Google search engine
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜார்ஜ் சோரஸுக்கு உயரிய விருது வழங்கி இருப்பது கேலிக்கூத்து என தொழிலதிபர் எலான் மஸ்க் விமர்சித்துள்ளார். அமெரிக்காவில் அரசியல், சமூக சேவை, விளையாட்டு மற்றும் கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான சேவை புரிந்த 19 பேருக்கு சுதந்திரத்துக்கான அதிபர் பதக்கங்களை அதிபர் ஜோ பைடன் கடந்த சனிக்கிழமை வழங்கினார். முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன், கால்பந்து ஜாம்பவான் லயனல் மெஸி,...
அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டொனால்டு ட்ரம்புக்கு சொந்தமான நட்சத்திர ஓட்டல் முன்பு கார் தீப்பிடித்து எரிந்தது. இது தீவிரவாத தாக்குதலாக இருக்கக்கூடும் என்று எப்பிஐ போலீஸார் தெரிவித்துள்ளனர். கடந்த நவம்பரில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் மூத்த தலைவர் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றார். வரும் 20-ம் தேதி அவர் அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்க உள்ளார். அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் ட்ரம்புக்கு சொந்தமான நட்சத்திர...
அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பிக்அப் டிரக் மூலமாக நடத்தப்பட்ட தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர். இதைத் தவிர மேலும், இரண்டு இடங்களில் இதேபோன்று நடைபெற்ற தாக்குதல் சம்பவம் அமெரிக்க மக்களிடையே பீதியை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், நியூ ஆர்லியன்ஸ் நகரில் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டு போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட் சம்சுதீன் ஜாபர் (42) அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றிய முன்னாள் ராணுவ வீரர் என்பதை அந்நாட்டு புலனாய்வு அமைப்பான...
சிரியாவில் மலைக்கு அடியில் சுமார் 130 அடி ஆழத்தில் செயல்பட்ட ஏவுகணை ஆலையை இஸ்ரேல் கமாண்டோக்கள் துல்லிய தாக்குதல் மூலம் தகர்த்தனர். சிரியா ராணுவத்தின் மூத்த தளபதியாக பணியாற்றிய ஹபீஸ் அல் ஆசாத் கடந்த 1971-ம் ஆண்டு ராணுவ புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார். கடந்த 2000-ம் ஆண்டில் அவர் உயிரிழந்தார். அவரது மகன் பஷார் அல் அசாத் கடந்த 2000-ம் ஆண்டு ஜூலையில் சிரியாவின் புதிய அதிபராக பதவியேற்றார். இந்த...
சீனா முழுவதும் புதிய வகை வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இதுகுறித்த விவரங்களை அளிக்கும்படி சீன அரசிடம் உலக சுகாதார அமைப்பு கோரியுள்ளது. கரோனாவை போன்றே இந்த வைரஸால் காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. புதிய வைரஸால் சிறார் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். சீன சமூக வலைதளங்களில் வைரஸ் பாதிப்பு தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. சீனாவின் பல்வேறு பகுதிகளில் அவசர...
சீனாவில் புதிய வகை வைரஸ் தொற்று பரவல் என்ற செய்தி வந்தவுடனேயே உலக சுகாதார நிறுவனம் தொடங்கி உலக நாடுகள் வரை அனைத்தும் பரபரப்பாகி தொற்று தொடர்பான தகவல்களைத் தேடத் தொடங்கியுள்ளன. இந்தத் தேடலும், அதன் கூடவே ஒட்டிக் கொண்ட பதற்றமும் இயல்பே என்று சொல்லும் அளவுக்கு கடந்த 2019 டிசம்பரில் சீனாவின் வூஹான் நகரில் பதிவான கரோனா பாதிப்பு உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. கோடிக்...
அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் புத்தாண்டு தினத்தில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது. அமெரிக்காவின் லூசியானா மாகாணம் நியூ ஆர்லியன்ஸ் நகரில் உள்ள பர்பன் தெருவில் கடந்த 1-ம் தேதி அதிகாலை புத்தாண்டு கொண்டாட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர். அப்போது ஒருவர் லாரியை ஓட்டி வந்து கூட்டத்தினர் மீது மோதி துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. தாக்குதல் நடத்திய...
தென்கிழக்கு ஐரோப்பிய நாடான மான்டேனேக்ரோவின் செடின்ஜே நகரில் உள்ள மதுபான விடுதியில் நடந்த வாய்த் தகராறு மோதலாக மாறியதில் 12 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். துப்பாக்கி சூடு நடத்தியவரும் தற்கொலை செய்துகொண்டார். மான்டேனேக்ரோ நாட்டின் செடின்ஜே நகரில் மதுபான விடுதி ஒன்று உள்ளது. இங்கு அகோ மார்டினோவிக் (45) என்பவர் தனது நண்பர்களுடன் மது அருந்த வந்தார். அவர் நாள் முழுவதும் மது அருந்திக் கொண்டிருந்தார். இதனால் விடுதி உரிமையாளருக்கும்...
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஈரான் நாட்டைச் சேர்ந்த 6 பேருக்கு சவுதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சவுதி அரேபியாவின் உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: ஈரான் நாட்டைச் சேர்ந்த 6 பேர் போதைப் பொருட்களைக் கடத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அவர்களுக்கு மரண தண்டனையை வழங்கியது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்தபோது அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது....
வங்கதேசத்தில் தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட இந்து அர்ச்சகர் மற்றும் இஸ்கான் அமைப்பின் முன்னாள் தலைவர் சின்மயி கிருஷ்ண தாஸ்க்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. வங்கதேசத்தில் ஏற்பட்ட மாணவர் கலவரத்துக்குப் பின், பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா இந்தியா தப்பி வந்தார். அதன்பின் முகமது யூனஸ் தலைமையில் இடைக்கால அரசு பொறுப்பேற்றது. அப்போது முதல் இந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதனால் வங்கதேசத்தை விட்டு வெளியேறுவதற்காக டாக்கா விமான நிலையம்...