ஈரானில் அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்ததால் கைது செய்யப்பட்ட ஒரு இளம்பெண் (மோர்டிசியா ஆடம்ஸ்) சித்ரவதைக்கு ஆளாகி, கனடாவுக்கு தப்பிச் சென்றுள்ளார்.
கனடாவில் வசிக்கும் அந்த இளம்பெண், கடந்த ஜனவரியில் ஈரான் தலைவர் காமேனிக்கு எதிராக கனடாவில் நடந்த பேரணியில் பங்கேற்ற வீடியோவை நேற்று எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அத்துடன், ‘‘உன் (காமேனி) கல்லறையின் மேல் நாங்கள் நடனமாடுவோம் என்று நான் சொன்னேன் அல்லவா?’’ என எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உள்ளார்.
மற்றொரு...
லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு பகுதியில் புறநகர் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதை அந்நாட்டின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. முன்னதாக, லெபனான் புரட்சி படையான ஹிஸ்புல்லா, ஈரான் உச்ச தலைவர் கமேனி மரணத்தை அடுத்து இஸ்ரேல் மீது ராக்கெட் மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தியது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கூட்டாக இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர்...
ஈரானில் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டதால், அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் அதிகபட்ச அதிகாரம் வைத்திருந்த மதத் தலைவர் காமேனி கொல்லப்பட்டார். இதனால் அடுத்த தலைவர் யார் என்று கேள்வி எழுந்துள்ளது. தனக்குப் பின்னர் இவர்தான் வாரிசு என்று காமேனி பகிரங்கமாக யாரையும் அறிவிக்கவில்லை.
ஆனால், அவருடைய 2-வது மகன் மோஜ்தபா காமேனிதான் அடுத்த தலைவராக வருவார் என்று கூறப்படுகிறது....
அமெரிக்க மற்றும் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த ஈரான் தலைவர் காமேனி கடந்த 1980 மற்றும் 1981-ம் ஆண்டுகளில் காஷ்மீர் மற்றும் கர்நாடகாவில் பயணம் செய்துள்ளார்.
ஈரான் உச்ச தலைவராவதற்கு முன்பே அயத்துல்லா அலிகாமேனி கடந்த 1980-ம் ஆண்டு காஷ்மீர் வந்துள்ளார். அப்போது காஷ்மீரில் சன்னி மற்றும் ஷியா முஸ்லிம்கள் இடையே பகைமை நிலவி வந்தது. அப்போது காஷ்மீரின் ஸ்ரீநகருக்கு வந்த அயத்துல்லா அலி காமேனி, சன்னி மசூதியில் நடைபெற்ற வெள்ளிக்...
‘ரோரிங் லயன்’ என்ற பெயரில் இஸ்ரேலும், ‘எபிக் ஃப்யூரி’ என்ற பெயரில் அமெரிக்காவும் ஒன்றிணைந்து நடத்திய தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் காமேனி, ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் முன்னாள் செயலாளர் அலி சம்கானி, ஈரான் ராணுவ கமாண்டர் முகமது பக்போர் ஆகியோர் இறந்தனர்.
இந்த தாக்குதலில் அயத்துல்லா அலி காமேனியின் மகள், மருமகன், பேத்தி ஆகியோரும் இறந்தனர். இதேபோல் ஈரானின் இஸ்ஃபாகன் மற்றும் சிராஸ் ஆகிய முக்கிய பகுதிகளிலும்...
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இரு நாடுகளும் எல்லையில் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் ஆப்கானிஸ்தான் மீது பகிரங்க போர் என்று பாகிஸ்தான் அமைச்சர் அறிவித்துள்ளார்.
கடந்த 2021-ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் அரசை தலிபான்கள் கைப்பற்றினர். அப்போது முதலே பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே மோதல் நடைபெறுகிறது. பாகிஸ்தானில் நடைபெற்ற சில தீவிரவாத தாக்குதல்களுக்கு தலிபான்கள்தான் காரணம் என்று பாகிஸ்தான் குற்றம் சாட்டியது. அதற்கு பதிலடியாக ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான்...
கனடா பிரதமர் மார்க் கார்னி 4 நாட்கள் அரசு முறை பயணமாக இன்று இந்தியா வருகிறார். இந்தியா - கனடா இடையே நெருங்கிய நட்புறவு நீடித்து வந்தது. ஆனால் கனடா முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆட்சிக்காலத்தில் கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் 18-ம் தேதி கனடாவை சேர்ந்த காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த கொலையில் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தொடர்பு...
‘பாகிஸ்தானுக்கு சர்வதேச நிதியம் வழங்கிய நிதியை விட காஷ்மீர் வளர்ச்சிக்கான பட்ஜெட் 2 மடங்கு அதிகம்’
admin - 0
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் 61-வது கூட்டத்தில் காஷ்மீர் விவகாரம் குறித்து பேசிய பாகிஸ்தான், ஜம்மு காஷ்மீர் வளர்ச்சி குறித்து தவறான தகவல்களை கூறியது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய பிரதிநிதி அனுபமா சிங் பேசியதாவது: காஷ்மீரில் கடந்தாண்டு திறக்கப்பட்ட உலகின் மிக உயரமான ரயில் பாலம் போலி என்றால், பாகிஸ்தான் மாயா ஜால உலகில் இருப்பது போல் உள்ளது. பொறாமை காரணமாக பாகிஸ்தான் தொடர்ச்சியாக பொய் தகவல்களை...
எப்ஸ்டீன் கோப்புகளில் 2 இளம்பெண்களுடன் இருக்கும் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் புகைப்படம் வெளியாகி சர்ச்சை
admin - 0
மறைந்த புகழ்பெற்ற வான் இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங், 2 இளம்பெண்களுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கடத்தி பணக்காரர்களுக்கு போகப் பொருளாக விநியோகித்து வந்தவர் அமெரிக்க தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன்.
இதற்காக அவர் தனி தீவையே வாங்கி வைத்திருந்தார். கடந்த 2019-ல் கைதாகி சில மாதங்களிலேயே நியூயார்க் சிறையில் அவர் தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே, எப்ஸ்டீன் தனது வாடிக்கையாளர்களுடனான உரையாடல்கள், புகைப்படங்கள்,...
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் மற்றும் அந்நாட்டின் இரண்டு மாகாணங்கள் மீது வெள்ளிக்கிழமை அன்று வான்வழி தாக்குதலில் பாகிஸ்தான் ஈடுபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை ஆப்கானிஸ்தான் அரசு செய்தித் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.
முன்னதாக, பாகிஸ்தான் மேற்கொண்ட தாக்குதலுக்கு வியாழக்கிழமை அன்று ஆப்கானிஸ்தான் ராணுவம் பதிலடி கொடுத்தது. இதில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 55 பேர் உயிரிழந்ததாக ஆப்கானிஸ்தான் தெரிவித்தது. மேலும், தங்கள் நாட்டு வான் பரப்புக்குள் நுழைந்த பாகிஸ்தான்...










