அஜித்குமார் விசாரணை அறிக்கை உயர் நீதிமன்றத்தில் நாளை தாக்கல்: பல உண்மைகள் வெளியாகும் என எதிர்பார்ப்பு

0
54

தனிப்​படை போலீ​ஸார் தாக்​கிய​தில் உயி​ரிழந்த மடப்​புரம் கோயில் காவலாளி அஜித்​கு​மார் கொலை வழக்கு தொடர்​பாக விசா​ரணை நடத்​திய மதுரை மாவட்ட நீதிப​தி, தனது அறிக்​கையை நாளை தாக்​கல் செய்​கிறார்.

சிவகங்கை மாவட்​டம் திருப்​புவனம் அருகே மடப்​புரம் பத்​ர​காளி அம்​மன் கோயில் காவலாளி அஜித்​கு​மாரிடம், நகை திருட்டு தொடர்​பாக போலீ​ஸார் விசா​ரணை நடத்​தினர். அப்​போது அஜித்​கு​மார் மற்​றும் அவரது சகோ​தரர் நவீன்​கு​மார் ஆகியோரை போலீ​ஸார் தாக்​கி​யுள்​ளனர். பின்​னர் நவீன்​கு​மாரை விட்​டு​விட்​டு, அஜித்​கு​மாரை டிஎஸ்​பி-​யின் தனிப்​படை போலீ​ஸார் தாக்​கி​யுள்​ளனர். இதில் அவர் உயி​ரிழந்​தார்.இது தொடர்​பாக தனிப்​படை போலீ​ஸார் ராஜா, பிரபு, கண்​ணன்,ஆனந்த், சங்கர மணி​கண்​டன் ஆகியோர் கைது செய்​யப்​பட்​டனர். இந்த வழக்கை விசா​ரித்த உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வு, மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்​தர்​லால் சுரேஷ் விசா​ரணை நடத்​தி, ஜூலை 8-ம் தேதிக்​குள் அறிக்கை தாக்​கல் செய்​யு​மாறு உத்​தர​விட்​டது.

அதன்​படி, மாவட்ட நீதிபதி கடந்த 2-ம் தேதி முதல் 5-ம் தேதிவரை 4 நாட்​கள் திருப்​புவனம் நெடுஞ்​சாலைத் துறை ஆய்வு மாளி​கை​யில் விசா​ரணை நடத்​தி​னார். ஏடிஎஸ்பி சுகு​மாறன், பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்ட மானாமதுரை டிஎஸ்பி சண்​முகசுந்​தரம், திருப்​புவனம் அரசு மருத்​து​வ​மனை மருத்​து​வர் கார்த்​தி​கேயன், பிரேதப் பரிசோதனை செய்த மதுரை அரசு மருத்​து​வ​மனை மருத்​து​வர்​கள் சதாசிவம், ஏஞ்​சல், அஜித்​கு​மாரின் தாயார் மால​தி, சகோ​தரர் நவீன்​கு​மார், போலீ​ஸார் தாக்​கிய காட்​சிகளை மறைந்​திருந்து செல்​போனில் பதிவு செய்த கோயில் ஊழியர் சக்​தீஸ்​வரன் உள்​ளிட்ட 20-க்​கும் மேற்​பட்ட சாட்​சிகளிடம் நீதிபதி விசா​ரணை நடத்​தி​னார். பின்​னர் திருப்​புவனம் காவல் நிலை​யம், கோயில் அலு​வல​கத்​தின் பின்​புற​முள்ள கோசாலை ஆகிய இடங்​களுக்​கும் சென்று நீதிபதி ஆய்வு செய்​தார்.

இந்​நிலை​யில், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில், தனது விசா​ரணை அறிக்​கையை மாவட்ட நீதிபதி ஜான்​சுந்​தர்​லால் சுரேஷ் நாளை தாக்​கல் செய்​கிறார். இந்த அறிக்​கை​யில் பல திடுக்​கிடும் உண்​மை​கள் வெளி​யாகும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை: கடந்த ஜூன் 28-ம் தேதி போலீ​ஸார் தாக்​கிய​தில் தனக்கு உடல், கால்​களில் வலி உள்​ள​தாக அஜித்​கு​மாரின் சகோ​தரர் நவீன்​கு​மார் தெரி​வித்​திருந்​தார். இந்​நிலை​யில், உடல்​நிலை பாதித்​துள்ள அவரை, மதுரை அரசு ராஜாஜி மருத்​து​வ​மனை​யில் உறவினர்​கள் சேர்த்​தனர்​. அங்​கு அவருக்​குசிகிச்​சை அளிக்​கப்​பட்டது. சிகிச்சைப் பின்னர் நவீன் குமார் நேற்று மாலையில் வீடு திரும்பினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here