மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பெட்ரோல், டீசல் விலையில் உள்ள வேறுபாடுகள் குறித்த கேள்விக்கு, மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி நாடாளுமன்றத்தில் அளித்த பதில்: நாட்டில் உள்ள சிறிய, பெரிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை விட ஆந்திர மாநிலத்தில்தான் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக உள்ளது.
அமராவதியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.109.74 க்கு விற்பனை செய்யப்படுகிறது. குறைந்தபட்சமாக நாட்டில் அந்தமான் - நிக்கோபார் தீவுகளில் ஒரு...
வாக்காளர் பட்டியலில் உள்ள குறைகளை நீக்கவே வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த (எஸ்ஐஆர்) பணி நடைபெறுகிறது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்தார்.
மாநிலங்களவையில் நேற்று நடைபெற்ற தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு மத்திய அமைச்சர் நட்டா பேசியதாவது: வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் (எஸ்ஐஆர்) மூலம் வாக்குகளை திருட பாஜக முயற்சிக்கிறது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் கூறுகின்றன.
தேர்தல் ஆணையத்தின் மீதான செயல்பாடுகள்...
நேபாள அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: உயர் மதிப்புள்ள இந்திய கரன்சிகளை கொண்டு செல்வதற்கான ஒரு தசாப்த கால தடை, முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
தற்போது தளர்த்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளின்படி ஒரு நபர் அதிகபட்சமாக ரூ.25,000 மதிப்புள்ள 200, 500 ரூபாய் இந்திய நோட்டுகளை வைத்திருக்க முடியும். திங்கள்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
திருத்தப்பட்ட விதியின்படி, நேபாள மற்றும் இந்திய குடிமக்கள் இருவரும் உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை இந்தியாவிலிருந்து...
மும்பையில் உள்ள பாந்த்ரா பகுதியில் ரூ.14.4 கோடி செலவில் ஏழுமலையான் கோயில் கட்ட, திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில், திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.
தேவஸ்தான தலைவர் பிஆர் நாயுடு தலைமையில் நடைபெற்ற இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதுகுறித்து அறங்காவலர் பிஆர் நாயுடு மற்றும் நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம்...
உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் காசி விஸ்வநாதர் உள்ளிட்ட பல முக்கியமானக் கோயில்கள் உள்ளன. இவற்றில் பல்வேறு பிரிவுகளின் துறவிகளுக்கான மடங்கள், தர்ம சத்திரங்களும் உள்ளன. இவை அனைத்துக்கும் வாராணசி மாநகராட்சி வரி வசூலிக்கிறது.
வரி பாக்கி தொடர்பாக மாநகராட்சி கால அவகாசத்துடன் நோட்டீஸ் அளித்திருந்தது. வரி செலுத்தாதவர்களுக்கு ஜப்தி அறிவிப்பும் ஒரிரு நாட்களுக்கு முன்னர் வழங்கப்பட்டது.இதற்கு துறவிகளும், மடங்களின் தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
வாராணசி பாதாளபுரி மடத்தின் தலைவர்...
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது எக்ஸ் பக்கத்தில் நேற்று கூறியதாவது:
மகாத்மா காந்தியடிகளின் கொள்கைகளைப் பின்பற்றி சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டவர் பொட்டி ஸ்ரீராமுலு. உப்பு சத்யாகிரகப் போராட்டத்திலும், வெள்ளையனே வெளியேறு இயக்கத்திலும் அவர் தீவிரமாக பங்கேற்றார். அவரது நினைவு நாளில் அவருக்கு தலைவணங்கி நான் அஞ்சலி செலுத்துகிறேன்.
அதேபோல், சுதந்திரத்துக்குப் பின்னர் ஒருங்கிணைந்த இந்தியா உருவாகப் பாடுபட்டவர் சர்தார் வல்லபபாய் படேல். சுதந்திரத்துக்குப் பின்னர் மக்கள் அமைதியான வாழ்க்கை...
தலைமை தகவல் ஆணையராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ராஜ்குமார் கோயல் நேற்று பதவியேற்றார்.
தலைமை தகவல் ஆணையராக இருந்த ஹீராலால் சமாரியாவின் பதவிக் காலம் கடந்த செப்டம்பர் 13-ம் தேதி முடிவடைந்தது. இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் அடங்கிய தேர்வுக் குழு ஆலோசனை நடத்தியது. இதில் அந்தப் பதவிக்கு ராஜ்குமார் கோயல் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில்...
நவோதயா பள்ளிகளை தொடங்க மத்திய அரசுடன் ஆலோசியுங்கள்: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
admin - 0
தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை தொடங்க அனுமதிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது.
தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, ”ஜவஹர் நவோதயா பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை பின்பற்றபடுகிறது. ஆனால் தமிழக அரசு இருமொழி கொள்கையை சட்டமாக்கியுள்ளது” என வாதிட்டார்.
அப்போது நீதிபதிகள்,...
கேரள மாநில அமைச்சர் வி.சிவன்குட்டி செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
ஏற்கெனவே நடைமுறையில் உள்ள 29 தொழிலாளர் சட்டங்களை ஒருங்கிணைத்து புதிதாக 4 சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதில் தொழிலாளர்களுக்கு எதிரான பல அம்சங்கள் உள்ளன. இந்த சட்டங்களைக் கண்டித்து வரும் 19-ம் தேதி திருவனந்தபுரத்தில் தொழிலாளர் மாநாட்டை கேரள அரசு நடத்தவுள்ளது. மாநாட்டை முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைக்கவுள்ளார்.
மாநில அரசுகளின் கொள்கைகளுக்கு எதிராகவும், தொழிலாளர் நலனுக்கு...
பிஹார் மாநில அமைச்சராக உள்ள நிதின் நபின் (45), பாஜகவின் தேசிய செயல் தலைவராக நேற்று முன்தினம் நியமிக்கப்பட்டார்.
இந்த தகவலை பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் தெரிவித்திருந்தார். இவர் ஜே.பி.நட்டாவுக்கு அடுத்தபடியாக தேசிய தலைவராக நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில், நிதின் நபின் பாட்னாவிலிருந்து நேற்று மதியம் டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் வந்தார். அங்கு அவரை டெல்லி முதல்வர் ரேகா குப்தா உள்ளிட்ட கட்சி...
