Google search engine
 ​திருப்​பரங்​குன்​றம் வழக்​கில் 2 நீதிப​தி​களும் மாறு​பட்ட தீர்ப்பு வழங்​கி​யிருப்​ப​தால் 3-வது நீதிப​தி​யின் விசா​ரணைக்கு பரிந்​துரை செய்​யப்​பட்​டது. இதையடுத்து இந்த வழக்கை விசா​ரிக்​கும் 3-வது நீதிப​தி​யாக ஆர்​.​விஜயகு​மார் நியமிக்​கப்​பட்​டார். அதைத்​தொடர்ந்​து, இந்த வழக்கு நீதிபதி ஆர்​.​விஜயகு​மார் முன்பு நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது நீதிப​தி, “2 நீதிப​தி​களும் தள்​ளு​ படி செய்த மனுக்​களும், ஒரே மாதிரி​யான உத்​தரவு பிறப்​பித்த மனுக்​களும் விசாரணைக்கு எடுக்​கப்​ப​டாது. 2 நீதிப​தி​களும் முரண்​பட்டு தீர்ப்​பளித்த (சோலைக்​கண்​ணன், ராமலிங்​கம்,...
சென்​னை​யில் 6 இடங்​களில், ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ முகாம்​கள் இன்று நடை​பெறுகின்​றன. தமிழகத்​தில் உள்ள கடைக்​கோடி மக்​களுக்​கும், அவர்​கள் அன்​றாடம் அணுகும் அரசுத் துறை​களின் சேவை​கள், திட்​டங்​களை அவர்​கள் வசிக்​கும் பகுதிக்கே சென்று வழங்​கும் வகை​யில், ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ என்ற திட்​டத்தை முதல்​வர் ஸ்டா​லின் இன்று (15-ம் தேதி) தொடங்கி வைக்​கிறார். இதையொட்​டி, தமிழகம் முழு​வதும் ஏற்​படுத்​தப்​பட்​டுள்ள 10 ஆயிரம் முகாம்​களை​யும் பொது​மக்​கள் பயன்​படுத்​திக் கொள்ள வேண்டும் என முதல்​வர் ஸ்டா​லின்...
நிலுவை வழக்​கு​களின் எண்​ணிக்​கையை குறைக்​கும் வகை​யில், மாநில சமரச தீர்வு மையம் சார்​பில் உயர் நீதி​மன்ற வளாகத்​தில் பிரச்​சார விழிப்​புணர்வு பேரணி நேற்று நடை​பெற்​றது. சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தமிழ்​நாடு சமரச தீர்வு மையம் செயல்​படு​கிறது. உயர் நீதி​மன்​றம் மற்​றும் கீழமை நீதி​மன்​றங்​களில் நிலு​வை​யில் உள்ள வழக்​கு​களை வீண் தாமதம், வீண் செல​வுகள் இல்​லாமல் சுமுக​மாக தீர்க்க இந்த மையம் மூலம் நடவடிக்கை மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது. இதன் செயல்​பாடு​கள் குறித்து மக்​கள்...
 ‘அரசியலில் அப்பா - மகன் உறவு மிக முக்கியம், அப்பா பேச்சை கேட்காத மகன் என்கிற பெயரை வாங்கி விடக்கூடாது’ என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். திருச்சி திருவெறும்பூர் திமுக முன்னாள் எம்எல்ஏ கே.என்.சேகரன் இல்ல திருமண விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது: இந்த திருமணத்தில் மணமகளுக்கு இரண்டு முடிச்சுதான் போட வேண்டும் என தாய் கூறியதைக் கேட்காமல் மணமகன் மூன்று முடிச்சு...
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், முதல்வராக காமராஜர் பள்ளிகளில் அறிமுகம் செய்த மதிய உணவு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் போற்றியுள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், “அன்று பள்ளிகளில் இட்டது மதிய உணவல்ல; நூற்றாண்டுக் கல்விக் கனவுக்கான அடித்தளம்! நல்லவேளை, “பள்ளியில் கல்விதான் கொடுக்க வேண்டும்; சோறு போட அது என்ன ஹோட்டலா?” என்று அதிமேதாவியாய்ப் பேசும் அறிவுக்கொழுந்துகள் இல்லை...
