தவெக அரசின் வருவாய் கூட்டும் முன்முயற்சிகள் என்னென்ன? – 2026 பட்ஜெட் உரையில் மரிய வில்சன் விவரிப்பு
admin - 0
மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றவும், மாநிலத்தை நிதி நெருக்கடியில் இருந்து மீட்கவும் தவெக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது என்று நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.
நடப்பு நிதி ஆண்டுக்கான (2026-27) பொது பட்ஜெட், தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். தனது பட்ஜெட் உரையில், தமிழகத்தின் கடன் சுமை குறித்து விளக்கிய அவர், அதேநேரத்தில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள்...
சுகாதாரம், உயர்கல்வி, நகராட்சி, வீட்டுவசதி துறைகளின் கீழ் ரூ.1,027 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகள்
admin - 0
தமிழகம் முழுவதும் சுகாதாரம், உயர்கல்வி, நகராட்சி நிர்வாகம், வீட்டு வசதித் துறைகளின் சார்பில் ரூ.1,027.49 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்துவைத்த முதல்வர் விஜய், ரூ.710.50 கோடி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தலைமைச்செயலகத்தில் முதல்வர் விஜய், நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தின் சார்பில் காணொலிக் காட்சி வாயிலாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு நகராட்சிகளில், ரூ.112.85 கோடியில் 4 முடிவுற்ற திட்டப் பணிகளைத்...
தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது. அப்போது, தவெக அரசின் நடப்பு நிதி ஆண்டுக்கான முதல் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நாளை வேளாண் பட்ஜெட் தாக்கலாகிறது.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று சில கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்துள்ளது. அக்கட்சியின் தலைவர் விஜய், புதிய முதல்வராக கடந்த மே 10-ம் தேதி பதவியேற்றார். புதிதாக பொறுப்பேற்ற தவெக அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம்...
‘ஆணவம், அழிவுக்கு வழிவகுக்கும்; தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும்’ என உதயநிதி கைது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: காவிரி பிரச்சினையில் அரசின் தோல்வி வெளிச்சத்துக்கு வந்து விட்டதை மறைக்கும் வகையில், பிரச்சினையையே திசை திருப்ப இன்று (நேற்று) காலையில் உதயநிதி வீட்டுக்கு வந்த போலீஸ் படை, அவரை அராஜகமாகக் கைது செய்துள்ளது.
நாளை சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்க இருக்கிறது. நிதிநிலை...
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 8-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னையில் வரும் 7-ம் தேதி அமைதிப் பேரணி நடைபெறுகிறது.
இதுகுறித்து திமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 8-ம் ஆண்டு நினைவுநாளையொட்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெறவுள்ளது.
ஆகஸ்ட் 7-ம் தேதி காலை 8 மணிக்கு சென்னை அண்ணா சாலை ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதி சிலை அருகில் இருந்து அமைதிப்...
கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி உயிரிழந்த பிறகும், அவருக்கு உணவு மற்றும் பராமரிப்பு வழங்கியதாகக் கூறி கூடுதல் கட்டணம் வசூலித்ததாக தொடரப்பட்ட வழக்கில், சென்னை வடபழனியில் செயல்படும் தனியார் மருத்துவமனைக்கு ரூ.65 லட்சத்து 62 ஆயிரத்து 500 அபராதம் விதித்து செங்கல்பட்டு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பளித்தது.
கூடுதல் தொகை வசூல்
சென்னை மாடம்பாக்கத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன், தனது தாய் சுசிலாவை 2003-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம்...
தஞ்சையில் நேற்று (ஞாயிற்று கிழமை) நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை கைது செய்யப்பட்டார்.
தஞ்சாவூரில் நேற்று திமுக சார்பில், காவிரி மற்றும் மேகேதாட்டு விவகாரத்தில் தவெக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, முதல்வர் விஜய் மற்றும்...
கடந்த திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற ஊழல்கள் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாளை முன்னிட்டு, திருச்சியில் அவரது சிலைக்கு நேற்று அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ், சட்டப்பேரவை துணைத் தலைவர் ரவிசங்கர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அப்போது அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறியது:...
இந்தளவுக்கு மோசமான அரசை தமிழகம் இதுவரை கண்டதில்லை என தஞ்சாவூரில் நடந்த திமுக ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி விமர்சித்துள்ளார்.
மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சியை தடுக்க நடவடிக்கை எடுக்காத தவெக அரசை கண்டித்தும், கூட்டுறவு வங்கிகளில் பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்து, டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வலியுறுத்தியும் திமுக சார்பில் தஞ்சாவூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னாள் அமைச்சரும், திமுக முதன்மைச்...
கர்நாடகா மாநில அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் இன்று (ஆக.4) அதிகாலையில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது.
கர்நாடகா மாநிலம் கபினி அணையில் இருந்து கடந்த 1-ம் தேதி காலையில் விநாடிக்கு 5,000 கனஅடி தண்ணீர் காவிரியாற்றில் திறந்து விடப்பட்டது. பின்னர் பகலில் 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
மேலும், அன்று நள்ளிரவில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு 25 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. பின்னர் கபினி அணைக்கான...










