திருப்பரங்குன்றம் வழக்கில் 2 நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியிருப்பதால் 3-வது நீதிபதியின் விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை விசாரிக்கும் 3-வது நீதிபதியாக ஆர்.விஜயகுமார் நியமிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து, இந்த வழக்கு நீதிபதி ஆர்.விஜயகுமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, “2 நீதிபதிகளும் தள்ளு படி செய்த மனுக்களும், ஒரே மாதிரியான உத்தரவு பிறப்பித்த மனுக்களும் விசாரணைக்கு எடுக்கப்படாது. 2 நீதிபதிகளும் முரண்பட்டு தீர்ப்பளித்த (சோலைக்கண்ணன், ராமலிங்கம்,...
சென்னையில் 6 இடங்களில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் இன்று நடைபெறுகின்றன. தமிழகத்தில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும், அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள், திட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்கும் வகையில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (15-ம் தேதி) தொடங்கி வைக்கிறார்.
இதையொட்டி, தமிழகம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ள 10 ஆயிரம் முகாம்களையும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின்...
நிலுவை வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில், மாநில சமரச தீர்வு மையம் சார்பில் உயர் நீதிமன்ற வளாகத்தில் பிரச்சார விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு சமரச தீர்வு மையம் செயல்படுகிறது.
உயர் நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை வீண் தாமதம், வீண் செலவுகள் இல்லாமல் சுமுகமாக தீர்க்க இந்த மையம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் செயல்பாடுகள் குறித்து மக்கள்...
‘அரசியலில் அப்பா - மகன் உறவு மிக முக்கியம், அப்பா பேச்சை கேட்காத மகன் என்கிற பெயரை வாங்கி விடக்கூடாது’ என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
திருச்சி திருவெறும்பூர் திமுக முன்னாள் எம்எல்ஏ கே.என்.சேகரன் இல்ல திருமண விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது: இந்த திருமணத்தில் மணமகளுக்கு இரண்டு முடிச்சுதான் போட வேண்டும் என தாய் கூறியதைக் கேட்காமல் மணமகன் மூன்று முடிச்சு...
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், முதல்வராக காமராஜர் பள்ளிகளில் அறிமுகம் செய்த மதிய உணவு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் போற்றியுள்ளார்.
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், “அன்று பள்ளிகளில் இட்டது மதிய உணவல்ல; நூற்றாண்டுக் கல்விக் கனவுக்கான அடித்தளம்!
நல்லவேளை, “பள்ளியில் கல்விதான் கொடுக்க வேண்டும்; சோறு போட அது என்ன ஹோட்டலா?” என்று அதிமேதாவியாய்ப் பேசும் அறிவுக்கொழுந்துகள் இல்லை...
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தாடண்டர் நகர் அரசு ஊழியர் குடியிருப்பில் தூய்மைப் பணி சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் சேவையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கிவைத்தார்.
சென்னை மாநகராட்சி, அடையார் மண்டலத்துக்கு உட்பட்ட 169-வது வார்டு, தாடண்டர் நகர் அரசு குடியிருப்பு பகுதி, 70.73 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு 1844 குடியிருப்புகள் உள்ளன. மேலும் 1500 குடியிருப்புகள் வரவுள்ளன. இவ்வளாகத்தில் தூய்மைப் பணி மற்றும் இதர பராமரிப்பு பணிகள்...
ஓடும் பேருந்தில் மாரடைப்பு ஏற்பட்டு ஓட்டுநர் உயிரிழப்பு: கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மோதி முதியவர் மரணம்
admin - 0
ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அந்த பேருந்து மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த முதியவர் உயிரிழந்தார். 4 கார்களும் சேதம் அடைந்தன. அரும்பாக்கம் 100 அடி சாலை, தவசு குட்டி பிரியாணி கடை வழியாக நேற்று காலை 6.10 மணியளவில் அரசுப் பேருந்து ஒன்று கிளாம்பாக்கத்திலிருந்து கோயம்பேடு நோக்கி சென்று கொண்டிருந்தது.
பேருந்தை தருமபுரி மாவட்டம், அரூரைச் சேர்ந்த வேலுமணி (58) என்பவர்...
இன்டர்லாக் செய்யப்படாத கேட்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க தெற்கு ரயில்வே அறிவுறுத்தல்
admin - 0
கடலூர் ரயில் விபத்து சம்பவம் எதிரொலியாக, இன்டர்லாக் செய்யப்படாத கேட்களில் விரும்பத்தகாத சம்பவங்களை தவிர்க்க முக்கிய நடவடிக்கைகளை எடுக்க தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என். சிங் அறிவுறுத்தி உள்ளார். கடலுார் மாவட்டம் செம்மங்குப்பத்தில் பள்ளி வாகனம் மீது பயணிகள் ரயில் மோதிய சம்பவத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, லெவல் கிராசிங் பகுதிகளில் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துவது, இன்டர்லாக்கிங் தொழில்நுட்பத்துக்கு மாற்றப்படாத பகுதிகளில் உள்ள லெவல் கிராசிங்...
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி 2-ம் கட்ட பிரச்சார சுற்றுப்பயணத்தை ஜூலை 24-ம் தேதி தொடங்கி, 36 தொகுதிகளுக்கு செல்கிறார். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, 2026 தேர்தலை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் திமுக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டங்களை அறிவித்து வருகிறது.
இதனிடையே “மக்களை காப்போம்: தமிழகத்தை மீட்போம்” என்ற தலைப்பில் கடந்த ஜூலை 7-ம் தேதி முதல்கட்ட பிரச்சார சுற்றுப்பயணத்தை பழனிசாமி கோவையில்...
திருவண்ணாமலை நகராட்சி, மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டதையடுத்து நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் மேயருக்கு தங்கச் சங்கிலி, செங்கோல் மற்றும் அங்கி அணிவிக்கும் விழா நடந்தது. அமைச்சர் எ.வ.வேலு தலைமை வகித்தார். சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, எம்.பி. அண்ணாதுரை, ஆட்சியர் க.தர்ப்பகராஜ் முன்னிலை வகித்தனர். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மேயர் நிர்மலா வேல்மாறனுக்கு தங்கச் சங்கிலி, வெள்ளி செங்கோல் வழங்கி, மேயருக்கான அங்கியை அணிவித்தார்.
பின்னர் அவர் பேசியதாவது: இங்கு...








