Google search engine
மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்து சாப்பிட்டதால் குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில், அந்த இரு​மல் மருந்தை தயாரித்த தனியார் மருந்து ஆலையின் உரிமையாளரான ரங்கநாதன் கைது செய்யப்பட்டார். காஞ்சிபுரம் அருகே சுங்குவார்ச்சத்திரத்தில் அவரது மருந்து ஆலை உள்ளது. தமிழக போலீஸாரின் உதவியுடன் மத்திய பிரதேச மாநில போலீஸார் இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். தற்போது, ரங்கநாதனிடம் மத்தியப் பிரதேச போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக, தமிழக அரசு...
முதல்வருக்கு தெரியாமலேயே அவருக்குப் பக்கத்தில் இருக்கும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் ஆர்எஸ்எஸ் தொடர்புடன் விஜய்யை வளர்த்துவிட நினைக்கிறார்கள். முதல்வர் இதிலுள்ள சதியைப் புரிந்துகொண்டு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்றெல்லாம் விஜய்க்கு எதிராக வீரிய விமர்சனங்களை எடுத்துவைத்திருக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் ‘இந்து தமிழ் திசைக்கு’ அளித்த பிரத்யேகப் பேட்டி. தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்ச்சி எப்படி இருக்கிறது? தினமும் தமிழகத்தின் பல முனைகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானவர்கள் எங்கள் கட்சியில்...
வெளி​மாநிலக் குழந்​தைகள் உயி​ரிழந்த விவ​காரம் தொடர்​பாக சுங்​கு​வார் சத்​திரம் மருந்து ஆலைக்கு நோட்​டீஸ் அனுப்​பப்​பட்​டுள்​ளது. காஞ்​சிபுரம் மாவட்​டம், ஸ்ரீபெரும்​புதூர் அருகே சுங்​கு​வார்​சத்​திரத்​தில் இயங்கி வரும் தனி​யார் மருந்து உற்பத்தி ஆலையில் தயாரிக்​கப்​பட்ட இரு​மல் மருந்தை உட்​கொண்​ட​தால் வெளி​மாநிலக் குழந்​தைகள் உயி​ரிழந்​த​தாகக் குற்​றச்​சாட்​டு​கள் எழுந்த நிலை​யில், இந்த நிறு​வனத்​தின் செயல்​பாடு​கள் குறித்து விளக்​கம் கேட்டு வாயி​லில் நோட்​டீஸ் ஒட்​டப்​பட்​டது. ஆலை பூட்​டப்​பட்​டிருந்​த​தால் ஆலைக் கதவில் ஒட்​டப்​பட்​டது. இந்த ஆலை​யில் தயாரிக்​கப்பட்ட கோல்ட்​ரிப்...
தமிழகத்​தில் 3,170 யானை​கள் உள்​ள​தாக வனத் துறை அமைச்​சர் ஆர்​.எஸ்​.​ராஜகண்​ணப்​பன் தெரி​வித்​துள்​ளார். யானை​கள் பாது​காப்​பில் தமிழகம் நீண்​ட​கால​மாகவே முன்​னணி வகிக்​கிறது. இந்​நிலை​யில், கர்​நாடகா​வுடன் இணைந்து கடந்த மே 23 முதல் 25-ம் தேதி வரை 3-வது ஒருங்​கிணைந்த யானை​கள் கணக்​கெடுப்பு நடத்​தப்​பட்​டது. தமிழகத்​தில் புலிகள் காப்​பகங்​கள், வனவிலங்கு சரணால​யங்​கள், பிராந்​திய வனப் பிரிவு​கள் மற்​றும் ஒரு தேசி​யப் பூங்​கா​வில் நடத்​தப்​பட்ட கணக்​கெடுப்​பில் 2,043 வனத் துறைப் பணி​யாளர்​கள் மற்​றும் தன்​னார்​வலர்​கள்...
‘பிரஸ் மீட் நாயகன்’ என்று பத்திரிகையாளர்களே பட்டம் கொடுக்குமளவுக்கு, எந்தக் கேள்வி கேட்டாலும் தனக்கே உரிய டிரேட் மார்க் சிரிப்புடன் பதில் சொல்வதுடன், “வேற கேள்வி ஏதும் இருக்கா?” என்று கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டு கிளம்புபவர் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன். சமீபத்திய அரசியல் நிகழ்வுகள், எதிர்காலத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ‘இந்து தமிழ் திசை’க்கு அவரளித்த பேட்டி: கரூர் சம்பவத்தில் அரசு மீது தவறில்லை. எந்த சதியும்...
