> ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரரான டேவிட் வார்னர் சிட்னியில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதற்காக காவல்துறையினரால் நேற்று கைது செய்யப்பட்டார். சிட்னியின் மரூப்ரா பகுதியில் வாகன சோதனை செய்தபோது, அனுமதிக்கப்பட்ட அளவை விட இரண்டு மடங்கு அதிகமாக வார்னர், மது அருந்தியது கண்டறியப்பட்டது. அடுத்த மாதம் அவர், நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் என தெரிவிக்கப்பட்டது. எனினும் இந்த விவகாரத்தால் பிஎஸ்எல் தொடரில் அவர், பங்கேற்பதில் எந்த...
சென்னை சூப்பர் கிங்ஸ் - தமிழ்நாடு விளையாட்டு பத்திரிகையாளர்கள் சங்க (டிஎன்எஸ்ஜேஏ) விருதுகள் மற்றும் உதவித்தொகை வழங்கும் விழா நேற்று சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதான வளாகத்தில் நடைபெற்றது.
இதில் வளர்ந்து வரும் 10 இளம் விளையாட்டு வீரர்களுக்கு தலா ரூ.50,000 உதவித்தொகை வழங்கப்பட்டது. யு-9 செஸ் வீரர் தமிழ் அமுதன், ஆசிய இளையோர் செஸ் சாம்பியன் ஆர்.ஆரண்யா, மன்னார்குடியை சேர்ந்த 15 வயதான கால்பந்து வீராங்கனை எஸ்.தர்ஷினி, சஷாங்க் சரவணக்குமார்...
ஐபிஎல் தொடரில் டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்குகிறது. அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியையும், 2-வது ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியையும் வீழ்த்திருந்தது. இதில்...
ஐபிஎல் 2026 தொடரின் 13-வது போட்டியில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டி தன்னளவிலேயே விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் குறிப்பாக ஜஸ்பிரித் பும்ராவை இளம் அதிரடிப் புயல் வைபவ் சூரியவன்ஷி எப்படி ஆடுவார் என்ற எதிர்பார்ப்பில் தற்போது சூடுபிடித்துள்ளது.
2025 ஐபிஎல் தொடரின் 50-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர்கொண்ட போது முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸுக்கு...
டி20 போட்டிகளில் டெத் ஓவர்கள் என கூறப்படும் 16 முதல் 20 ஓவர்கள் வரையிலான காலக்கட்டம் பந்து வீச்சாளர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த ஓவர்களில் பந்துவீச்சாளர்கள் தங்களது பல்வேறு திறன்களை கையாண்டு எதிரணியின் பேட்ஸ்மேன்களை பெரிய அளவில் தாக்குதல் ஆட்டம் மேற்கொள்ள அனுமதிக்காமல் கட்டுப்படுத்த முயற்சிப்பார்கள்.
நடப்பு ஐபிஎல் சீசனில் இந்த இறுதிக்கட்ட ஓவர்களில் சிஎஸ்கே அணி மாற்று சிந்தனைகள் இல்லாமலும், செயலற்ற தன்மையுடன் இருப்பதாக விமர்சனங்கள் எழத்தொடங்கி...
“ஐசிசி தொடர்களில் அடுத்தடுத்து இரண்டு தோல்வி வேதனை அளிக்கிறது” – ரச்சின் ரவீந்திரா வருத்தம்
admin - 0
ஐசிசி தொடர்களில் அடுத்தடுத்து இரண்டு இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து தோல்வியடைந்தது வேதனை அளிப்பதாக அந்த அணியின் வீரர் ரச்சின் ரவீந்திரா தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ரச்சின் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு அணியின் ஆடும் லெவனில் இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை. மூன்று விதமான பார்மெட்டிலும் விளையாடி வரும் அவர் கூறியதாவது:
“அடுத்தடுத்து இரண்டு ஐசிசி தொடரின் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தது மிகவும் வேதனை அளிக்கிறது. அதிலும்...
கடந்த சீசன் மிகுந்த ஏமாற்றமும், வலியும் தந்த காரணத்தால் ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து விலகியதாக அஸ்வின் தெரிவித்துள்ளார்.
39 வயதான அஸ்வின், கடந்த 2024-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன் பின்னர் கடந்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 9 ஆட்டங்களில் மட்டுமே விளையாடி இருந்தார். கடந்த சீசனில் 31 ஓவர்கள் வீசி 7 விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்தார். அவரது பவுலிங் எகானமி...
சிஎஸ்கே அணி ஐபிஎல் 2026 தொடரில் 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது. ஆனால் இதில் சிக்கல் இல்லை. முன்பெல்லாம் இப்படி தோல்வி அடைந்தால் தோனி எப்படியும் அணியை மீட்டுக் கொண்டு வருவார் என்ற நம்பிக்கை சிஎஸ்கே ரசிகர்களுக்கு இருந்தது. இப்போது அந்த நம்பிக்கை வறண்டு போய் விட்டது.
இந்நிலையில் சிஎஸ்கே பிரச்சினைகளை முன்னாள் இந்திய இடது கை வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் அலசியுள்ளார். பந்து வீச்சில் அனுபவமின்மையும் சொதப்பலும்...
பஞ்சாப் கிங்ஸ் அணியின் டாப் ஆர்டரில் விளையாடும் இளம் இந்திய வீரர்கள்தான் தங்கள் ஸ்பெஷல் என ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
கடந்த 2025 சீசனில் அணியை மீண்டும் கட்டமைத்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. புதிய கேப்டன், புதிய வீரர்கள் என அந்த அணி புதுப்பொலிவு பெற்றது. அதே பாய்ச்சலோடு உச்சமாக விளையாடிய அந்த அணி கடந்த சீசனில் இறுதிக்கு முன்னேறி அசத்தியது. நடப்பு சீசனிலும் முதல் இரண்டு ஆட்டங்களில் வென்று...
ஐபிஎல் 2026 தொடரின் 11-வது லீக் ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 43 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றியைப் பதிவு செய்தது.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி, ஐபிஎல் வரலாற்றில் சென்னைக்கு எதிராகத் தனது அதிகபட்ச ஸ்கோரான 250 ரன்களைக் குவித்து சாதனை படைத்தது.
டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு...










