மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்து சாப்பிட்டதால் குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில், அந்த இருமல் மருந்தை தயாரித்த தனியார் மருந்து ஆலையின் உரிமையாளரான ரங்கநாதன் கைது செய்யப்பட்டார்.
காஞ்சிபுரம் அருகே சுங்குவார்ச்சத்திரத்தில் அவரது மருந்து ஆலை உள்ளது. தமிழக போலீஸாரின் உதவியுடன் மத்திய பிரதேச மாநில போலீஸார் இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். தற்போது, ரங்கநாதனிடம் மத்தியப் பிரதேச போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, தமிழக அரசு...
முதல்வருக்கு தெரியாமலேயே அவருக்குப் பக்கத்தில் இருக்கும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் ஆர்எஸ்எஸ் தொடர்புடன் விஜய்யை வளர்த்துவிட நினைக்கிறார்கள். முதல்வர் இதிலுள்ள சதியைப் புரிந்துகொண்டு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்றெல்லாம் விஜய்க்கு எதிராக வீரிய விமர்சனங்களை எடுத்துவைத்திருக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் ‘இந்து தமிழ் திசைக்கு’ அளித்த பிரத்யேகப் பேட்டி.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்ச்சி எப்படி இருக்கிறது?
தினமும் தமிழகத்தின் பல முனைகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானவர்கள் எங்கள் கட்சியில்...
வெளிமாநிலக் குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சுங்குவார் சத்திரம் மருந்து ஆலைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரத்தில் இயங்கி வரும் தனியார் மருந்து உற்பத்தி ஆலையில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை உட்கொண்டதால் வெளிமாநிலக் குழந்தைகள் உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கம் கேட்டு வாயிலில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. ஆலை பூட்டப்பட்டிருந்ததால் ஆலைக் கதவில் ஒட்டப்பட்டது.
இந்த ஆலையில் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிப்...
தமிழகத்தில் 3,170 யானைகள் உள்ளதாக வனத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். யானைகள் பாதுகாப்பில் தமிழகம் நீண்டகாலமாகவே முன்னணி வகிக்கிறது. இந்நிலையில், கர்நாடகாவுடன் இணைந்து கடந்த மே 23 முதல் 25-ம் தேதி வரை 3-வது ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
தமிழகத்தில் புலிகள் காப்பகங்கள், வனவிலங்கு சரணாலயங்கள், பிராந்திய வனப் பிரிவுகள் மற்றும் ஒரு தேசியப் பூங்காவில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 2,043 வனத் துறைப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள்...
“யாரும் எதிர்பார்க்காத புதிய கூட்டணி அமையலாம்!” – ‘பொடி’ வைத்துப் பேசும் டிடிவி தினகரன் நேர்காணல்
admin - 0
‘பிரஸ் மீட் நாயகன்’ என்று பத்திரிகையாளர்களே பட்டம் கொடுக்குமளவுக்கு, எந்தக் கேள்வி கேட்டாலும் தனக்கே உரிய டிரேட் மார்க் சிரிப்புடன் பதில் சொல்வதுடன், “வேற கேள்வி ஏதும் இருக்கா?” என்று கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டு கிளம்புபவர் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன். சமீபத்திய அரசியல் நிகழ்வுகள், எதிர்காலத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ‘இந்து தமிழ் திசை’க்கு அவரளித்த பேட்டி:
கரூர் சம்பவத்தில் அரசு மீது தவறில்லை. எந்த சதியும்...
15 நாளில் பதில் இல்லை என்றால் சிறை நிரப்பும் போராட்டம்! – புதுச்சேரி அரசுக்கு எதிராக ஆர்ப்பரிக்கும் பாஜக முன்னாள் அமைச்சர்
admin - 0
புதுச்சேரியில் ஜான் குமாருக்கு அமைச்சரவையில் இடமளிக்க வேண்டும் என்பதற்காக, தங்கள் கட்சியைச் சேர்ந்த சாய் ஜெ.சரவணன்குமாரை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வைத்தது பாஜக தலைமை. அதேசமயம் புதிதாக அமைச்சரவையில் சேர்க்கப்பட்ட ஜான் குமாருக்கு சுமார் 3 மாதங்கள் ஆகப்போகும் நிலையிலும் இன்னும் இலாகா ஒதுக்காமல் இருக்கிறார் முதல்வர் ரங்கசாமி.
