பரந்தூர் விமான நிலையத்துக்கு நிலம் எடுக்கும் பணி நேற்று தொடங்கியது. முதல்கட்டமாக 5 கிராமங்களைச் சேர்ந்த 19 பேரின் 17.52 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள 19 கிராமங்களில் புதிய பசுமைவெளி விமான நிலையம் அமைக்க 2023 அக்டோபர் 31-ல் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு உயர்த்தப்பட்ட இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று நில உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்ததாகவும், அதன்படி...
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் தொலைதூரக்கல்வி வாயிலாக பல்வேறு பாடப்பிரிவுகளில் இளங்கலை, முதுகலை, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளை நடத்தி வருகிறது. தொலைதூரக்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு செமினார் வகுப்புகள் நடத்துவதற்கும், பாடப்புத்தகங்கள் விநியோகம் தொடர்பான இதர பணிகளைக் கவனிப்பதற்கும் உதவி பேராசிரியர்கள் மற்றும் இணை பேராசிரியர்கள், பேராசிரியர்கள் என 40-க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.
இந்நிலையில், அண்மையில் நடந்த பல்கலைக்கழக நிதிக்குழு கூட்டத்திலும், தொடர்ந்து நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்திலும், இந்த பேராசிரியர்களை, ஆசிரியர்...
சென்னை தேனாம்பேட்டையில் காங்கிரஸ் அறக்கட்டளைக்கு சொந்த மாக பல கோடி ரூபாய் மதிப்புள்ளநிலம் உள்ளது. காமராஜர் அரங்கத்துக்கு அருகில் அமைந்துள்ள இந்த நிலத்தில் வணிக வளாகம் கட்டுவதற்காக ப்ளூ பேர்ல் என்ற தனியார் நிறுவனத்துடன் காங்கிரஸ் அறக்கட்டளை கடந்த 1996-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது.
அதன்பிறகு அந்த நிறுவனம் வசம் ஒப்படைக்கப்பட்ட அந்த நிலத்தை பராமரிப்பது தொடர்பாக ஆட்சேபமில்லா சான்று வழங்கப்படாததால் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் தனியார் நிறுவனத்துடன்...
ராஜ்தானி, துரந்தோ, சதாப்தி ரயில்களில் டைனமிக் கட்டண முறையை நீக்க ஏ.பி.ஜி.பி. நுகர்வோர் அமைப்பு மனு
admin - 0
ராஜ்தானி, துரந்தோ, சதாப்தி உள்ளிட்ட விரைவு ரயில்களில் டைனமிக் கட்டண முறையை நீக்கக் கோரி, ரயில்வே அமைச்சருக்கு அகில பாரதிய கிராஹக் பஞ்சாயத்து நுகர்வோர் அமைப்பு நிர்வாகிகள் மனு அளித்தனர். புதுடெல்லியில், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை அகில பாரதிய கிராஹக் பஞ்சாயத்து நுகர்வோர் அமைப்பு (ஏ.பி.ஜி.பி. நுகர்வோர் அமைப்பு) நிர்வாகிகள் அண்மையில் சந்தித்து, பிரீமியம் ரயிலில் டைனமிக் கட்டண முறையை நீக்குவது உட்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக...
மத்திய வெளியுறவு துறை அமைச்சக முயற்சியால் ஈரானில் சிக்கிய 15 தமிழக மீனவர்கள் மீட்கப்பட்டனர்
admin - 0
ஈரான் நாட்டில் சிக்கித் தவித்த தமிழக மீனவர்கள் 15 பேர் மத்திய வெளியுறவுத் துறையின் முயற்சியால் மீட்கப்பட்டு சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். சென்னை விமான நிலையத்தில் அவர்களை வரவேற்ற தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அனைத்து செலவுகளையும் தமிழக பாஜக ஏற்றுள்ளதாக தெரிவித்தார். ஈரானில் சிக்கித் தவித்த தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டம் உவரியை சேர்ந்த 15 மீனவர்கள், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் மூலம் மீட்கப்பட்டனர்.
ஈரானிலிருந்து கப்பலில்...
மின் வாரியத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க கோரி ஆர்ப்பாட்டம்
admin - 0
மின்வாரியத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி, சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மின்வாரியத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி, தமிழ்நாடு மின்வாரிய அப்ரண்டீஸ் தொழிற்சங்கம் சார்பில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சென்னை எழும்பூரில் நேற்று நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தொழிற்சங்கத்தின் தலைவர் டி.மகேந்திரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டம் குறித்து, செய்தியாளர்களிடம் பொதுச்செயலாளர் நந்தகுமார் கூறியதாவது: தமிழக மின்வாரியத்தில் கள ஊழியர்களுக்கான 32...
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நகை திருட்டு புகார் தொடர்பாக விசாரித்த தனிப்படை போலீஸார் தாக்கியதில் மடப்புரத்தைச் சேர்ந்த கோயில் காவலாளி அஜித்குமார் கடந்த ஜூன் 28-ம் தேதி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, மதுரை 4-வது கூடுதல் மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷை விசாரணை நடத்தி, ஜூலை 8-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
அதன்படி கடந்த 2-ம் தேதி...
மதுரை மாநகராட்சியில் 4 மண்டல தலைவர்கள், 2 நிலை குழு தலைவர்களிடம் ராஜினாமா கடிதம் பெற்ற அமைச்சர் குழு
admin - 0
மதுரை மாநகராட்சியில் பல கோடி ரூபாய் சொத்துவரி முறைகேடு தொடர்பாக, மாவட்ட மத்திய குற்றப்பிரிவு போலீஸார், ஓய்வு பெற்ற உதவி ஆணையர் ரெங்கராஜன் உள்பட 8 பேரை கைது செய்தனர். அவர்களில் 2 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். அவர்களை தொடர்ந்து திமுக மண்டலத் தலைவர்கள் வாசுகி (மண்டலம்-1), சரவண புவனேஷ்வரி (மண்டலம்-2), பாண்டிச்செல்வி (மண்டலம்-3), முகேஷ் சர்மா (மண்டலம்-4), சுவிதா (மண்டலம்-5) ஆகிய 5 பேரிடமும்...
நாளை நடைபெறும் நாடுதழுவிய போராட்டத்துக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும்: இரா.முத்தரசன் வேண்டுகோள்
admin - 0
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நாளை (ஜூலை 9) நடைபெற உள்ள பொது வேலை நிறுத்த போராட்டத்துக்கு பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது.
இதில் பங்கேற்ற கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்...
ராமதாஸ் தலைமையில் பாமக செயற்குழு கூட்டம் இன்று கூடுகிறது: சென்னையில் நிர்வாகிகளுடன் அன்புமணி போட்டி கூட்டம்
admin - 0
பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணிக்கு இடையே மோதல் நீடித்து வரும் பரபரப்பான சூழலில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஓமந்தூரில் பாமக செயற்குழு இன்று (ஜூலை 8) கூடுகிறது. இக்கூட்டத்துக்கு நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார். அதேநேரம் இக்கூட்டத்தை பாமக தலைவர் அன்புமணி புறக்கணிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணிக்கு இடையே ஏற்பட்டுள்ள அதிகார மோதலால் பாமக பிளவுபட்டு உள்ளது. இரு...










