அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மகப்பேறு மருத்துவர்கள் இடமாறுதல் கலந்தாய்வை நடத்த கோரிக்கை
admin - 0
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பணியாற்றும் மகப்பேறு மருத்துவர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும் என்று அரச மகப்பேறு, குழந்தைகள் நல மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) மூலம் சிறப்பு மருத்துவர்கள் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். அதற்காக, ஏற்கெனவே அங்கு பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கு கடந்த வாரம் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டது.
ஆனால், மகப்பேறு துறையில்...
மார்ச் 1 முதல் யுடிஎஸ் மொபைல் செயலி நிறுத்தப்படுகிறது – ‘ரயில் ஒன்’ செயலி பயன்படுத்த ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தல்
admin - 0
இந்தியாவில் ரயில் சேவைகளை பெறுவதற்கு பல்வேறு செயலிகள் பயன்பாட்டில் உள்ளன. இவற்றில் யுடிஎஸ் செயலி (UTS- Unreserved Ticketing System) முக்கியமானதாகும். இது 2014-ம் ஆண்டு டிசம்பரில் அறிமுகம் செய்யப்பட்டது.
நடைமேடை டிக்கெட், சீசன் டிக்கெட், முன்பதிவில்லாத டிக்கெட்டுகளை இந்த செயலியில் பதிவு செய்து கொள்ளலாம். இந்நிலையில், யுடிஎஸ் செயலி மார்ச் 1-ம் தேதி முதல் நிறுத்தப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதே நேரத்தில், ரயில் ஒன் (RailOne) செயலியை பயன்படுத்த...
தீ விபத்து ஏற்பட்டால் விரைந்து அணைக்கும் முறை: தமிழகம் முழுவதும் தனியார் காவலர்களுக்கு பயிற்சி
admin - 0
தீ விபத்து ஏற்பட்டால் விரைந்து அணைப்பது எப்படி என தமிழகம் முழுவதும் தனியார் காவலர்களுக்கு தீயணைப்பு துறையினர் பயிற்சி அளித்தனர்.
தீ விபத்து ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்வது, தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்பு வீரர்கள் விபத்து இடத்துக்கு வருவதற்குள் தீயை கட்டுக்குள் கொண்டு வருவது எப்படி என குடியிருப்புகள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், திரையரங்கம், வணிக வளாகங்கள், பள்ளிகள் போன்றவற்றில் பணிபுரியும் தனியார் காவலர்களுக்கு தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி...
ஊராட்சி செயலர்களை புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்
admin - 0
ஊராட்சி செயலர்களை புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசின் ஊதியக் குழு பரிந்துரைப்படி, ஊராட்சி செயலர்களுக்கு காலமுறை ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. பதிவறை எழுத்தர் பணிக்கு இணையான ரூ.15,900-50,400 காலமுறை ஊதியத்தை ஊராட்சி செயலாளர்கள் பெற்று வருகின்றனர்.
அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி, மருத்துவப் படி போன்றவையும் வழங்கப்படுகிறது....
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்தவர் டி.ராதாகிருஷ்ணன் (73). இவர் கடந்த 1981-ல் தமிழக கேடரில் ஐபிஎஸ் ஆனார். மதுரை காவல் ஆணையர், சென்னை இணை ஆணையர் உட்பட பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார். பின்னர் கூடுதல் டிஜிபியாக பணி ஓய்வு பெற்று சென்னையை அடுத்த பனையூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், அவர் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது உடலுக்கு குடும்பத்தினர், நண்பர்கள், போலீஸ் அதிகாரிகள் நேரில் அஞ்சலி செலுத்தினர்....
சுதா சேஷய்யன் உள்ளிட்ட 5 பேருக்கு ‘ராஜஸ்தானி தமிழ் சேவா’ விருதுகள்: நீதிபதி மகாதேவன் வழங்கினார்
admin - 0
தமிழகத்தின் சமூக, கலாச்சாரம் மற்றும் கட்டமைப்பு வளர்ச்சிக்கு தங்களது தன்னலமற்ற சேவையால் சிறந்த பங்களிப்பை வழங்கிய தனிநபர்கள், நிறுவனங்களை கவுரவித்து ‘ராஜஸ்தானி - தமிழ் சேவா’ விருதுகளை ராஜஸ்தானி அசோசியேஷன் தமிழ்நாடு வழங்கி வருகிறது.
இந்த ஆண்டுக்கான விருதுக்கு தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் சுதாசேஷய்யன், மேற்கு மாம்பலம் பொது சுகாதார மையத் தலைவர் சுவாமி நாதன் ஐசன்ஹோவர், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தலைமை...
கடுமையான பனிமூட்டம் நிலவியதால் சென்னை விமான நிலையத்தில் 40 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது. சென்னை விமான நிலைய பகுதியில் நேற்று கடும் பனிமூட்டம் நிலவியதால் விமான ஓடுபாதை தெளிவாக தெரியவில்லை.
இதனால் மும்பை, கோலாலம்பூர், புனே, பெங்களூரு, ஹைதராபாத், துபாயிலிருந்து வந்த 7 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்துக் கொண்டு இருந்தன.
சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், அந்த விமானங்களை பெங்களூரு, கோவை,...
கும்மிடிப்பூண்டிக்கு சென்னையிலிருந்து நேற்று காலை 7.10 மணிக்கு மின்சார ரயில் புறப்பட்டது. இந்த ரயில் எண்ணூர் - அத்திப்பட்டு இடையே சென்று கொண்டிருந்தபோது, உயர் அழுத்த மின்பாதையில் இருந்து மின்சாரத்தை பெறும் மடக்கு சாதனம் பழுதடைந்தது.
இதனால் ரயில் தொடர்ந்து செல்ல முடியவில்லை. அதையடுத்து அங்கேயே ரயில் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில், ரயில்வே அதிகாரிகள், பணியாளர்கள் அங்கு விரைந்து வந்து, பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதனால்,...
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் சீரமைப்பு பணி நடந்து வருகிறது. இதன் காரணமாக, பிப்.8-ம் தேதி (நேற்று) முதல் 18-ம் தேதி வரை அங்கு புறநகர் மின்சார ரயில்கள் இயக்கத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
நடைமேடை மாற்றம்: புறநகர் மின்சார ரயில்கள் மேற்கண்ட நாட்களில் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை 10, 11-வது நடைமேடைகளுக்கு பதிலாக 5, 6-வது நடைமேடைகளில் வந்து செல்லும்.
செங்கல்பட்டு, தாம்பரத்தில் இருந்து...
சென்னை துறைமுகத்தில் கடலுக்குள் கன்டெய்னர் லாரி டிரெய்லர் கேபின் விழுந்த விபத்தில் ஓட்டுநர் சடலமாக மீட்பு
admin - 0
தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் அருகே உள்ள வானரமுட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கன்டெய்னர் லாரி ஓட்டுநர் முத்துமாரியப்பன் (36). இவர் தூத்துக்குடி துறைமுகத்தில் கன்டெய்னரை இறக்கிவிட்டு அடுத்த கன்டெய்னரை ஏற்றுவதற்காக சென்னை துறைமுகத்துக்கு நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில் வந்தார்.
அந்தமானுக்கு சரக்கு ஏற்றும் இடத்தில் டிரெய்லர் லாரியை ஓட்டிச் சென்றபோது திடீரென முன்பக்கம் கேபின் (டிரைவர் கேபின்) உடைந்து அதனுடன் முத்துமாரியப்பன் கடலில் தலைக்குப்புற விழுந்தார். இதைக் கண்டு...
