வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள மீனவர்களை மீட்க உதவி எண்கள்: சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
admin - 0
ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளில் நிலவி வரும் அசாதாரண போர் சூழல் காரணமாக, ஈரானிலிருந்து தாயகம் திரும்ப முடியாமல் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் தவித்து வருகின்றனர்.
இதில் தமிழகத்தைச் சேர்ந்த 595 பேர் அந்நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் சிக்கியுள்ளனர். தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்டு தாயகம் அழைத்து வரக் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள சென்னையைச் சேர்ந்த மீனவர்கள் மற்றும்...
மாதாந்திர ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்: அரசு பள்ளி எல்கேஜி, யுகேஜி ஆசிரியர்கள் கோரிக்கை
admin - 0
முழு நேரமாக பணியாற்றுவதால் மாதாந்திர ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று அரசுப் பள்ளி எல்கேஜி, யுகேஜி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊதிய உயர்வு, மகப்பேறு விடுப்பு, பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தமிழ்நாடு முன்பருவக்கல்வி ஆசிரியர்கள் நலச்சங்கம் சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அப்போது அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் ஆர்.லட்சுமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் கடந்த...
வணிக பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டர்கள் தட்டுப்பாடு: விறகு அடுப்புக்கு மாறிய கேட்டரிங் நிறுவனங்கள்
admin - 0
வணிக பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டர்கள் தட்டுப்பாட்டால், சென்னையில் உள்ள பல்வேறு கேட்டரிங் நிறுவனங்கள் மீண்டும் விறகு அடுப்புக்கே மாறியுள்ளன.
போர் காரணமாக வணிக பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளதால், சென்னை முழுவதும் உள்ள உணவு தயாரிப்பு மற்றும் கேட்டரிங் நிறுவனங்கள் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளன.
சென்னையில் வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டர்கள் வழக்கம்போல் விநியோகம் செய்யப்பட்டு வந்தாலும், உணவகங்கள், டீக்கடைகள் மற்றும் கேட்டரிங் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் வணிக சிலிண்டர்களுக்கு...
எரிபொருள், காஸ் தட்டுப்பாட்டை தீர்க்க வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே நடைபெறும் போரின் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள், காஸ் தட்டுப்பாட்டை தீர்க்க வேண்டும்.
தட்டுப்பாட்டை காரணம் காட்டி எரிபொருள் விலையை ஏற்றி விற்கும் நிறுவனங்கள் மீது தமிழக அரசு மற்றும் மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநர்கள் நல சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்...
பத்திரிகையாளர் சங்கத்தின் பிரநிதிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று சந்தித்தனர். அப்போது அவர்கள் பெற்றுவரும் ஓய்வூதியத்தில் உயர்வு, மருத்துவக் காப்பீடு, வீட்டுவசதி உள்ளிட்ட கோரிக்கைகளை முதல்வரிடம் முன்வைத்தனர்.
பத்திரிகையாளர்கள் சங்கத்தினரின் கோரிக்கையை ஏற்கும் வகையில் பத்திரிகையாளர்கள் தற்போது பெற்று வரும் ஓய்வூதியம் மாதம் ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரமாகவும் குடும்ப ஓய்வூதியம் ரூ.6ஆயிரத்தில் இருந்து ரூ.7,500ஆகவும் உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், சென்னை பத்திரிகையாளர்கள் குடியிருக்க...
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தும் போரால், காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள காஸ் ஏஜென்சி அலுவலகங்களை காஸ் சிலிண்டர் கேட்டு பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டனர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் நடத்தி வரும் தீவிர தாக்குதல் காரணமாக,ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதனால், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விநியோகம்...
வடசென்னை பகுதியில் ரூ.50 கோடியில் புதிய திட்டப் பணிகள்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
admin - 0
வடசென்னை பகுதியில் ரூ.50 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்ட பணிகளுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில், வால்டாக்ஸ் சாலை, தண்ணீர்தொட்டி தெருவில் ரூ.179.04 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள முதல்வர் நகர்ப்புற குடியிருப்புகள், முதல்வர் திருமண மாளிகை, மாநகராட்சி அச்சகம், முதல்வர் விளையாட்டுத் திடல், ரத்த சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மறுவாழ்வு மையம், பெருங்களத்தூரில் ரூ.4.73 கோடி செலவில்...
தமிழக சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், திருவள்ளூர், பல்லாவரத்தில் நேற்று துணை ராணுவப் படையினர், போலீஸாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதியை விரைவில் தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துவிடும்.
ஆகவே, திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்தல் பணி மேற்கொள்ள துணை ராணுவப் படையினர் 90 பேர் உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து சிறப்பு ரயில் மூலம் சென்னை,...
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஒரு தொகுதியில் மட்டும் தனி சின்னத்தில் போட்டியிடுகிறது.
ஆளும் கட்சியான திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், தேமுதிக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட 26 கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.
திமுக சார்பில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையானது கடந்த பிப்ரவரி 22-ம் தேதி தொடங்கி நடத்தப்பட்டுவருகிறது. இதில் காங்கிரசுக்கு 28, முஸ்லீம் லீக், மமக-க்கு தலா...
துறைமுகம் – மதுரவாயல் 2 அடுக்கு மேம்பாலப் பணி 2027-ல் நிறைவடையும்: தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி தகவல்
admin - 0
சென்னை துறைமுகம் - மதுரவாயல் 2 அடுக்கு மேம்பாலப் பணிகள் 2027-ம் ஆண்டில் நிறைவடையும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணைய மண்டல அலுவலர் வீரேந்தர் சாம்பியால் தெரிவித்தார்.
சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையே 21 கி.மீ. தூரம் கொண்ட புதிய 4 வழித்தட 2 அடுக்கு மேம்பாலப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மண்டல அலுவலர் வீரேந்தர் சாம்பியால் கூறியதாவது: தொடக்கத்தில் ஒற்றை அடுக்காக...










