ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இல்​லம் மீது உக்ரைன் தாக்​குதல் நடத்​தி​ய​தாக கூறப்​படும் நிலை​யில் அதுகுறித்து பிரதமர் நரேந்​திர மோடி ஆழ்ந்த கவலை தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து பிரதமர் மோடி நேற்று வெளி​யிட்ட எக்ஸ் தள பதி​வில் கூறி​யுள்​ள​தாவது: ரஷ்ய அதிபரின் இல்​லம் மீது தாக்​குதல் நடத்​தப்​பட்​ட​தாக வரும் செய்​தி​கள் ஆழ்ந்த கவலையை ஏற்​படுத்​தி​யுள்​ளன. தற்​போது நடந்​து​கொண்​டிருக்​கும் போரை முடிவுக்கு கொண்டு வந்து அமை​தியை அடைவதற்​கான மிக சாத்​தி​ய​மான வழி​முறை ராஜதந்​திர முயற்​சிகள்...
ரஷ்யா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிறிஸ்துமஸ் மற்றும் 2026 புத்தாண்டு ஆகியவற்றுக்காக இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உள்ளிட்ட உலக தலைவர்களுக்கு அதிபர் புதின் தனது வாழ்த்துகளை கூறியுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா, காமன்வெல்த் நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் புதின் வாழ்த்துகளை தெரிவித்துள்ள அதே வேளையில் மாஸ்கோவுக்கு எதிரான உக்ரைன் போரில் மறைமுகமாக ஈடுபடும் ஐரோப்பிய நாடுகளை அவர் வாழ்த்துப் பட்டியலில்...
அமெரிக்க அதிபர் டொ​னால்டு ட்ரம்​புக்கு இஸ்​ரேலின் உயரிய குடிமகன் விரு​தான இஸ்​ரேல் அமை​தி விருது வழங்​கப்​படும் என்று இஸ்​ரேல் பிரதமர் பெஞ்​சமின் நெதன்​யாகு அறி​வித்​துள்​ளார். புளோரி​டா​வில் இரு நாடு​களின் தலை​வர்​களுக்​கும் இடையே நடை​பெற்ற சந்​திப்பை தொடர்ந்து இந்த அறி​விப்பு வெளி​யிடப்​பட்​டுள்​ளது. இதுகுறித்து பெஞ்​சமின் நெதன்​யாகு கூறுகை​யில், “இஸ்​ரேல் அமை​தி விருதை அமெரிக்க அதிபர் ட்ரம்​புக்கு வழங்க முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. இஸ்​ரேலிய மற்​றும் யூத மக்​களுக்கு அவர் ஆற்​றிய மகத்​தான பங்​களிப்​பிற்​காக இந்த...
வங்​கதேச முன்​னாள் பிரதமர் கலீதா ஜியா (80) நேற்று கால​மா​னார். ஆங்​கிலேயர் ஆட்​சிக் காலத்​தில் மேற்​கு​வங்​கத்​தின் ஜல்​பைகுரி​யில் கடந்த 1945-ம் ஆண்​டில் கலீதா பிறந்​தார். கடந்த 1947-ம் ஆண்​டில் இந்​தி​யா, பாகிஸ்​தான் நாடு​கள் உதய​மாகின. அப்​போது கலீ​தா​வின் குடும்​பம் பாகிஸ்​தான் எல்​லைக்கு உட்​பட்ட தினஜ்பூரில் குடியேறியது. கடந்த 1960-ம் ஆண்​டில் பாகிஸ்​தான் ராணுவ கேப்​டன் ஜியா​வூர் ரஹ்​மானை, கலிதா திரு​மணம் செய்​தார். அப்​போது அவருக்கு 15 வயது. கடந்த 1975 -ம்...
வங்​கதேசத்​தில் மாணவர் தலை​வர் ஷெரீப் உஸ்​மான் ஹாடி படு​கொலையை தொடர்ந்து இந்​துக்​கள் மற்​றும் பிற சிறு​பான்​மை​யினருக்கு எதி​ரான வன்​முறை அதி​கரித்​துள்​ளது. இதில் மைமன்​சிங் பகு​தி​யில் கடந்த 18-ம் தேதி தீபு சந்​திர தாஸ் என்ற இந்து இளைஞர் ஒரு கும்​பலால் அடித்​துக் கொல்​லப்​பட்​டார். இதையடுத்து அம்​ரித் மோண்​டல் என்ற இந்து இளைஞர் கொல்​லப்​பட்​டார். இந்​நிலை​யில் இந்து சமூகத்தை சேர்ந்த பஜேந்​திர பிஸ்​வாஸ் (42) என்​பவர் நேற்று முன்​தினம் சக ஊழியர் நோமன்...
