கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூடக் கோரி பொது மக்களும் அரசியல் கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தக் கடையால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் குடிமகன்களின் தொல்லை காரணமாக பெண்கள் அச்சமின்றி நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தக் கடையை மூடினால் பொதுமக்களின் பாதிப்பு குறையும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.















