பிரதமர் மோடி வலிமையான தலைவர், அவரை எனக்கு பிடிக்கும். தாமதமாகி கொண்டிருக்கும் வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியாவும், அமெரிக்காவும் கையெழுத்திடும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.
இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதில் நீண்ட தாமதம் ஏற்பட்டு வருகிறது. ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்கியதால், அமெரிக்கா 50 சதவீத வரி விதித்தது. அமெரிக்காவிடம் இருந்து சோளம் மற்றும் சோயாபீன்ஸ் ஆகியவற்றை இறக்குமதி செய்ய வேண்டும் என...
சர்வதேச அமைதிக்கு இரு நாடுகள் இடையே வலுவான உறவு அவசியம்: ஜப்பான் புதிய பிரதமரிடம் மோடி தகவல்
admin - 0
சர்வதேச அமைதிக்கும் ஸ்திரத்தன்மைக்கும் இந்தியா, ஜப்பான் உறவு வலுவாக இருப்பது அவசியம் என்று புதிதாக பதவியேற்றுள்ள ஜப்பான் பிரதமர் சனே தகைச்சியிடம் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஜப்பான் நாட்டின் புதிய மற்றும் முதல் பெண் பிரதமராக சனே தகைச்சி கடந்த 21-ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி ஏற்கெனவே எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சனே தகைச்சி பிரதமராக...
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசினை வழங்க ஜப்பானின் புதிய பிரதமர் சனே தகைச்சி ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஆசியாவில் பயணம் மேற்கொண்டு வரும் டொனால்டு ட்ரம்ப், மலேசியாவில் நடைபெற்ற ஆசியான் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். அங்கு, தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்பட அவர் மத்தியஸ்தம் செய்தார். இதையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதனைத் தொடர்ந்து ஜப்பான் சென்ற ட்ரம்ப், அந்நாட்டின் புதிய...
ஹமாஸ் படையினரின் போர் நிறுத்த ஒப்பந்த விதிமீறலுக்கு பதிலடியாக காசா மீது சக்திவாய்ந்த தாக்குதல் நடத்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார்.
தெற்கு காசாவில் தங்கள் படைகள் மீது ஹமாஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்றத்தின் எதிரொலியாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பாதுகாப்பு ஆலோசனைகளைத் தொடர்ந்து, காசா பகுதியில் உடனடியாக பலத்த தாக்குதல்களை நடத்துமாறு...
பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் கடந்த சில ஆண்டுகளாக எல்லையில் அவ்வப்போது போரில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த மாதம் மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கத்தார் நாட்டில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையின்படி தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டது.
அடுத்த கட்டமாக துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் கடந்த சில நாட்களாக இரு நாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தை...
அம்மாவின் பிறந்தநாளை அடிப்படையாக வைத்து வாங்கிய டிக்கெட்: யுஏஇ லாட்டரியில் இந்தியருக்கு ரூ.240 கோடி பரிசு
admin - 0
யுஏஇ லாட்டரியில் இந்திய ருக்கு ரூ.240 கோடி பரிசு கிடைத்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தைச் (யுஏஇ) சேர்ந்த தி கேம் எல்எல்சி என்ற நிறுவனம் பல்வேறு வகையான லாட்டரிகளை நடத்தி வருகிறது.
இந்த யுஏஇ லாட்டரியின் குலுக்கல் கடந்த 18-ம் தேதி நடைபெற்றது இதில் முதல் பரிசு பெற்றவரின் விவரம் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதன்படி இந்தியாவைச் சேர்ந்த அனில் குமார் பொல்லாவுக்கு (29), ரூ.240 கோடி முதல் பரிசு...
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரபை பெரும் தொகை கொடுத்து வாங்கினோம் என்று அமெரிக்க உளவுத் துறை முன்னாள் அதிகாரி ஜான் கிரியாகோ தெரிவித்துள்ளார்.
அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ-வின் முன்னாள் அதிகாரியான அவர், இந்திய செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: பாகிஸ்தான் அரசுடனான அமெரிக்காவின் உறவு மிகவும் சிறப்பாக உள்ளது. குறிப்பாக அந்த நாட்டின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் ஆட்சிக் காலத்தில் இரு நாடுகள் இடையிலான...
அமெரிக்க வரலாற்றில் பெண் அதிபர் நிச்சயம் இடம்பிடிப்பார் என தான் எதிர்பார்ப்பதாக ஜனநாயக கட்சியின் முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ் கூறியுள்ளார்.
அண்மையில் சர்வதேச ஊடக நிறுவனம் ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்தார். அதில் இது குறித்து பேசியுள்ளார். கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப்பை எதிர்த்து கமலா ஹாரிஸ் போட்டியிட்டார். தேர்தலில் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அப்போதைய அதிபர் ஜோ பைடன் பாதியில்...
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள புகழ்பெற்ற அருங்காட்சிகம் லூவ்ரே.
கடந்த வாரம் கிரேன் ஒன்றின் உதவி மூலம், மியூசியத்தின் மேல்மாடி ஜன்னல் வழியாக நுழைந்த கொள்ளையர்கள் மன்னர் நெப்போலியன் காலத்து கிரீடம் மற்றும் பிரெஞ்சு ராணிகள் அணிந்த நெக்லஸ் உட்பட 8 விலை உயர்ந்த நகைகளை கொள்ளையடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர். இவற்றின் மொத்த மதிப்பு 102 மில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாரீஸ் சிறப்பு படை...
ஆன்லைனில் பெண்களுக்கான ஜிகாதி படிப்பை ஜெய்ஷ்-இ-முகம்மது தொடங்கியுள்ளது.
காஷ்மீரை இந்தியாவில் இருந்து பிரித்து பாகிஸ்தானுடன் இணைக்கும் நோக்கத்துடன் கடந்த 2000-ம் ஆண்டு ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பு தொடங்கப்பட்டது. கடந்த 1999-ம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டபோது இந்தியாவால் விடுவிக்கப்பட்ட 3 தீவிரவாதிகளில் ஒருவரான மவுலானா மசூத் அசார் இந்த அமைப்பை தொடங்கினார்.
2001-ம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதல், 2019-ம் ஆண்டு புல்வாமா தாக்குதல் உள்ளிட்ட கொடூர தாக்குதல்களை இந்த அமைப்பு நடத்தியுள்ளது....








