காங்கோ நாட்டில் ஏற்பட்ட சுரங்க விபத்தில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். ஏராளமானோரை காணவில்லை.
ஆப்பிரிக்க கண்டத்தின் மத்திய பகுதியில் உள்ள காங்கோ நாட்டில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நீடித்து வருகிறது. சுமார் 120-க்கும் மேற்பட்ட கிளர்ச்சிக் குழுக்கள் காங்கோவின் பல்வேறு பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளன.
காங்கோவின் வடக்குப் பகுதியில் எம்23 என்ற கிளர்ச்சிக் குழு செயல்படுகிறது. இந்த குழு கோமா,...
சீன அதிபர் ஜி ஜின்பிங் அந்த நாட்டின் மத்திய ராணுவ கமிஷனின் (சிஎம்சி) தலைவராக செயல்படுகிறார். இந்த கமிஷனின் கட்டுப்பாட்டின் கீழ் சீன ராணுவம், கடற்படை, விமானப்படை, ஏவுகணைப் படை ஆகியவை செயல்படுகின்றன.
சிஎம்சி அமைப்பின் துணைத் தலைவராக ஜாங் யூக்ஸியா பதவி வகித்து வந்தார். ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் சில நாட்களுக்கு முன்பு அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். சிஎம்சி அமைப்பின் பணியாளர் பிரிவு தலைவராக பணியாற்றிய லீயு...
பலுசிஸ்தானில் 200க்கும் மேற்பட்டோர் படுகொலை | பாக். ராணுவம் – தீவிரவாதிகள் இடையே தொடரும் மோதல்
admin - 0
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பாதுகாப்புப் படைகளுக்கும் பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்துக்கும் இடையே கடந்த சில நாட்களாக நடந்து வரும் சண்டையில் இருதரப்பிலும் இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் தனி நாடாக பிரிந்தபோது, பலுசிஸ்தான் பலூச் மன்னரின் கீழ் தனி நாடாக இருந்து வந்தது. அதன் பின்னர், பாகிஸ்தான் அதனை தன்னோடு இணைத்துக்கொண்டது. அது முதல், அங்கு அடிக்கடி மோதல் நிலவி வருகிறது.
இந்நிலையில், பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் எனும் அமைப்பு,...
அரசு வீட்டு வசதி திட்டத்தில் நிலம் ஒதுக்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து டாக்கா சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அரசு வீட்டு வசதி திட்டத்தின் மூலம் 7,200 சதுர அடி கொண்ட இரண்டு மனைகள் ஒதுக்கியதில் விதிகள் மீறப்பட்டு, முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி வங்கதேச ஊழல் தடுப்பு ஆணையம் ஷேக் ஹசீனா, அவரது மருமகன்...
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான உறவு கடந்த ஓர் ஆண்டுகாலமாக சுமுகமானதாக அமையவில்லை. வரி விதிப்பு, வர்த்தக உறவு என பல்வேறு காரணங்கள் இதன் பின்னணியில் உள்ளன. இந்த சூழலில் திங்கட்கிழமை (பிப்.2) அன்று இந்தியாவுக்கான இறக்குமதி வரியை 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்தார்.
இந்த அறிவிப்புக்கு முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி உடன் ட்ரம்ப் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டிருந்தார்....
தமிழக கோயில்களில் இருந்து கடத்தப்பட்ட நடராஜர், சோமாஸ்கந்தர், சுந்தரர் சிலைகளை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்கா முடிவு
admin - 0
தமிழக கோயில்களில் இருந்து கடத்தப்பட்ட நடராஜர் வெண்கல சிலை உட்பட 3 சிலைகளை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்க அருங்காட்சியகம் ஒப்புக் கொண்டுள்ளது.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் ‘ஸ்மித்சோனியன் தேசிய அருங்காட்சியகம்’ உள்ளது. இந்த அருங்காட்சியகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தியாவின் தமிழகக் கோயில்களில் இருந்து சட்டவிரோதமாகக் கடத்தப்பட்ட 3 வெண்கல சிலைகளை திருப்பி ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 10-ம் நூற்றாண்டை சேர்ந்த ஷிவா நடராஜர் சிலை, 12-ம் நூற்றாண்டை சேர்ந்த...
சீனாவுடன் வர்த்தகம் செய்ய கனடா ஒப்பந்தம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இந்த ஒப்பந்தப்படி கனடா வர்த்தகத்தில் ஈடுபட்டால், கனடா பொருட்களுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும் என எச்சரித்தார்.
இந்நிலையில் அமெரிக்காவின் கல்ப்ஸ்ட்ரீம் ஏரோஸ்பேஸ் நிறுவன விமானங்களுக்கு,கனடா அங்கீகாரம் வழங்கவில்லை என்றால், அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் கனடா தயாரிப்பு விமானங்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
மேலும்,...
இன்று (ஜனவரி 31) காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் பல குழந்தைகள் உட்பட குறைந்தது 30 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக காசாவில் உள்ள மருத்துவமனைகள் தெரிவித்தன. இது அக்டோபர் மாத போர்நிறுத்தத்திற்குப் பிறகு ஏற்பட்ட மிக உயர்ந்த உயிரிழப்புகளில் ஒன்றாகும்.
இந்தத் தாக்குதல்கள் காசா முழுவதும் உள்ள இடங்களில் நடந்துள்ளது. கான் யூனிஸில் உள்ள முகாமில் நடந்த தாக்குதல் தீ விபத்தை ஏற்படுத்தியதாகவும், இதில் ஒரு தந்தை, அவரது மூன்று...
காங்கோ நாட்டில் ஏற்பட்ட சுரங்க விபத்தில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். ஏராளமானோரை காணவில்லை.
ஆப்பிரிக்க கண்டத்தின் மத்திய பகுதியில் உள்ள காங்கோ நாட்டில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நீடித்து வருகிறது. சுமார் 120-க்கும் மேற்பட்ட கிளர்ச்சிக் குழுக்கள் காங்கோவின் பல்வேறு பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளன.
காங்கோவின் வடக்குப் பகுதியில் எம்23 என்ற கிளர்ச்சிக் குழு செயல்படுகிறது. இந்த குழு கோமா,...
சீன அதிபர் ஜி ஜின்பிங் அந்த நாட்டின் மத்திய ராணுவ கமிஷனின் (சிஎம்சி) தலைவராக செயல்படுகிறார். இந்த கமிஷனின் கட்டுப்பாட்டின் கீழ் சீன ராணுவம், கடற்படை, விமானப்படை, ஏவுகணைப் படை ஆகியவை செயல்படுகின்றன.
சிஎம்சி அமைப்பின் துணைத் தலைவராக ஜாங் யூக்ஸியா பதவி வகித்து வந்தார். ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் சில நாட்களுக்கு முன்பு அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். சிஎம்சி அமைப்பின் பணியாளர் பிரிவு தலைவராக பணியாற்றிய லீயு...
