கருங்கல் அருகே வழுதலம்பள்ளம் பகுதியைச் சேர்ந்த சுந்தரஜோதி (35) என்பவர், தனது தம்பி சரவண பிரியன் மற்றும் அவரது மனைவியின் தம்பி உள்ளிட்ட 4 பேர் மீது புகார் அளித்துள்ளார். முன்விரோதம் காரணமாக நேற்று, சரவண பிரியன் மற்றும் அவரது கூட்டாளிகள் சுந்தரஜோதியின் வீட்டிற்குள் புகுந்து, மின்சார மீட்டரை உடைத்து, வீட்டையும் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.