அமைதி பேச்​சு​வார்த்​தைக்கு உக்​ரைனும், ரஷ்​யா​வும் நெருங்​கி​யுள்​ளன. இது சிக்​கலான​தாக இருக்​கும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறி​யுள்​ளார். ரஷ்யா-உக்​ரைன் இடையே அமை​தியை ஏற்​படுத்த அமெரிக்கா பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கிறது. இந்​நிலை​யில் உக்​ரைன் அதிபர் ஜெலன்​ஸ்கி அமெரிக்கா சென்று புளோரி​டா​வில் அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்​தித்​துப் பேசி​னார். அதற்கு முன்பாக ரஷ்ய அதிபர் புதினுடன், அதிபர் ட்ரம்ப் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரண்​டரை மணி நேரம் போனில் பேசி​னார். இரு தலை​வர்​களு​ட​னும் பேசி​ய...
வங்​கதேசத்​தில் இந்து சிறு​பான்​மை​யினர் மீது நடத்​தப்​படும் தாக்​குதலுக்கு அனைத்து இந்​திய ஷியா தனிச் சட்ட வாரியம் கடும் கண்​டனம் தெரி​வித்​துள்​ளது. அனைத்து இந்​திய ஷியா தனிச் சட்ட வாரி​யத்​தின் (ஏஐஎஸ்பிஎல்பி) வரு​டாந்​திர கூட்​டம் லக்​னோ​வில் நேற்று முன்தினம் நடை​பெற்​றது. இக்​கூட்​டத்​துக்​குப் பின்​னர் ஏஐஎஸ்பிஎல்பி பொதுச் செய​லா​ளர் மவுலானா யசூப் அப்​பாஸ் கூறிய​தாவது: வங்​கதேசத்​தில் இந்​துக்​களுக்கு எதி​ராக இழைக்கப்படும் கொடுமை​களை இந்​தக் கூட்​டம் வன்​மை​யாகக் கண்​டித்​தது. மேலும், அப்​பாவி மனிதர்​கள் யாரை​யும் கொல்​வதை...
வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 80. வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமரும், அந்நாட்டின் எதிர்க்கட்சியான வங்கதேச தேசியக் கட்சியின் தலைவருமான கலீதா ஜியா இன்று (டிச. 30) அதிகாலை காலமானார். நீண்டகாலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு டாக்காவிலுள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலை 6 மணியளவில் உயிரிழந்ததாக அவரது கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. கலீதா ஜியா, கல்லீரல்...
வங்​கதேசத்​தில் பிரோஜ்பூர் பகு​தி​யில் 5 இந்து குடும்பங்களின் வீடு​கள் நள்​ளிர​வில் தீ வைத்து எரிக்​கப்​பட்​டன. வங்​கதேசத்​தில் கடந்த ஆண்டு ஆட்சி மாற்​றம் ஏற்​பட்​டது. இதன்​ பிறகு அந்த நாட்​டில் வசிக்​கும் இந்​துக்​கள் மீதான தாக்​குதல்​கள் அதி​கரித்து வரு​கின்​றன. இது​வரை சுமார் 2,500-க்​கும் மேற்​பட்ட தாக்​குதல்​கள் நடை​பெற்​றுள்​ளன. சுமார் 150-க்​கும் மேற்​பட்ட இந்து கோயில்​கள் இடிக்​கப்​பட்டு உள்​ளன. சுமார் 25 இந்​துக்​கள் கொலை செய்​யப்​பட்டு உள்​ளனர். இந்த சூழலில் வங்​கதேச மாணவர் அமைப்​பின்...
இந்​தோனேசி​யா​வில் உள்ள முதி​யோர் இல்​லத்​தில் ஞாயிற்​றுக் ​கிழமை மாலை ஏற்​பட்ட தீ விபத்​தில் சிக்கி 16 முதியவர்​கள் உயி​ரிழந்த சம்​பவம் சோகத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது. இதுகுறித்து வடக்கு சுல​வேசி காவல் துறை செய்​தித் தொடர்​பாளர் அலாம்​சியா ஹசிபு​வான் நேற்று கூறிய​தாவது: இந்தோனேசி​யா​வின் சுல​வேசி மாகாணத்​தில் உள்ள மனாடோவில் உள்ள முதி​யோர் இல்​லத்​தில் ஞாயிற்​றுக் ​கிழமை இரவு தீவிபத்து ஏற்​பட்​டுள்​ளது. இதில் அங்கு தூங்​கிக்​கொண்டிருந்த 16 முதி​ய​வர்​கள் உடல் கருகி உயி​ரிழந்​தனர். உயிர்பிழைத்த...