திருவட்டார் அருகே வீயன்னூர் பகுதியைச் சேர்ந்த பிரான்சிஸ் சேவியர் முகத்தில் ஆசிட் வீசிய ஜான் பேபிக்கு பத்மநாபபுரம் நீதிமன்றம் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. இந்த சம்பவம் கடந்த 4.8.2019 அன்று நடந்தது. வாக்குவாதத்தின் போது ஜான் பேபி மறைத்து வைத்திருந்த ஆசிட் பாட்டிலை எடுத்து பிரான்சிஸ் சேவியர் முகத்தில் வீசியதில் அவரது கண் பார்வை பறிபோனது. திருவட்டார் போலீசார் ஜான் பேபியை கைது செய்து வழக்கு தொடர்ந்தனர்.














