Home 2024
Yearly Archives: 2024
சூரியகோட்டில் பெண்ணை மானபங்கம் செய்ய முயற்சி – வாலிபர் கைது
கொல்லங்கோடு அருகே உள்ள சூரியகோடு பகுதியை சேர்ந்தவர் எட்விராஜ் (26). இவர் அதே பகுதியில் உள்ள 33 வயதுடைய ஒரு பெண்ணிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இது குறித்து அந்தப் பெண் கொல்லங்கோடு போலீசில் ஏற்கனவே புகார் கொடுத்தார். போலீசார் எட்வின்ராஜை அழைத்து எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.
இதனால் ஏற்பட்ட முன் விரோதத்தில் சம்பவத்தினம் காலையில் அந்த பெண் வீட்டில் தனியாக இருந்த போது எட்வின் ராஜ் அத்துமீறி நுழைந்து அவரை மானபங்கம் செய்ய முயன்றுள்ளார். அதற்கு பெண் எதிர்ப்பு தெரிவித்ததால், அவரை கல்லை காட்டி...
மாணவனை இரக்கமின்றி அடித்த தமிழ் ஆசிரியர் கைது
கோவை பொள்ளாச்சியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில், மாணவனை அடித்த குற்றத்திற்காக தமிழ் ஆசிரியர் சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். 12ம் வகுப்பு மாணவர், தவறுதலாக வேறொரு செய்யுளை எழுதியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர், மாணவனின் மார்பிலும், அடி வயிற்றிலும் அடித்ததாக கூறப்படுகிறது. வலி தாங்க முடியாமல் கதறிய மாணவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மாணவரின் பெற்றோர் புகார் அளித்த நிலையில் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விண்வெளி துறையில் இருதரப்பு உறவை பலப்படுத்த இந்தியா – புருனே புரிந்துணர்வு ஒப்பந்தம்
புருனே சென்றுள்ள பிரதமர் மோடிஅந்நாட்டு சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவை சந்தித்துபேசினார். அப்போது, விண்வெளி துறையில் இருதரப்பு உறவை மேலும் பலப்படுத்துவது தொடர்பாக இரு நாடுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
தென்கிழக்கு ஆசிய நாடானபுருனேக்கு பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக நேற்று முன்தினம் சென்றார். தலைநகர் பண்டார் செரி பெகவான் சென்றடைந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய பிரதமர் ஒருவர் புருனே நாட்டுக்கு சென்றது இதுவே முதல் முறை. இந்நிலையில், புருனே சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவை அவரது அரசு இல்லமான...
பாராலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மாரியப்பனுக்கு ஆளுநர், முதல்வர் வாழ்த்து: உத்வேகம் தரும் வெற்றி என பெருமிதம்
பாரிஸில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் விளையாட்டில் ஆடவர் உயரம் தாண்டுதல் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் ஆர்.என்.ரவி: மாரியப்பன் தங்கவேலுவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். தொடர்ந்து மூன்று பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்றிருப்பது என்பது அவரின் திறமை, அசைக்க முடியாத உறுதி மற்றும் நிகரற்ற விடாமுயற்சிக்கு ஒரு சான்றாகும். இந்த அசாதாரண சாதனை நம் தேசத்துக்கு மகத்தான பெருமையைத் தருவதுடன் ஆர்வமுள்ள விளையாட்டு வீரர்களுக்கு சக்திவாய்ந்த உத்வேகமாக உள்ளது. அவர் தொடர்ந்து வெற்றியடையவும்...
பாரிஸ் பாராலிம்பிக்ஸ்: 21 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை; மாரியப்பனுக்கு வெண்கலம்
பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் பாராலிம்பிக்ஸ் விளையாட்டு நடைபெற்று வருகிறது. இதில்நேற்று மாலை வரை இந்தியா 3 தங்கம், 8 வெள்ளி, 10 வெண்கலம் என 21 பதக்கங்களை வென்றிருந்தது. பாராலிம்பிக்ஸ் வரலாற்றில் இந்தியா அதிக பதக்கங்களை கைப்பற்றுவது இதுவே முதன்முறையாகும். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற டோக்கியோ பாராலிம்பிக்ஸில் 19 பதக்கங்களை (5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம்) இந்தியா வென்றதே அதிகபட்சமாக இருந்தது.