சென்னை சைதாப்​பேட்​டை​யில் உள்ள தாடண்​டர் நகர் அரசு ஊழியர் குடி​யிருப்​பில் தூய்​மைப் பணி சென்னை மாநகராட்​சி​யிடம் ஒப்​படைக்​கப்​பட்​டுள்​ளது. இதன் சேவையை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் நேற்று தொடங்​கி​வைத்​தார். சென்னை மாநக​ராட்​சி, அடை​யார் மண்​டலத்​துக்கு உட்​பட்ட 169-வது வார்​டு, தாடண்​டர் நகர் அரசு குடி​யிருப்பு பகு​தி, 70.73 ஏக்​கர் பரப்​பளவு கொண்​டது. இங்கு 1844 குடி​யிருப்​பு​கள் உள்​ளன. மேலும் 1500 குடி​யிருப்​பு​கள் வரவுள்​ளன. இவ்​வளாகத்​தில் தூய்​மைப் பணி மற்​றும் இதர பராமரிப்பு பணி​கள்...
ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு ஏற்​பட்டு உயி​ரிழந்​தார். அந்த பேருந்து மோதிய விபத்​தில் சாலை​யில் நடந்து சென்று கொண்​டிருந்த முதி​ய​வர் உயி​ரிழந்​தார். 4 கார்​களும் சேதம் அடைந்​தன. அரும்​பாக்​கம் 100 அடி சாலை, தவசு குட்டி பிரி​யாணி கடை வழி​யாக நேற்று காலை 6.10 மணி​யள​வில் அரசுப் பேருந்து ஒன்று கிளாம்​பாக்​கத்​திலிருந்து கோயம்​பேடு நோக்கி சென்று கொண்​டிருந்​தது. பேருந்தை தரு​மபுரி மாவட்​டம், அரூரைச் சேர்ந்த வேலுமணி (58) என்​பவர்...
கடலூர் ரயில் விபத்து சம்​பவம் எதிரொலி​யாக, இன்​டர்​லாக் செய்​யப்​ப​டாத கேட்​களில் விரும்​பத்​த​காத சம்​பவங்​களை தவிர்க்க முக்​கிய நடவடிக்​கைகளை எடுக்க தெற்கு ரயில்வே பொது​மேலா​ளர் ஆர்​.என். சிங் அறி​வுறுத்​தி​ உள்​ளார். கடலுார் மாவட்டம் செம்​மங்​குப்​பத்​தில் பள்ளி வாக​னம் மீது பயணி​கள் ரயில் மோதிய சம்​பவத்​தில் மூன்று மாணவர்​கள் உயி​ரிழந்​தனர். இந்த சம்​பவத்தை தொடர்ந்​து, லெவல் கிராசிங் பகு​தி​களில் பாது​காப்பு அம்​சங்​களை மேம்​படுத்​து​வது, இன்​டர்​லாக்​கிங் தொழில்​நுட்​பத்​துக்கு மாற்​றப்​ப​டாத பகு​தி​களில் உள்ள லெவல் கிராசிங்...
அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி 2-ம் கட்ட பிரச்​சார சுற்​றுப்​பயணத்தை ஜூலை 24-ம் தேதி தொடங்​கி, 36 தொகு​தி​களுக்கு செல்​கிறார். அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி, 2026 தேர்​தலை முன்​னிட்டு பல்​வேறு பகு​தி​களில் உள்ள நகர்ப்​புற உள்​ளாட்சி அமைப்​பு​கள் மற்​றும் திமுக அரசை கண்​டித்து அதி​முக ஆர்ப்​பாட்​டங்​களை அறி​வித்து வரு​கிறது. இதனிடையே “மக்​களை காப்​போம்: தமிழகத்தை மீட்​போம்” என்ற தலைப்பில் கடந்த ஜூலை 7-ம் தேதி முதல்​கட்ட பிரச்​சார சுற்றுப்​பயணத்தை பழனி​சாமி கோவை​யில்...
திரு​வண்​ணா​மலை நகராட்​சி, மாநக​ராட்​சி​யாகத் தரம் உயர்த்​தப்​பட்​டதையடுத்து நேற்று மாநக​ராட்சி அலு​வல​கத்​தில் மேயருக்கு தங்​கச் சங்​கி​லி, செங்​கோல் மற்​றும் அங்கி அணிவிக்​கும் விழா நடந்​தது. அமைச்​சர் எ.வ.வேலு தலைமை வகித்​தார். சட்​டப்​பேரவை துணைத் தலை​வர் கு.பிச்​சாண்​டி, எம்​.பி. அண்​ணாதுரை, ஆட்​சி​யர் க.தர்ப்​பக​ராஜ் முன்​னிலை வகித்தனர். துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின், மேயர் நிர்​மலா வேல்​மாறனுக்கு தங்​கச் சங்​கி​லி, வெள்ளி செங்​கோல் வழங்​கி, மேயருக்​கான அங்​கியை அணி​வித்​தார். பின்​னர் அவர் பேசி​ய​தாவது: இங்கு...