ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நிறைவடைந்துள்ள நிலையில் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்திய அணியின் தொடக்க வீரரான அபிஷேக் சர்மா 875 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக அபிஷேக் சர்மா அரை சதம் விளாசியதால் தரவரிசையில் சரிவை சந்திக்கவில்லை. மற்றொரு அதிரடி வீரரான இஷான் கிஷன் 871 புள்ளிகளுடன் 2...
ஐபிஎல் 2026 சீசன் முதற்கட்ட அட்டவணை வெளியீடு: சிஎஸ்கே 30-ம் தேதி ராஜஸ்தானுடன் பலப்பரீட்சை
admin - 0
ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் போட்டிகள் வரும் 28-ம் தேதி முதல் மே 31 வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. இதற்கிடையே தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் ஐபிஎல் தொடருக்கான அட்டவணை வெளியிடுவதில் தாமதம் நிலவி வந்தது.
இதற்கிடையே 19-வது சீசனுக்கான ஐபிஎல் போட்டி அட்டவணை 12-ம் தேதிக்குள் வெளியிடப்படும் என பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா தெரிவித்திருந்தார்....
2026 டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றதையடுத்து பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் இந்திய அணியை புகழ்ந்து தள்ளி வருகின்றனர். முன்னாள் கேப்டனும் லெக் ஸ்பின்னரும் அதிரடி பேட்டருமான ஷாஹித் அஃப்ரீடி 2011 உலகக்கோப்பை அரையிறுதியில் எப்படி தோனி படை தங்களை கடும் அழுத்தத்திற்குக் கொண்டு சென்றது என்பதைப் பகிர்ந்துள்ளார்.
பாகிஸ்தான் ஊடகமான சாம்னா டிவியில் அஃப்ரீடி இது தொடர்பாகக் கூறும்போது, மொஹாலி நினைவுகளை பகிர்ந்த ஷாஹித் அஃப்ரிடி –...
சென்னை கால்பந்து சங்கம் சார்பில் சீனியர் டிவிஷன் லீக் 2025-26 போட்டிகள் செனாய் நகரில் உள்ள பாவேந்தர் பாரதிதாசன் கால்பந்து மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் தமிழக காவல்துறை அணி, ஏஜிஓஆர்சி அணியுடன் மோதியது.
இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. ஏஜிஓஆர்சி அணி சார்பில் 30-வது நிமிடத்தில் கப்மின்லால் கோல் அடித்தார். தமிழக காவல்துறை அணி தரப்பில் 74-வது நிமிடத்தில்...
மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி பேட்டர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் தொடக்க வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா 790 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 652 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் தொடர்கிறார்.
அதேவேளையில் மற்றொரு நட்சத்திர வீராங்கனையான ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஓர் இடத்தை இழந்து 12-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் 157 ரன்கள் விளாசிய நியூஸிலாந்து...
ஏஎஃப்சி மகளிருக்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய மகளிர் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று சீன தைபே அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது.
வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியுடன் இந்த ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 1-3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. இந்திய அணி தரப்பில் 39-வது நிமிடத்தில்...
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான மேத்யூ ஹைடன், 2026-ம் ஆண்டு ஐபிஎல் சீசனையொட்டி குஜராத் டைட்டன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2 முறை ஒருநாள் போட்டி உலகக் கோப்பையை வென்றவரும், தனது காலத்தில் ஆதிக்கம் செலுத்திய தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவருமான மேத்யூ ஹைடன், தனது புகழ்பெற்ற சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை அனுபவத்தையும், நவீனகால டி20 பேட்டிங் நுணுக்கங்களில் உள்ள தனது திறமையையும் கொண்டு குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளர்...
ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்துள்ள எம்.எஸ்.தோனி, ரோஹித் சர்மாவுடன் இணைந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
கடந்த 2007-ம் ஆண்டு நடைபெற்ற டி 20 உலகக் கோப்பையை எம்.எஸ்.தோனி தலைமையிலான இந்திய அணி வென்றிருந்தது. இதன் பின்னர் கடந்த 2024-ம் ஆண்டு ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்று அசத்தியது. இந்த வரிசையில் தற்போது 2026-ம் ஆண்டு டி20...
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 5 ஆட்டங்களில் விளையாடி 321 ரன்கள் குவித்த இந்திய அணியின் தொடக்க வீரரான சஞ்சு சாம்சன் தொடர் நாயகன் விருது வென்றார். அவர், மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் 97* ரன்களும், இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் 89 ரன்களும், நியூஸிலாந்து அணிக்கு எதிராக இறுதிப் போட்டியில் 89 ரன்களையும் விளாசி அணியின் வெற்றிகளில்...
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானான எம்.எஸ்.தோனி அகமதாபாத்தில் நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியை ஐசிசி சேர்மன் ஜெய் ஷா, முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோருடன் விஐபி மாடத்திலிருந்து ண்டுகளித்தார். போட்டி முடிந்து இந்திய அணி கோப்பையை வென்ற சில நிமிடங்களிலேயே, தோனி ஒரு மகிழ்ச்சியான பதிவை வெளியிட்டார்.
அதில், “அகமதாபாத்தில் வரலாறு படைக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கும், அணி வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும்...










