டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பிப்ரவரி 2-ம் தேதி அதிகாலை இலங்கைக்கு புறப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் உலகக் கோப்பை தொடரையோ அல்லது இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தையோ பாகிஸ்தான் அணி புறக்கணிப்பதற்கு வாய்ப்பு இல்லை எனவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் பிப்ரவரி 7-ம் தேதி...
டெல்லியில் குடும்பத்தினர் முன்னிலையில் விளையாடுவது சிறப்பான விஷயம் என்று நெதர்லாந்து கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள இந்திய வம்சாவளி வீரர் ஆர்யன் தத் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆர்யன் தத். இவர் தற்போது நெதர்லாந்து கிரிக்கெட் அணியில் இடம்பெற்று விளையாடி வருகிறார். வரும் பிப்ரவரி 7-ம் தேதி இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கவுள்ளது. போட்டியில் பங்கேற்பதற்காக நெதர்லாந்து அணியினருடன்...
சென்னை மாவட்ட வில்வித்தை பயிற்சி மையத்துக்கான வீரர், வீராங்கனைகள் தேர்வு, பிப்.8-ம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாg அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம், மத்திய அரசின் ‘கேலோ இந்தியா’ திட்ட நிதியுதவியுடன் வில்வித்தை பயிற்சிக்கான மையம் சென்னையில் அமைய உள்ளது.
இந்த மையத்தில் தகுதியுள்ள வீரர், வீராங்கனைகள் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு தினசரி பயிற்சிகள் வழங்கப்பட...
தாய்லாந்து மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் பாங்காக் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியா வின் கிரண் ஜார்ஜ் 21-15, 21-9 என்ற நேர் செட் கணக்கில் மலேசியாவின் ஷோலே ஐடிலை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்ற இந்திய வீரர்களான மஞ்சுநாத் 21-12, 9-21, 21-17 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் மேக்னஸ் ஜோஹன்சனையும், தருண் மன்னேபள்ளி 22-20, 21-17 என்ற செட்...
மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டி20-ல் எய்டன் மார்க்ரம் அதிரடியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி
admin - 0
மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி நேற்று முன்தினம் இரவு பார்ல் நகரில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 173 ரன்கள் குவித்தது.
ஷிம்ரன் ஹெட்மயர் 32 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 48 ரன்களும் ரோவ்மன்...
இலங்கை - இங்கிலாந்து அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.
முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 357 ரன்கள் குவித்ததுகேப்டன் ஹாரி புரூக் 66 பந்துகளில், 9 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 136 ரன்களும், ஜோ ரூட் 108 பந்துகளில், ஒரு சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 111 ரன்களும் விளாசினர். ஜேக்கப் பெத்தேல்...
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் அரை இறுதிக்கு முன்னேறினார். அதேவேளையில் முன்னணி வீராங்கனைகளான இகா ஸ்வியாடெக், அனிசிமோவா ஆகியோர் கால் இறுதி சுற்றில் தோல்வி அடைந்தனர்.
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் 11-வது நாளான நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற கால் இறுதி ஆட்டம் ஒன்றில் 4-ம் நிலை...
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் கேப்டனான சூரியகுமார் யாதவ் 5 இடங்கள் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார்.
நியூஸிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று டி 20 தொடரில் சூர்யகுமார் யாதவ் முதல் 3 ஆட்டங்களில் முறையே 32, 82, 57 ரன்கள் சேர்த்திருந்தார். இதன் மூலம் அவர், தரவரிசையில் சீரான முன்னேற்றம் கண்டுள்ளார். தொடக்க வீரரான அபிஷேக் சர்மா...
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7-ம் தேதி இந்தியா, இலங்கையில் தொடங்குகிறது. இதில் 20 அணிகள் கலந்து கொண்டு பட்டம் வெல்ல மோத உள்ளன. இந்நிலையில் இந்த தொடருக்கான பயிற்சி ஆட்டங்கள் பிரப்ரவரி 2 முதல் 6-ம் தேதி வரை நடைபெறுகின்றன.
பயிற்சி ஆட்டங்கள் பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 2 ஆடுகளங்கள் மற்றும் கொழும்பில் உள்ள கிரிக்கெட் கிளப் மைதானம், நவி...
யு-19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் சிக்ஸ் சுற்றில் இந்திய அணி நேற்று ஜிம்பாப்வேயுடன் மோதியது. புலவாயோ நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 352 ரன்கள் குவித்தது. துணை கேப்டனான விஹான் மல்கோத்ரா 107 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 109 ரன்கள் விளாசி அசத்தினார்.
வைபவ் சூர்யவன்ஷி 30 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 4...
