Google search engine
சோஹோ நிறு​வனத்​தின் நிறு​வனர் ஸ்ரீதர் வேம்பு சமூக வலை​தளத்​தில் கூறி​யுள்​ள​தாவது: பிரி​வினை​யின் போது தங்​கள் குடும்​பங்​கள் எல்​லா​வற்​றை​யும் விட்​டு​விட்டு இந்​தி​யா​வுக்கு எப்​படி வரநேர்ந்​தது என்​பது குறித்து சிந்தி நண்​பர்​களிடம் ஏராள​மான கதைகளை கேட்​டிருக்​கிறேன். இந்​தி​யா​வில் அவர்​கள் தங்​கள் வாழ்க்​கையை கட்​டி​யெழுப்பி சிறப்​புடன் உள்​ளனர். அதேபோன்​று, விசாவுக்​கான கட்​ட​ணம் உயர்த்​தப்​பட்​டுள்ள நிலை​யில் அமெரிக்​கா​வில் உள்ள இந்​திய தொழில் வல்​லுநர்​கள் தங்​கள் தாய்​நாட்​டுக்கு திரும்​புவதை தீவிர​மாக பரிசீலிக்க வேண்​டும். பிரி​வினைக்​குப் பிறகு இந்​தி​யா​வில்...
சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள, அக்டோபர் 30-ம் தேதிக்குள் வாக்காளர் பட்டியலுடன் தயார் நிலையில் இருக்கும்படி மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு, தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளின் மாநாடு இந்த மாதம் தொடக்கத்தில் நடந்தது. அப்போது சிறப்பு தீவிர திருத்தத்துக்கு, வரும் அக்டோபர் 30-க்குள் கடைசியாக திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலுடன் தயார் நிலையில் இருக்கும்படி தேர்தல் ஆணையம் கூறியது. இதையடுத்து பல மாநில தலைமை...
காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் ஊடக நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: கேரளாவில் மூளையை தின்னும் அமீபா குறித்த செய்தி மிகவும் வருத்தமடைய செய்துள்ளது. பொது நீர்நிலைகளில் குளிப்பதன் மூலம் பலர் இந்த கொடிய வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். வேறு ஏதாவது தீர்வு கிடைக்கும் வரை நீச்சல் குளங்களில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். சில நீர் ஆதாரங்கள் பாதுகாப்பாக இருந்தபோதிலும் சுத்திகரிக்கப்படாத இயற்கை நீர்நிலைகளில் அச்சுறுத்தல் உள்ளது. அங்கே...
இந்தியாவின் மிகப் பெரிய வர்த்தக பங்குதாரராக அமெரிக்கா உள்ளது. 2024-25-ம் ஆண்டில் இருதரப்பு வர்த்தகம் 131.84 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இதில் ஏற்றுமதி 86.5 பில்லியன் டாலர். இந்நிலையில் இந்தியா மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 25 சதவீத வரியும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண் ணெய் வாங்குவதற்காக 25 சதவீத அபராத வரியும் விதித்தார். இரு நாடுகள் இடையே கடந்த பிப்ரவரி மாதம் முதல் இருதரப்பு வர்த்தக...
அருணாசல பிரதேசம், திரிபுரா மாநிலங்​களில் பிரதமர் நரேந்​திர மோடி இன்று (செப்​.22) சுற்​றுப்​பயணம் மேற்​கொள்கிறார். அப்​போது அவர் ரூ.5,100 கோடி மதிப்​பிலான திட்​டங்​களுக்கு அடிக்​கல் நாட்​டு​கிறார். இதுகுறித்து பிரதமர் அலு​வல​கம் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் தெரி​வித்​துள்​ள​தாவது: பிரதமர் நரேந்திர மோடி செப்​டம்​பர் 22-ல் அருணாச்​சலப் பிரதேசம் மற்​றும் திரிபுரா மாநிலங்​களில் சுற்​றுப்​பயணம் மேற்​கொள்ள உள்​ளார். அப்​போது இரு மாநிலங்​களி​லும் ரூ.5,100 கோடிக்​கும் அதி​க​மான பல மேம்​பாட்டு திட்​டங்​களுக்கு அடிக்​கல் நாட்​டு​வார். மேலும்,...
