Google search engine
அரசு மருத்​துவக் கல்​லூரி மருத்​து​வ​மனை​களில் பணி​யாற்​றும் மகப்​பேறு மருத்​து​வர்​களுக்கு இடமாறு​தல் கலந்​தாய்வை நடத்த வேண்​டும் என்று அரச மகப்​பேறு, குழந்​தைகள் நல மருத்துவர்கள் கோரிக்கை விடுத்​துள்​ளனர். தமிழகத்​தில் உள்ள அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​களில் மருத்​துவப் பணி​யாளர் தேர்வு வாரி​யம் (எம்​ஆர்​பி) மூலம் சிறப்பு மருத்துவர்கள் பணி நியமனம் செய்​யப்பட உள்​ளனர். அதற்​காக, ஏற்​கெனவே அங்கு பணி​யாற்றி வரும் மருத்​து​வர்​களுக்கு கடந்த வாரம் இடமாறு​தல் கலந்​தாய்வு நடத்​தப்​பட்​டது. ஆனால், மகப்​பேறு துறை​யில்...
இந்​தி​யா​வில் ரயில் சேவை​களை பெறு​வதற்கு பல்​வேறு செயலிகள் பயன்​பாட்​டில் உள்​ளன. இவற்​றில் யுடிஎஸ் செயலி (UTS- Unreserved Ticketing System) முக்​கிய​மானதாகும். இது 2014-ம் ஆண்டு டிசம்​பரில் அறி​முகம் செய்​யப்​பட்​டது. நடைமேடை டிக்​கெட், சீசன் டிக்​கெட், முன்​ப​தி​வில்​லாத டிக்​கெட்​டு​களை இந்த செயலி​யில் பதிவு செய்து கொள்​ளலாம். இந்​நிலை​யில், யுடிஎஸ் செயலி மார்ச் 1-ம் தேதி முதல் நிறுத்​தப்​படு​வ​தாக ரயில்வே நிர்​வாகம் அறி​வித்​துள்​ளது. அதே நேரத்​தில், ரயில் ஒன் (RailOne) செயலியை பயன்​படுத்த...
தீ விபத்து ஏற்​பட்​டால் விரைந்து அணைப்​பது எப்​படி என தமிழகம் முழு​வதும் தனி​யார் காவலர்​களுக்கு தீயணைப்பு துறை​யினர் பயிற்சி அளித்​தனர். தீ விபத்து ஏற்​ப​டா​மல் பாது​காத்​துக் கொள்​வது, தீ விபத்து ஏற்​பட்​டால் தீயணைப்பு வீரர்​கள் விபத்து இடத்​துக்கு வரு​வதற்​குள் தீயை கட்​டுக்​குள் கொண்டு வரு​வது எப்​படி என குடி​யிருப்​பு​கள், மருத்​து​வ​மனை​கள், தொழிற்​சாலைகள், திரையரங்​கம், வணிக வளாகங்​கள், பள்​ளி​கள் போன்​றவற்​றில் பணிபுரி​யும் தனி​யார் காவலர்​களுக்கு தீ பாது​காப்பு குறித்த விழிப்​புணர்வு பயிற்சி...
ஊராட்சி செயலர்​களை புதிய உறு​தி​யளிக்​கப்​பட்ட ஓய்​வூ​திய திட்​டத்​தில் சேர்க்க வேண்​டும் என்​று, முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம் வலி​யுறுத்​தி​யுள்​ளார். இது தொடர்​பாக, அவர் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை: தமிழக அரசின் ஊதி​யக் குழு பரிந்​துரைப்​படி, ஊராட்சி செயலர்​களுக்கு கால​முறை ஓய்​வூ​தி​யம் வழங்​கப்​பட்டு வரு​கிறது. பதிவறை எழுத்​தர் பணிக்கு இணை​யான ரூ.15,900-50,400 கால​முறை ஊதி​யத்தை ஊராட்சி செய​லா​ளர்​கள் பெற்று வரு​கின்​றனர். அரசுப் பணி​யாளர்​களுக்கு வழங்​கப்​படும் அகவிலைப்​படி, வீட்டு வாடகைப்​படி, மருத்​து​வப் படி போன்​றவை​யும் வழங்​கப்​படு​கிறது....
தூத்​துக்​குடி மாவட்​டம், கோவில்​பட்​டியைச் சேர்ந்​தவர் டி.​ரா​தாகிருஷ்ணன் (73). இவர் கடந்த 1981-ல் தமிழக கேடரில் ஐபிஎஸ் ஆனார். மதுரை காவல் ஆணை​யர், சென்னை இணை ஆணை​யர் உட்பட பல்​வேறு பொறுப்​பு​களில் பணி​யாற்​றி​னார். பின்​னர் கூடு​தல் டிஜிபி​யாக பணி ஓய்வு பெற்று சென்​னையை அடுத்த பனையூரில் குடும்​பத்​துடன் வசித்து வந்​தார். இந்​நிலை​யில், அவர் உடல் நலக்​குறைவால் நேற்று காலமானார். அவரது உடலுக்கு குடும்​பத்​தினர், நண்​பர்​கள், போலீஸ் அதி​காரி​கள் நேரில் அஞ்​சலி செலுத்​தினர்....
