வள்ளவிளை பகுதியை சேர்ந்த பிரவீன் (29) என்பவரிடம், அதே பகுதியை சேர்ந்த சைமன் (29) என்பவர் இஸ்ரேலில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.5 லட்சத்து 80 ஆயிரம் பெற்றுள்ளார். ஆனால், வேலை வாங்கி தராததால், பிரவீன் பணத்தை திரும்ப கேட்டபோது சைமன் தர மறுத்துள்ளார். இது குறித்து பிரவின் கொல்லங்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் பேரில், போலீசார் சைமன் மீது மோசடி வழக்கு பதிவு செய்து அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.















