அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் மதுரை மத்தி எங்களுக்கு! – இப்போதே கணக்குப் போட்டு காய்நகர்த்தும் காங்கிரஸ்

0
27

பிரதானக் கட்சிகளின் தலைமைகள் எல்லாம் 2026 தேர்தலுக்கான கூட்டணிகளை கட்டமைப்பதில் மும்முரம் காட்டி வரும் நிலையில், மாவட்ட அளவிலான கட்சி நிர்வாகிகள் தங்களுக்கு தோதான தொகுதிகளை தேர்வு செய்வதில் கவனம் செலுத்தத் தொடங்கி இருக்கிறார்கள்.

அந்த வகையில், மதுரை மாவட்​டத்​தி​லுள்ள 10 சட்டமன்றத் தொகுதி​களில் குறைந்​த​பட்சம் ஒரு தொகுதியை கூட்டணித் தலைமை​யிடம் காங்கிரஸ் கேட்டுப் பெறுவது வழக்கம். அதன்படி கடந்த தேர்தலில் மேலூர் தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்​கியது திமுக. கடந்த முறை காங்கிரஸுக்கு மொத்தம் 25 தொகுதிகளை ஒதுக்​கியது திமுக.

இதில் தென் மாவட்​டங்​களில் மட்டுமே மேலூர், ஸ்ரீவில்​லிபுத்​தூர், திருவா​டானை, காரைக்​குடி, நாங்குநேரி, குளச்சல், விளவங்​கோடு, கிள்ளியூர், ஸ்ரீவைகுண்டம், தென்காசி, சிவகாசி, ஆகிய 11 தொகுதி​களில் காங்கிரஸ் போட்டி​யிட்டது. இதில் மேலூர், ஸ்ரீவில்​லிபுத்​தூரைத் தவிர மற்ற 9 தொகுதி​களிலும் வெற்றி​பெற்றது.

இந்த நிலையில், இம்முறை பாரம்பரிய காங்கிரஸ் தொகுதியான மேலூரை தவிர்த்​து​விட்டு மதுரை நகருக்குள் ஏதாவதொரு தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் தரப்பில் இப்போதே காய்நகர்த்தலை தொடங்​கி​விட்​டனர்.

இதுகுறித்து பேசிய மதுரை தெற்கு தொகுதி காங்கிரஸ் பொறுப்​பாளரும் பொதுக்குழு உறுப்​பினருமான சையது பாபு, “2016-ல் மதுரை வடக்கு தொகுதியில் தற்போதைய மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கார்த்​தி​கேயன் வெறும் 8 ஆயிரம் வாக்கு வித்தி​யாசத்தில் தான் அதிமுக-​விடம் தோற்றார். அதேபோல் மதுரை மத்திய தொகுதியில் 1984 தொடங்கி 2001 வரை காங்கிரஸும் தமாகா-வும் தலா இரண்டு முறை வென்றுள்ளன. ஆக, மதுரை மத்தியும் எங்களுக்கு சாதகமான தொகுதி​தான்.

தற்போது மதுரை வடக்கில் திமுக மாவட்டச் செயலாளர் கோ.தளப​தி​யும், மத்திய தொகுதியில் அமைச்சர் பழனிவேல் தியாக​ராஜனும் எம்எல்​ஏ-க்களாக இருக்​கி​றார்கள். மதுரை மேற்கில் இம்முறை செல்லூர் ராஜூவை தோற்கடிக்க அமைச்சர் மூர்த்​திக்கு திமுக தலைமை ஸ்பெஷல் அசைன்​மென்ட் கொடுத்​திருப்பதாக தெரிகிறது. அதனால், ஏற்கெனவே மேற்கில் போட்டி​யிட்ட அனுபவம் உள்ள தளபதியை அந்தத் தொகுதியில் செல்லூர் ராஜூவை எதிர்த்து திமுக நிறுத்​தலாம் என்ற பேச்சு இருக்​கிறது. அப்படி நடந்தால் மதுரை வடக்கு தொகுதியை காங்கிரஸுக்காக கேட்போம்.

சையது பாபு
அமைச்சர் பழனிவேல் தியாக​ராஜன் திமுக தலைமைக்கு நெருக்கமாக இருந்​தாலும் அவர் மாநில அரசியலை விட்டு விலகி டெல்லி அரசியலில் கவனம் செலுத்தப் போவதாக ஒரு பேச்சு அடிபடு​கிறது. சிறிது காலம் அவர் அரசியலை விட்டே ஒதுங்கி இருக்கப் போவதாகவும் ஒரு சிலர் சொல்கி​றார்கள். அப்படி அவர் மத்திய தொகுதியில் போட்டி​யி​டாமல் ஒதுங்​கினால் மதுரை மத்தியை காங்கிரஸ் கட்சி கட்டாயம் கேட்டுப் பெற்று மீண்டும் அங்கு வென்று காட்டும்” என்றார்.

இதுகுறித்து மதுரை மத்திய தொகுதி திமுக நிர்வாகி​களிடம் பேசிய​போது, “யார் சொன்னது… அமைச்சர் பழனிவேல் தியாக​ராஜன் மீண்டும் மதுரை மத்தியில் போட்டி​யிட்டு அமைச்​ச​ராவது உறுதி. அதற்காகத்தான் தொடர்ச்​சியாக தொகுதி முழுவதும் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகி​றார். தொகுதி வளர்ச்சி பணிகளிலும் கவனம் செலுத்தி வருகி​றார்.

அமைச்சர் மீண்டும் இந்தத் தொகுதியில் போட்டி​யிடப் போவதில்லை என்று சொல்வதெல்லாம் யாரோ கிளப்பி விட்ட வதந்தி. இது அவரது காதுக்கும் வந்தது; சிரித்​துக்​கொண்டே கடந்து​விட்​டார். தலைமை அவர் மீது முழு நம்பிக்கை வைத்திருக்​கிறது. அவர் டெல்லி அரசியலுக்கு போகப் போவதாகச் சொல்வதும் அரசியல் எதிரிகள் அவருக்கு எதிராக பரப்பும் வதந்திகளே” என்றனர்.

சீட் வாங்​கு​வது இருக்​கட்​டும்​… கலகலப்​புக்​கு பேர்​போன காங்​கிரஸார்​ ஒற்​றுமை​யாக இருந்​து கை சின்​னத்​தை ஜெ​யிக்​கவைப்​பார்​களா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here