நாகர்கோவில் வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் குமரி மாவட்ட குழுக்கள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு விவசாய சங்க மாவட்ட தலைவர் சேகர் தலைமை வகித்தார். ராஜகுமார், நாகராஜன், செண்பகசேகரன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். விவசாய சங்க மாவட்ட செயலாளர் ரவி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். உரங்களின் விலை உயர்வை மத்திய அரசு ரத்துசெய்ய வேண்டும், கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய விவ சாய பயிர் கடன் தள்ளுபடியில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை கண்டித்தும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.