 டெல்​லி- ஒடிசா புருசோத்​தம் எக்​ஸ்​பிரஸ் ரயி​லில் முதல் வகுப்பு ஏ.சி பெட்​டி​யில் பயணம் செய்த பயணி​கள் சிலர் படுக்கை விரிப்​பு, கம்​பளி ஆகிய​வற்றை தங்​கள் பைகளில் எடுத்​துச் சென்று சிக்​கினர். தொலை தூர ரயி​லில்​களில் தூங்​கும் வசதி கொண்ட ஏ.சி பெட்​டி​யில் பயணம் செய்​யும் பயணி​களுக்கு படுக்கை விரிப்​பு​கள், கம்​பளி ஆகியவை வழங்​கப்​படும். இரவில் தூங்​கும்​போது அவற்றை பயன்​படுத்​திய பின், பயணி​கள் அவற்றை தங்​கள் இருக்​கை​யில் வைத்து விட்டு செல்​வது...
 மத்​திய பிரதேச மாநிலம் இந்​தூரில் பிரபல ஷீதலா மாதா மார்க்​கெட் உள்​ளது. இங்கு பெண்​களுக்​கான ஆடைகள் மொத்த​மாக விற்​கப்​படு​கின்​றன. இந்​தியா மட்​டுமன்றி சர்​வ​தேச அளவில் இந்த மார்க்​கெட் பிரபல​மாக உள்​ளது. இங்கு 501 கடைகள் உள்​ளன. சமீபத்​தில் இந்த மார்க்​கெட் செயல்​பாடு​கள் குறித்த ஆலோ​சனை கூட்​டம் நடை​பெற்​றுள்​ளது. அதில் உள்​ளூர் பாஜக தலை​வரும் எம்​எல்ஏ மகனு​மான ஏகலைவா சிங் கவுர் பங்​கேற்​றுள்​ளார். கூட்​டத்​தில் அவர் பேசும்​போது, ‘‘ஷீதலா மாதா மார்க்​கெட்​டில்...
ஆழமற்ற கடற்​பகு​தி​யில் இயங்​கும் நீர்​மூழ்கி எதிர்ப்பு போர்க் கப்​பல்​களை (ASW-SWC) கொல்​கத்​தா​வின் ‘கார்​டன் ரீச் ஷிப் பில்​டர்ஸ் அண்டு இன்​ஜினீயர்​ஸ்' (GRESE) நிறு​வனம் கட்டி வரு​கிறது. இதில் முதலா​வது போர்க் கப்​பலான ‘அர்​லா​னா' கடந்த ஜூன் மாதம் இந்​திய கடற்​படை​யில் இணைக்​கப்​பட்​டது. இதையடுத்து இரண்​டாவது போர்க் கப்​பலை (ஆந்த்​ராத்) இந்​திய கடற்​படை​யிடம் அந்த நிறு​வனம் கடந்த சனிக்​கிழமை ஒப்​படைத்​தது. லட்​ சத்​தீவு தீவுக்​கூட்​டத்​தில் உள்ள ஆந்த்​ராத் தீவிலிருந்து இதற்​கான பெயர் பெறப்​பட்​டுள்​ளது....
 பெங்​களூரு​வில் போக்​கு​வரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதி​கரித்​து​வரும் நிலை​யில், போக்​கு​வரத்து விதி​முறை மீறல்களும் அதி​கரித்து வரு​கின்​றன. போக்​கு​வரத்து போலீ​ஸார் சாலைகளில் நின்​று, அபராதத்தை வசூலிக்​கும் பணி​யில் ஈடு​பட்டு வந்​தனர். இந்​நிலை​யில் கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி முதல் செப்​டம்​பர் 12-ம் தேதிக்​குள் அபராதத்தை செலுத்​தி​னால் 50% தள்​ளு​படி என போலீ​ஸார் அறி​வித்​த‌னர். இதையடுத்து வாகன ஓட்​டிகள் தாமாக முன்​வந்து ஆன்​லைன் மூல​மாக அபராதத்தை செலுத்​து​வ​தில் ஆர்​வம் காட்​டினர். அதன்​படி செப்​டம்​பர்...
கன்னட எழுத்​தாள​ரும் வழக்​கறிஞரு​மான பானு முஸ்​தாக்​கின் ‘ஹார்ட் லாம்ப்' நூலுக்கு அண்​மை​யில் சர்​வ​தேச புக்​கர் பரிசு கிடைத்​தது. இந்த விருதை வென்ற முதல் கன்னட எழுத்​தாளர் என்​ப​தால், இந்த ஆண்டு மைசூரு தசரா விழாவை தொடங்கி வைக்க பானு முஸ்​தாக்​கிற்கு கர்​நாடக அரசு அழைப்பு விடுத்​தது. முஸ்​லிம் மதத்​தைச் சேர்ந்த பானு முஸ்​தாக் இந்​துக்​களின் தசரா விழாவை தொடங்கி வைக்க எதிப்பு தெரிவித்து மைசூரு​வின் முன்​னாள் எம்​.பி. பிர​தாப் சிம்​ஹா...