தமிழகத்​தின் சமூக, கலாச்​சா​ரம் மற்​றும் கட்​டமைப்பு வளர்ச்​சிக்கு தங்​களது தன்​னலமற்ற சேவை​யால் சிறந்த பங்​களிப்பை வழங்​கிய தனி​நபர்​கள், நிறு​வனங்​களை கவுர​வித்து ‘ராஜஸ்​தானி - தமிழ் சேவா’ விருதுகளை ராஜஸ்​தானி அசோசி​யேஷன் தமிழ்நாடு வழங்கி வரு​கிறது. இந்த ஆண்​டுக்​கான விருதுக்கு தமிழ்நாடு டாக்​டர் எம்​ஜிஆர் மருத்​து​வப் பல்​கலைக்​கழக முன்​னாள் துணை வேந்​தர் சுதாசேஷய்​யன், மேற்கு மாம்​பலம் பொது சுகா​தார மையத் தலை​வர் சுவாமி நாதன் ஐசன்​ஹோவர், மயி​லாப்​பூர் கபாலீஸ்​வரர் கோயில் தலைமை...
கடுமை​யான பனிமூட்டம் நில​விய​தால் சென்னை விமான நிலை​யத்​தில் 40 விமானங்​களின் சேவை பாதிக்​கப்​பட்​டது. சென்னை விமான நிலைய பகுதியில் நேற்று கடும் பனிமூட்டம் நிலவியதால் விமான ஓடு​பாதை தெளி​வாக தெரியவில்லை. இதனால் மும்பை, கோலாலம்​பூர், புனே, பெங்​களூரு, ஹைத​ரா​பாத், துபாயிலிருந்து வந்த 7 விமானங்​கள் சென்​னை​யில் தரை​யிறங்க முடி​யாமல் நீண்ட நேரம் வானில் வட்​டமடித்​துக் கொண்டு இருந்​தன. சென்னை விமான நிலைய கட்​டுப்​பாட்டு அறை அதி​காரி​கள், அந்த விமானங்​களை பெங்​களூரு, கோவை,...
கும்​மிடிப்​பூண்டிக்கு சென்னையிலிருந்து நேற்று காலை 7.10 மணிக்கு மின்​சார ரயில் புறப்​பட்​டது. இந்த ரயில் எண்ணூர் - அத்​திப்​பட்டு இடையே சென்று கொண்​டிருந்​த​போது, உயர் அழுத்த மின்​பாதை​யில் இருந்து மின்​சா​ரத்தை பெறும் மடக்கு சாதனம் பழுதடைந்தது. இதனால் ரயில் தொடர்ந்து செல்ல முடிய​வில்​லை. அதையடுத்து அங்​கேயே ரயில் நிறுத்​தப்​பட்​டது. இதுகுறித்து, ரயில்வே அதி​காரி​களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதன்​பேரில், ரயில்வே அதி​காரி​கள், பணி​யாளர்​கள் அங்கு விரைந்து வந்​து, பழுதை சரிசெய்​யும் பணி​யில் ஈடு​பட்​டனர். இதனால்,...
சென்னை எழும்பூர் ரயில் நிலை​யத்​தில் சீரமைப்பு பணி நடந்து வரு​கிறது. இதன் காரண​மாக, பிப்​.8-ம் தேதி (நேற்​று) முதல் 18-ம் தேதி வரை அங்கு புறநகர் மின்​சார ரயில்​கள் இயக்​கத்​தில் சில மாற்​றங்​கள் செய்​யப்​பட்​டுள்​ளன. நடைமேடை மாற்​றம்: புறநகர் மின்​சார ரயில்​கள் மேற்​கண்ட நாட்​களில் இரவு 9 மணி முதல் அதி​காலை 5 மணி வரை 10, 11-வது நடைமேடைகளுக்கு பதிலாக 5, 6-வது நடைமேடைகளில் வந்து செல்​லும். செங்​கல்​பட்​டு, தாம்​பரத்​தில் இருந்து...
தூத்​துக்​குடி மாவட்​டம் கயத்​தார் அருகே உள்ள வானர​முட்டி கிராமத்​தைச் சேர்ந்​தவர் கன்டெய்னர் லாரி ஓட்​டுநர் முத்​து​மாரியப்​பன் (36). இவர் தூத்​துக்​குடி துறை​முகத்​தில் கன்​டெய்​னரை இறக்​கி​விட்டு அடுத்த கன்​டெய்​னரை ஏற்​று​வதற்​காக சென்னை துறை​முகத்​துக்கு நேற்று முன்​தினம் அதி​காலை 3 மணி​யள​வில் வந்​தார். அந்​த​மானுக்கு சரக்கு ஏற்​றும் இடத்​தில் டிரெய்​லர் லாரியை ஓட்​டிச் சென்​ற​போது திடீரென முன்​பக்​கம் கேபின் (டிரைவர் கேபின்) உடைந்து அதனுடன் முத்​து​மாரியப்​பன் கடலில் தலைக்​குப்​புற விழுந்​தார். இதைக் கண்டு...