இதனிடையே, பட்டியல் இனத்தைச் சேர்ந்த சாய் ஜெ.சரவணன்குமாரை அமைச்சரவையிலிருந்து தூக்கியது சர்ச்சையை கிளப்பியது. இந்த நிலையில், அரசுக்கு எதிராக...
விஜய்யை கைது செய்தால் என்ன நடக்கும்? – நிர்பந்திக்கும் கட்சிகள்… நிதானமாக செயல்படும் அரசு!
admin - 0
கரூர் துயரச் சம்பவத்தின் சுவடுகள் மெல்ல மறைய ஆரம்பித்திருத்தாலும் அதனால் எழுந்த அரசியல் சர்ச்சைகள் இன்னும் அடங்கியபாடில்லை. மாறாக, நாளுக்கு நாள் அது புதுப்புது பரிணாமம் எடுத்துக் கொண்டிருக்கிறது.
கரூர் சம்பவத்தில் தவெகவையும் அதன் தலைவர் விஜய்யையும் சற்று காட்டமாகவே சாடிய நீதிமன்றம், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசுக்கும் சில கேள்விகளை எழுப்பியது. இதனிடையே, விஜய் மீது போலீஸ் வழக்குக் கூட பதிவு செய்யாதது ஏன் எனக் கேள்வி எழுப்பிய...
நடிகரின் புதிய கட்சி வரவால், தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளுக்கும் கடும் நெருக்கடி. உடன் இருக்கும் கட்சிகளை தக்க வைக்கவும், புதிய கட்சிகளை சேர்த்துக் கொள்ளவும் ஆடித்தள்ளுபடி போல ஆபர்களை அள்ளித்தர தயாராகி விட்டன. ஆளும் கட்சி தரப்பு, ‘எங்கள் அணி உடையாது, வலுவாக இருக்கும்’ என வெளியில் சொல்லிக் கொண்டிருந்தாலும் உள்ளுக்குள் விஷயம் வேறு மாதிரியாகத்தான் இருக்கிறது.
அதிலும், தேசிய கதர் கட்சிக்காரர்கள், நடிகர் கட்சியை காட்டி காட்டியே...
தனியார் நிறுவனத்தின் அத்துமீறலை தடுக்க வலியுறுத்தி அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்
admin - 0
அரசு கேபிள் டிவி நிறுவனத்தில், தனியார் நிறுவனத்தின் அத்துமீறலை தடுத்து நிறுத்தக்கோரி அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கத்தினர் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு கேபிள் டிவி நிறுவனத்தில், மந்திரா எனும் தனியார் நிறுவனம் ஆதிக்கம் செலுத்தி பல ஆண்டுகளாக தேங்கிக் கிடக்கும் செட்டாப் பாக்ஸ்களை வாங்கவும், நல்ல நிலையில் இருக்கும் பாக்ஸ்களை மாற்றவும் நிர்ப்பந்திப்பதை தடுக்க வேண்டும். ஏற்கெனவே தொழில் நடத்திவரும் இடங்களில் புதியவர்களுக்கு ஒளிபரப்பு...
அமைச்சராக விரும்பினால் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்யலாம்: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தல்
admin - 0
சாட்சிகளை கலைக்க முற்பட்டால் எந்த நேரமும் செந்தில் பாலாஜியின் ஜாமீனை எங்களால் ரத்து செய்ய முடியும். அவர் அமைச்சராக விரும்பினால் நீதிமன்றத்தில் தனியாக மனுதாக்கல் செய்யலாம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி பணம் வசூலி்த்து மோ்சடியில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கடந்த 2022 செப்டம்பரில்...










