2023-ஆம் ஆண்டுக்கான அமைதி நோபல் பரிசை வென்ற மனித உரிமைப் போராளி நர்கெஸ் முகமதியை, ஈரானிய பாதுகாப்புப் படையினர் இன்று கைது செய்தனர்.
அண்மையில் காலமான ஒரு வழக்கறிஞரின் நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்கு நர்கெஸ் முகமதிசென்றபோது, இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஈரான் அதிகாரிகள் நர்கெஸ் முகமதியை பலவந்தமாகப் பிடித்துச் சென்றதாக அவருடைய ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது.
நர்கெஸ் முகமதி,...
குறைந்தபட்சம் 10 லட்சம் அமெரிக்க டாலர் கட்டணம் செலுத்தி விரைவாக விசா பெருவதற்கான கோல்டு கார்டு திட்டத்தை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடங்கிவைத்தார்.
அமெரிக்காவில் வெளிநாட்டவர்கள் குடியேறுவதைக் கட்டுப்படுத்தவும், குடியுரிமை பெறுவதைக் கட்டுப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை அதிபர் ட்ரம்ப் எடுத்து வருகிறார். இதனால், அமெரிக்காவில் வசித்து வந்த இந்தியர்கள் உட்பட பல வெளிநாட்டினர் நாடு கடத்தப்பட்டனர். பல அமெரிக்க நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களும் வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர்.
இந்நிலையில்,...
மியான்மரில் ராணுவத்துக்கும், கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், மருத்துவமனை மீது ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 34 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 80க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ரகைன் மாகாணத்தின் மிராக்-யூ நகரில் உள்ள அரசு பொது மருத்துவமனையை குறிவைத்து, ஆளும் மியான்மர் ராணுவத்தின் போர் விமானம் புதன்கிழமை இரவு வான்வழி தாக்குதல் நடத்தியதாக மியான்மர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அராக்கன் படை எனப்படும் கிளர்ச்சி...
பாதுகாப்பு, எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்து பிரதமர் மோடி – அதிபர் ட்ரம்ப் முக்கிய ஆலோசனை
admin - 0
எரிசக்தி, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்து பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொலைபேசியில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்திய பொருட்களுக்கு அமெரிக்க அரசு முதலில் 25 சதவீத வரி விதித்தது. இதைத் தொடர்ந்து, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதாக குற்றம் சாட்டி கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி இந்திய பொருட்களுக்கு மேலும் 25 சதவீத வரி விதிக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக இந்திய பொருட்களுக்கு அமெரிக்க...
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு உட்பட்டோருக்கு சமூக வலைதள தடை – ஆதரவும் எதிர்ப்பும் வலுப்பது ஏன்?
admin - 0
‘அவர்கள் குழந்தைகளாகவே இருக்கட்டும்’ (Let Them Be Kids) என்ற தலைப்பில் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் ஒரு மிகப் பெரிய பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு சர்வதேச கவனத்தை ஈர்த்தது. அதன் எதிரொலியாகத்தான் இப்போது, ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை செய்யும் சட்டம் அமலாகியுள்ளது.
கடந்த ஆண்டு நடந்த போராட்டங்களைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் 16 வயதுக்கு உட்பட்டோர் சமூக வலைதளப் பயன்படுத்துவதற்கான தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
ஆஸ்திரேலியாவில்...
இந்தியா - பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன் என்று மீண்டும் கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். ஏற்கெனவே அவர் இவ்வாறாக 70 முறை கூறிவிட்டதாக விமர்சனங்கள் உள்ள நிலையில் அதை உறுதிப்படுத்துவது போலவே மீண்டும் அதனைக் கூறியுள்ளார் ட்ரம்ப்.
பென்சில்வேனியா மாகாணத்தில் நடந்த ஒரு பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய ட்ரம்ப் கூறியதாவது: கடந்த 10 மாதங்களில் நான் 8 போர்களை நிறுத்தியுள்ளேன். கொசோவா - செர்பியா, பாகிஸ்தான்...
ஆப்பிரிக்கர்கள் அருவருப்பானவர்கள் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பென்சில்வேனியாவில் நடைபெற்ற பேரணியில் ட்ரம்ப் கூறியதாவது: ”சோமாலியாவைச் சேர்ந்தவர்கள் அருவருப்பானவர்கள். பொதுவாக ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இங்கு குடிபெயர்ந்தவர்கள் அனைவருமே குப்பைகள் தான். அவர்கள் அமெரிக்காவுக்கு தேவையில்லை.
அதற்கு பதிலாக நார்வே, ஸ்வீடனிலிருந்து வருபவர்களை நாம் ஏன் ஏற்க கூடாது? உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் டென்மார்க்கிலிருந்து சில நல்லவர்களை எங்களுக்கு அனுப்புங்கள்.
சோமாலியா பேரழிவை ஏற்படுத்தும் இடம்....
‘‘இந்திய பொருட்களுக்கு ஏற்கெனவே 50 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், அரிசிக்கு கூடுதலாக வரி விதிக்கப்படும்’’ என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
உக்ரைன் மீது போர் தொடுக்கும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா நிர்பந்தித்து வருகிறது. அதை மீறி தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்குவதால், இந்திய பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி அமெரிக்காவுக்கு...
பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதை கருத்தில் கொண்டு கூடுதலாக மேலும் ரூ.10,780 கோடி கடனுதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எப்) ஒப்புதல் அளித்துள்ளது.
பாகிஸ்தான் இதுவரை காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்ததை அடுத்து தற்போது அதில் இருந்து படிப்படியாக மீண்டு வருகிறது.
இதுகுறித்து ஐஎம்எப் வெளியிட்ட அறிக்கையில், “பாகிஸ்தானின் பொருளாதார திட்டங்கள் குறித்த இரண்டு மதிப்பாய்வுகளை ஐஎம்எப் நிர்வாக குழு நிறைவு செய்துள்ளது.
பாகிஸ்தானின் பிரதான கடன்...
சீனாவின் சொத்து மேலாண்மை நிறுவனம் ஒன்றின் முன்னாள் நிர்வாகியை ஊழல் குற்றச்சாட்டில் சீன அரசு நேற்று தூக்கிலிட்டது.
சீனா ஹுவாரோங் சொத்து மேலாண்மை நிறுவனத்தின் துணை நிறுவனமாக 'சீனா ஹுவாரோங் இன்டர்நேஷனல் ஹோல்டிங்ஸ் (சிஎச்ஐஎச்)’ உள்ளது. இதன் பொது மேலாளராக இருந்தவர் பாய் தியான்ஹுய். இவர் 2014 முதல் 2018 வரை திட்டங்களை செயல்படுத்துவதில் 15.6 கோடி டாலர் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இதில் அவர் குற்றவாளி என...
