ஆலயத்தில் ஆராதனை முடித்து மதியம் வீட்டிற்கு வந்து, குளியலறைக்குச் சென்றுள்ளார். அப்போது உள்ளே விழுந்து தலையில்...
பேச்சிப்பறை: குடியிருப்பில் மீண்டும் புகுந்த காட்டு யானை
பேச்சிப்பாறை மலைக் கிராமங்களில் கடந்த சில மாதங்களாக காட்டு யானை ஒன்று பெரும் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. நேற்று அதிகாலை மூன்று மணியளவில் ஒற்றை யானை முருகன் என்பவர் வீட்டில் வந்துள்ளது. முருகன் யானையை விரட்ட முயன்றபோது யானை முருகனை துரத்தியது. அவர் வீட்டுக்குள் சென்று கதவைச் சாத்தினார்.
யானை...
நாகர்கோவிலில் கவிமணி சிலைக்கு மாலை அணிவித்த எம்எல்ஏ
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் 150ஆவது பிறந்த நாளான இன்று குமரி கிழக்கு மாவட்ட அதிமுக சார்பாக கன்னியாகுமரி எம்.எல்.ஏ தளவாய் சுந்தரம் தலைமையில் நாகர்கோவில் கோட்டார் பகுதியில் அமைந்துள்ள கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் உள்ள அவரது திரு உருவச்சிலைக்கு...
புத்தளத்தில் பூ நாரைகள் வருகை குறைவு
கன்னியாகுமரி மாவட்டத்தில் புத்தளம், மணக்குடி போன்ற பகுதிகளில் பூ நாரைகள் அதிக அளவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வருகை தந்தன. அண்மைக்காலமாக பூநாரைகள் வருகை இந்த பகுதிகளில் குறைந்துள்ளது. ஆயிரக்கணக்கில் வந்த பூநாரைகள் தற்போது நூற்றுக்கணக்கில் மட்டுமே வருகின்றன. இதற்கு சூழலியல் மாற்றம் என்று பறவை...
கருங்கல்: அனுமதி இன்றி போராட்டம்; 400 பேர் மீது வழக்கு
குமரியில் ஆழ்கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மேல் மிடாலம் கடற்கரை பகுதியில் மீனவர்கள் கவனயீர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்திற்கு ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டனர். அரசு அனுமதி இன்றி பொதுஜன அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், அரசு எதிராக கோஷங்களுக்கு...
திருவட்டார்: ஆதிகேசவ பெருமாள் கோயிலில் 2008 திருவிளக்கு பூஜை
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 2008 திருவிளக்கு பூஜை, சமய மாநாடு நேற்று (ஜூலை 27) இரவு நடைபெற்றது. திருவிளக்கு பூஜையில் முதல் குத்துவிளக்கை மோகன்குமார், உமாதேவி ஆகியோர் ஏற்றினர். அகில பாரத விவேகானந்தா கேந்திர உதவி தலைவர் நிவேதா, வெள்ளிமலை இந்து தர்மவித்யா பீட தர்ம...
திற்பரப்பு: கோயில் நிலம் மீட்க இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
திற்பரப்பு மகாதேவர் கோயில் பழமையான கோவிலாகும். இந்த கோவில் சொத்துக்களை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்து வைத்திருப்பதாக எழுந்த புகாரின் பேரில் அறநிலையத்துறை அதிகாரிகள் அளவீடு செய்ய வந்தனர். அப்போது எதிர்ப்பு காரணமாக எல்லை நிர்ணயம் செய்ய முடியாமல் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர். இதைக் கண்டித்தும், உடனடியாக அரசு...
பத்துகாணி: மரம் முறிந்து விழுந்து வீடு சேதம்
குமரி மலைவேர கிராமங்களில் கடந்த சில நாட்களாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. பத்துகாணி பகுதியில் நேற்று இரவு முதல் பலத்த காற்றுடன் தொடர் மழை பெய்தது. இன்று அதிகாலை ரவீந்திரன் என்பவர் வீட்டில் ஒரு மரம் திடீரென முறிந்து வீட்டின் மீது விழுந்தது. இதில்...
கொல்லங்கோடு: பத்ரகாளியம்மன் கோயில் நிறை புத்தரிசி பூஜை
கொல்லங்கோடு ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஒவ்வொரு மாதமும் பங்குனி மாதம் நடக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கான தூக்கத் திருவிழா மிகவும் பிரபலம். இதேபோல் இவ்வாண்டைய நிறைப்புத்தரி சடங்கானது நேற்று (ஜூலை 27) நடைபெற்றது. இதில் நெற்கதிர்கள் அடங்கிய கட்டுகளை பூஜையில் வைத்து பின்னர்...










