பாஜக மூத்த தலைவர் அமித் மாளவியா சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: சீன ராணுவ தொழில்நுட்பத்தின் புகழ் பாடுவதை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் வாடிக்கையாக வைத்துள்ளார்.
நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் சீன ராணுவ தொழில்நுட்பம், ஆயுதங்களுக்கு ஆதரவாக அவர் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார். கடந்த 2021-ம் ஆண்டு மக்களவை கூட்டத்தின்போது, லடாக்கில் சீனாவின் மோதல் போக்கை ஆதரிக்கும் வகையில் ராகுல் பேசினார். சீன மாடல்...
பிஹார் வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு இடைக்கால தடை இல்லை: வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்
admin - 0
பிஹாரில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் நேற்று மறுத்துவிட்டது. அதேநேரம், அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. தகுதியான குடிமக்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதையும், தகுதியற்ற வாக்காளர்களை நீக்குவதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டு கடந்த ஜூன் 24-ம் தேதி சிறப்பு தீவிர திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியது.
அதன்படி, பிஹாரில் 2003-ம் ஆண்டுக்கு பிறகு வாக்காளராக...
2027-ம் ஆண்டில் இந்தியாவின் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கான அறிவிப்பை மத்திய அரசு கடந்த மாதம் 16-ம் தேதி வெளியிட்டது. அந்த அறிவிப்பில், லடாக் போன்ற பனிப்பொழிவு நிறைந்த பகுதிகளில் அக். 1, 2026 என்ற தேதியை அடிப்படையாகக் கொண்டும், நாட்டின் பிற பகுதிகளில் மார்ச் 1, 2027 என்ற தேதியை அடிப்படையாகக் கொண்டும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மக்கள்தொகை கணக்கெடுப்பில், பொதுமக்கள்...
பிஹார் மாநிலத்தில் உள்ள கோட்டக் மஹிந்திரா வங்கியின் ஒரு கிளை மேலாளர் சூதாட்டம் மற்றும் பந்தய செயலிக்கு அடிமையாகி உள்ளார். இதையடுத்து, கடந்த 2 ஆண்டுகளாக பிஹார் அரசின் வங்கிக் கணக்கிலிருந்து கோடிக்கணக்கான பணத்தை திருடி சூதாடி அல்லது பந்தயம் கட்டி உள்ளார். குறிப்பாக, பிஹார் அரசின் மாவட்ட நிலம் கையகப்படுத்தல் அதிகாரிக்கான காசோலைகளில் போலி கையெழுத்தை இட்டும் காசோலை குளோனிங் மூலமும் மொத்தம் ரூ.31.93 கோடியை மோசடி...
புரி ஜெகந்நாதருக்கு நேற்று 208 கிலோ தங்க நகைகளால் அலங்காரம் செய்யப்பட்டது.
கடந்த 1460-ம் ஆண்டில் அப்போதைய கலிங்க மன்னர் கபிலேந்திர தேவா, தக்காணத்து போர்களில் வெற்றி பெற்று தங்க நகைகள், வைரங்களுடன் ஒடிசா திரும்பினார். இந்த தங்க நகைகள், வைரங்களை புரி ஜெகந்நாதர் கோயிலுக்கு அவர் காணிக்கையாக வழங்கினார்.
அப்போது முதல் புரி ஜெகந்நாதர் கோயிலில் சுனா பேஷா என்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஆரம்ப காலத்தில் சுமார் 138...
நக்சல் ஒழிப்பு நடவடிக்கையில் மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாக தீவிரமான நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் நக்சலைட்கள் கண்காணிப்பு பணிக்காக ட்ரோன்களை பயன்படுத்துவது கண்டறியப்பட்டது.
இது குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தீவிர விசாரணை நடத்தியதில் உத்தர பிரதேசம் மதுராவைச் சேர்ந்த விஷால் சிங் என்பவர் நக்சலைட்களுக்கு ட்ரோன்களை விநியோகம் செய்தது கண்டறியப்பட்டது. அவர் கடந்த மாதம் 29-ம் தேதி டெல்லியில் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய...
மகாராஷ்டிர மாநிலம் மராத்வாடா பகுதி லத்தூர் மாவட்டத்தில் உள்ள ஹடோல்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அம்பதாஸ் பவார் (75). இவருக்கு 2.5 ஏக்கர் நிலம் உள்ளது.
ஆனால், இந்த நிலத்தை உழுது பயிர் செய்வதற்கு தேவையான எருதுகள் அல்லது டிராக்டரை வாங்க அவருக்கு வசதி இல்லை. அவற்றுக்கு ஒரு நாளைக்கு ரூ.2,500 வாடகை கேட்பதால், தானே எருதாக மாறி அம்பதாஸ் பவாரும் அவரது மனைவி முக்தாபாயும் பல ஆண்டுகளாக நிலத்தை ஒரு...
பழங்கால நாணயங்களுக்கு கோடிக்கணக்கில் பணம் என்று கூறியதை நம்பி சைபர் மோசடியில் சிக்கிய முதியவர் தற்கொலை
admin - 0
பழங்கால நாணயங்களுக்கு ரூ. 2 கோடி வரை தருவதாக கூறி சைபர் மோசடியில் சிக்கி ஏமாந்த 65 வயது முதியவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசம் ரேவா நகரைச் சேர்ந்தவர் சரோஜ் துபே (65). இவர் பள்ளி ஒன்றில் காவலாளியாக வேலைபார்த்து ஓய்வு பெற்றவர். இவருக்கு ஜூலை 1-ம் தேதி அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வந்தது....
திருவனந்தபுரத்தில் பழுதாகி நிற்கும் பிரிட்டிஷ் விமானப்படையின் எப்-35 ரக போர் விமானத்தை சரி செய்ய பிரிட்டிஷ் விமான பொறியாளர்கள் திருவனந்தபுரம் வந்துள்ளனர்.
இந்திய கடற்படையுடன் கூட்டுப் பயிற்சியில் ஈடுபவதற்காக பிரிட்டிஷ் கடற்படையின் எச்எம்எஸ் பிரின்ஸ் ஆப் வேல்ஸ் விமானம் தாங்கி போர்க்கப்பல் கடந்த மாதம் வந்தது. இதில் இருந்து புறப்பட்ட எப்-35 ரக போர் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கடந்த மாதம் 14-ம் தேதி...
ஆந்திர மாநிலத்தின் பிரகாசம் மாவட்டம், நரசிம்மாபுரத்தில் குடிநீர் திட்டத்துக்கு துணை முதல்வர் பவன் கல்யாண் நேற்று அடிக்கல் நாட்டினார்.
விழாவில் அவர் பேசியதாவது: 2029-ல் ஆட்சிக்கு வந்ததும் எங்களை ஒரு கை பார்ப்போம் என முன்னாள் முதல்வர் ஜெகன் அடிக்கடி மிரட்டி வருகிறார். சக மனிதர்களை இவ்வாறு மிரட்டியதால்தான் தனக்கு இந்த நிலைமை என்பதை ஜெகன் இன்னமும் புரிந்து கொள்ளவில்லை. மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்ட நிதியை முந்தைய ஜெகன்...







