Google search engine
இஸ்ரேல், ஹ​மாஸ் குழு​வினர் இடையே போர் நிறுத்த ஒப்​பந்​தம் கையெழுத்​தாகி உள்​ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரி​வித்​துள்​ளார். கடந்த 2023-ம் ஆண்டு அக்​டோபர் மாதம் முதல் இஸ்​ரேல் ராணுவம், ஹமாஸ் குழு​வினர் இடையே போர் நடை​பெற்று வந்​தது. இந்த போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அண்​மை​யில் 20 அம்ச திட்​டத்தை முன்​வைத்​தார். இதுதொடர்​பாக எகிப்​தின் ஷர்ம் எல் ஷேக் நகரில் இஸ்​ரேல் அரசு, ஹமாஸ் குழு​வினர்...
கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் 30-ம் தேதி கத்தார் ஏர்வேஸ் விமானம், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து கொழும்புவுக்கு புறப்பட்டது. அதில், 85 வயதான அசோகா ஜெயவீரா என்பவர் பயணம் செய்தார். இவர் தெற்கு கலிபோர்னியாவில் இதயவியல் மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து கொழும்பு செல்ல 15 மணி நேரமாகும். பயணத்தின் போது சைவ உணவு வழங்க வேண்டும் என்று டிக்கெட் முன்பதிவு...
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், வேறு எந்த நாட்​டுக்​கும் இல்​லாத வகை​யில் இந்​திய பொருட்​களுக்கு 50% வரி விதித்​துள்​ளார். இதனால் இரு நாடு​களுக்​கிடையே வர்த்தக ஒப்​பந்​தம் ஏற்​படு​வ​தில் தாமதம் ஏற்​பட்டு வரு​கிறது. இந்​நிலை​யில், தேபோரா ராஸ் மற்​றும் ரோ கண்ணா தலை​மையி​லான அமெரிக்க எம்​.பி.க்​கள் 21 பேர் அதிபர் ட்ரம்​புக்கு எழு​தி​யுள்ள கடிதத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: உலகிலேயே மிகப்​பெரிய ஜனநாயக நாடான இந்​தியா அமெரிக்​கா​வின் நெருங்​கிய கூட்​டாளி​யாக உள்​ளது. அமெரிக்க நிறு​வனங்​கள் செமிகண்​டக்​டர்,...
 உலோக-கரிம கட்​டமைப்பை உரு​வாக்​கிய ஜப்​பான், ஆஸி மற்​றும் அமெரிக்க ஆராய்ச்​சி​யாளர்​கள் 3 பேருக்கு வேதி​யியலுக்​கான நோபல் பரிசு அறி​விக்கப்பட்டுள்​ளது. இந்​தாண்​டுக்​கான நோபல் பரிசுகள் அறிவிக்​கப்​பட்டு வரு​கிறது. மருத்​துவம் மற்​றும் இயற்​பியலுக்​கான நோபல் பரிசுகள் அறிவிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில் வேதி​யியலுக்​கான நோபல் பரிசும் அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. ஜப்​பானின் கியோட்டோ பல்​கலைக்​கழகத்​தின் வேதி​யியல் பேராசிரியர் சுசுமு கிடாக​வா, மெல்​போர்ன் பல்​கலைக்​கழக பேராசிரியர் ரிச்​சர்ட் ராப்​சன் மற்​றும் கலி​போர்​னியா பல்​கலைக்​கழக பேராசிரியர் உமர் எம். யாகி ஆகியோர்...
 மியான்​மரில் மக்​களால் தேர்ந்​ தெடுக்​கப்​பட்ட ஆட்​சியை விரட்டி விட்​டு, கடந்த 2021-ம் ஆண்டு நாட்டை ராணுவம் கைப்​பற்​றியது. இதையடுத்து ராணுவத்தை எதிர்த்து கிளர்ச்சி​யாளர்​கள் போராட்​டம் நடத்தி வரு​கின்றனர். அவர்​களை ஒடுக்க ராணுவ​மும் தாக்​குதல் நடத்தி வரு​கிறது. இந்​நிலை​யில், பவுர்​ணமியை முன்​னிட்டு கடந்த திங்​கட்​கிழமை மத்​திய மியான்​மரில் உள்ள சவுங் யூ நகரில் புத்த மதத்​தினர் ஏராள​மானோர் கூடி விழா கொண்​டாடினர். அப்​போது புத்த மதத்​தினர் கூடி​யிருந்த பகு​திகளில் ராணுவத்​தினர் பாராகிளைடர்...