போட்டியின் 6-வது நாளான நேற்று முன்தினம் மட்டுமே இந்தியா 2 வெள்ளி, 3 வெண்கலம்...
புச்சிபாபு கிரிக்கெட் அரை இறுதி ஆட்டம்: டிஎன்சிஏ லெவன் அணி 194 ரன்களுக்கு ஆட்டமிழந்தது
புச்சிபாபு கிரிக்கெட் தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன் - ஹைதராபாத் அணிகள் இடையிலான ஆட்டம் திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் ஹைதராபாத் அணி 313 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து விளையாடிய டிஎன்சிஏ பிரெசிடெண்ட் அணி நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் 100.4 ஓவர்களில் 327 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ரித்திக் ஈஸ்வரன் 140 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 100 ரன்கள் விளாசினார். முகமது 47 ரன்கள் சேர்த்தார். ஹைதராபாத் அணி தரப்பில்...
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் அரை இறுதியில் சபலெங்கா, டெய்லர் பிரிட்ஸ்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் அரினா சபலெங்கா, டெய்லர் பிரிட்ஸ் ஆகியோர் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினர்.
நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் 4-ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜிவேரேவ், 12-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸுடன் மோதினார். 3 மணி நேரம் 26 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அலெக்சாண்டர் ஜிவேரேவை 7-6 (7-2), 3-6, 6-4, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரை இறுதிக்கு...
ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: இந்திய அணிகளுக்கு சரத் கமல், மணிகா பத்ரா கேப்டன்களாக நியமனம்
27-வது ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் வரும் அக்டோர் 7 முதல் 13-ம் தேதி வரை கஜகஸ்தானில் உள்ள அஸ்தானா நகரில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான அணியை இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ஆடவர் அணிக்கு சரத் கமல் கேப்டனாகவும், மகளிர் அணிக்குமணிகா பத்ரா கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆடவர் அணியில் மாற்று வீரர்களாக ஸ்நேஹித்எஸ்எஃப்ஆர், ஜீத் சந்திரா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேவேளையில் மகளிர் அணியில்மாற்று வீரர்களாக யஷஸ்வினி கோர்படே, பொய்மண்டீ பைஸ்யா இடம் பெற்றுள்ளனர். உலக டேபிள்டென்னிஸ் சாம்பியன்ஷிப் மற்றும் ஆசிய விளையாட்டுப்...
ராஜஸ்தான் ராயல்ஸ் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்புக்குத் திரும்பும் ராகுல் திராவிட்
2025 ஐபிஎல் சீசனுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்புக்கு ராகுல் திராவிட் மீண்டும் திரும்புகிறார்.
டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி உலக சாம்பியன் ஆனதோடு திராவிடின் இந்திய அணித் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. ஐபிஎல் 2025-க்கான மெகா ஏலம் தொடர்பாக ராகுல் திராவிடிடம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் வீரர்கள் தக்கவைப்பு தொடர்பாக விவாதித்ததாக ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சனுடன் ராகுல் திராவிட்டிற்கு நீண்ட கால பழக்கம் உள்ளது. திராவிடின் மேற்பார்வையில்தான்...
உச்ச நீதிமன்றம் நீதி வழங்கும்: போராட்டத்தை கைவிட மருத்துவர் சங்கம் கோரிக்கை
இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை வழக்கில் நீதியை உச்ச நீதிமன்றம் வழங்கும் என்ற நம்பிக்கை ஐஎம்ஏ-வுக்கு உள்ளது. எனவே இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றத்தின் கைகளில் விட்டுவிடுவோம். பெண் மருத்துவர் கொலைவழக்கு விவகாரத்தை விசாரிக்கதேசிய அளவிலான பணிக்குழுவை உச்ச நீதிமன்றம் உருவாக்கியுள்ளது.
எனவே, ஒட்டுமொத்த மருத்துவ சமூகமும் உச்ச நீதிமன்றத்தை நம்ப வேண்டும். எனவே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் உடனடியாக பணிக்குத் திரும்பவேண்டும். நோயாளிகள் கவனிப்பு மற்றும் சிகிச்சை என்பது மருத்துவத் தொழிலின்...