புதுச்சேரியில் ஜான் குமாருக்கு அமைச்சரவையில் இடமளிக்க வேண்டும் என்பதற்காக, தங்கள் கட்சியைச் சேர்ந்த சாய் ஜெ.சரவணன்குமாரை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வைத்தது பாஜக தலைமை. அதேசமயம் புதிதாக அமைச்சரவையில் சேர்க்கப்பட்ட ஜான் குமாருக்கு சுமார் 3 மாதங்கள் ஆகப்போகும் நிலையிலும் இன்னும் இலாகா ஒதுக்காமல் இருக்கிறார் முதல்வர் ரங்கசாமி. இதனிடையே, பட்​டியல் இனத்​தைச் சேர்ந்த சாய் ஜெ.சர​வணன்​கு​மாரை அமைச்​சர​வையி​லிருந்து தூக்​கியது சர்ச்​சையை கிளப்​பியது. இந்த நிலை​யில், அரசுக்கு எதி​ராக...
கரூர் துயரச் சம்பவத்தின் சுவடுகள் மெல்ல மறைய ஆரம்பித்திருத்தாலும் அதனால் எழுந்த அரசியல் சர்ச்சைகள் இன்னும் அடங்கியபாடில்லை. மாறாக, நாளுக்கு நாள் அது புதுப்புது பரிணாமம் எடுத்துக் கொண்டிருக்கிறது. கரூர் சம்பவத்தில் தவெகவையும் அதன் தலைவர் விஜய்யையும் சற்று காட்டமாகவே சாடிய நீதிமன்றம், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசுக்கும் சில கேள்விகளை எழுப்பியது. இதனிடையே, விஜய் மீது போலீஸ் வழக்குக் கூட பதிவு செய்யாதது ஏன் எனக் கேள்வி எழுப்பிய...
நடிகரின் புதிய கட்சி வரவால், தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளுக்கும் கடும் நெருக்கடி. உடன் இருக்கும் கட்சிகளை தக்க வைக்கவும், புதிய கட்சிகளை சேர்த்துக் கொள்ளவும் ஆடித்தள்ளுபடி போல ஆபர்களை அள்ளித்தர தயாராகி விட்டன. ஆளும் கட்சி தரப்பு, ‘எங்கள் அணி உடையாது, வலுவாக இருக்கும்’ என வெளியில் சொல்லிக் கொண்டிருந்தாலும் உள்ளுக்குள் விஷயம் வேறு மாதிரியாகத்தான் இருக்கிறது. அதிலும், தேசிய கதர் கட்சிக்காரர்கள், நடிகர் கட்சியை காட்டி காட்டியே...
அரசு கேபிள் டிவி நிறு​வனத்​தில், தனி​யார் நிறு​வனத்​தின் அத்துமீறலை தடுத்து நிறுத்​தக்​கோரி அரசு கேபிள் டிவி ஆபரேட்​டர்​கள் சங்​கத்​தினர் சென்​னை​யில் நேற்று ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர். அரசு கேபிள் டிவி நிறு​வனத்​தில், மந்​திரா எனும் தனி​யார் நிறு​வனம் ஆதிக்​கம் செலுத்தி பல ஆண்​டு​களாக தேங்​கிக் கிடக்​கும் செட்​டாப் பாக்​ஸ்​களை வாங்​க​வும், நல்ல நிலை​யில் இருக்​கும் பாக்​ஸ்​களை மாற்​ற​வும் நிர்ப்​பந்​திப்​பதை தடுக்க வேண்​டும். ஏற்​கெனவே தொழில் நடத்​திவரும் இடங்​களில் புதி​ய​வர்​களுக்கு ஒளிபரப்பு...
சாட்சிகளை கலைக்க முற்பட்டால் எந்த நேரமும் செந்தில் பாலாஜியின் ஜாமீனை எங்களால் ரத்து செய்ய முடியும். அவர் அமைச்சராக விரும்பினால் நீதிமன்றத்தில் தனியாக மனுதாக்கல் செய்யலாம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி பணம் வசூலி்த்து மோ்சடியில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கடந்த 2022 செப்டம்பரில்...