அக்.10, 2025... இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படும் நாள். அது, ஏற்கெனவே 7 போர்களை நிறுத்தியதாக முழங்கி வரும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு அறிவிக்கப்படுமா என்ற விவாதங்கள் எழுந்து ஓய்ந்துவிட்டன. இந்நிலையில், ட்ரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு இப்போது இல்லாவிட்டாலும் அடுத்த முறை கிடைப்பதற்கு சாத்தியம் இருப்பதாக சில தரப்பும், அப்படி நடந்தால் அது அந்தப் பரிசுக்கே அவமதிப்பு என்று சிலரும் இப்போது கருத்து...
அமெரிக்​கா, பிரிட்​டன், பிரான்ஸை சேர்ந்த 3 விஞ்​ஞானிகளுக்கு இயற்​பியலுக்​கான நோபல் பரிசு அறிவிக்​கப்​பட்டு உள்​ளது. மருத்​து​வம், இயற்​பியல், வேதி​யியல், இலக்​கி​யம், அமை​தி, பொருளா​தா​ரம் ஆகிய துறை​களில் சாதனை படைப்​போருக்கு ஆண்​டு​தோறும் நோபல் பரிசு வழங்​கப்​படு​கிறது. மருத்​துவ நோபல் பரிசு நேற்று முன்​தினம் அறிவிக்​கப்​பட்​டது. இதைத் தொடர்ந்து இயற்​பியலுக்​கான நோபல் பரிசு விவரங்​களை ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்​சஸ் அமைப்பு சுவீடன் தலைநகர் ஸ்டாக்​ஹோமில் நேற்று வெளி​யிட்​டது. அமெரிக்​காவை சேர்ந்த ஜான்...
இஸ்​ரேல் அரசு, ஹமாஸ் குழு​வினர் இடையே எகிப்​தில் அமை​திப் பேச்​சு​வார்த்தை நடை​பெறுகிறது. இந்த பேச்​சு​வார்த்​தை​யில் முன்​னேற்​றம் ஏற்​பட்​டிருப்​பதாக தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன. இஸ்​ரேல் ராணுவம் மற்​றும் காசா​வின் ஹமாஸ் குழு​வினர் இடையே கடந்த 2 ஆண்​டு​களாக போர் நீடித்து வரு​கிறது. இந்த போருக்கு முற்​றுப்​புள்ளி வைக்க அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 20 அம்ச திட்​டத்தை முன்​மொழிந்​துள்​ளார். போரி​னால் பாதிக்​கப்​பட்​டுள்ளகாசா மீண்​டும் கட்டி எழுப்​பப்​படும். அந்த பகு​தி​யில் இருந்து தீவிர​வாதம்...
மருத்துவத்துக்கான நோபல் பரிசு, நோய் எதிர்ப்புத் தன்மை தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக மேரி இ பிரன்கோவ், ஃப்ரெட் ராம்ஸ்டெல், ஷிமோன் சகாகுச்சி ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிக உயர்ந்த விருதாகக் கருதப்படும் நோபல் பரிசு, மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான நோபல் பரிசை வெல்பவர்கள் குறித்த அறிவிப்பு...
ஆப்​பிரிக்​கா​வின் தெற்கு பகு​தி​யில் உள்ள எஸ்​வாட்​டினி நாட்​டின் அரச பரம்​பரை​யில் வந்​தவர் மெஸ்​வாட்​டி-3. பரம்​பரை வழி அரச​ரான மெஸ்​வாட்டி, கடந்த ஜூலை மாதம் தனது 15 மனை​வி​கள், 100 உதவி​யாளர்​கள் புடைசூழ தனி விமானத்​தில் அபுதாபியில் வந்​திறங்​கி​னார். அங்கு அவருக்கு உற்​சாக வரவேற்பு அளிக்​கப்​பட்​டது. தற்​போது அரச​ராக உள்ள மெஸ்​வாட்​டி​யின் தந்தை சோபு​சா-2-வுக்கு 125 மனை​வி​கள் என்ற விஷய​மும் தற்​போது தெரிய​வந்​துள்​ளது. 15 மனை​வி​களு​டன் அரசர் மெஸ்​வாட்டி வந்​திறங்​கிய வீடியோ...