உத்தர பிரதேச மாநிலம் வாராணசி நகராட்சியின் பொதுமக்கள் தொடர்பு அதிகாரி சந்தீப் ஸ்ரீவாஸ்தவா கூறியதாவது:
உத்தர பிரதேச திடக்கழிவு மேலாண்மை மற்றும் சுகாதார விதிகள் (2021) வாராணசியில் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி, பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.250, வாகனங்களில் இருந்தபடி குப்பையை வீசினாலோ எச்சில் துப்பினாலோ ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். இதுபோல சாலையில் சுற்றித் திரியும் பிராணிகளுக்கு உணவுப் பொருள் வழங்கினால் ரூ.250, பூங்கா, சாலை உள்ளிட்ட பொது...
ஆந்திராவை புரட்டிப் போட்ட மோந்தா புயல்: ஹெலிகாப்டரில் ஆய்வு செய்த முதல்வர் சந்திரபாபு நாயுடு
admin - 0
மோந்தா புயல் ஆந்திராவை புரட்டி போட்டுள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தார். வங்க கடலில் மையம் கொண்டிருந்த மோந்தா புயல் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு காக்கிநாடா - மசூலிப்பட்டினம் இடையே கரையை கடந்தது.
அப்போது சுமார் 100 முதல் 110 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. கோனசீமா, விசாகப்பட்டினம், விஜயநகரம், அம்பேத்கார், ஸ்ரீகாகுளம், பிரகாசம், கிருஷ்ணா, நெல்லூர், கோதாவரி...
தெலங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான அமைச்சரவையில் தற்போது 15 பேர் இடம் பெற்றுள்ளனர். சட்டப்பேரவை உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில் மேலும் 3 பேருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கலாம்.
தெலங்கானாவில் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு ஒவ்வொரு முறையும் ஓர் அமைச்சர் பதவி வழங்கப்பட்டு வருகிறது. இம்முறை இந்த வாய்ப்பை யாருக்கு வாய்ப்பு வழங்கலாம் என ரேவந்த் ரெட்டி அரசு ஆலோசித்து வந்தது. பிறகு இது தொடர்பாக கட்சி மேலிடமே முடிவு எடுக்கும்...
பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் இம்முறை ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) மற்றும் எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணியை சேர்ந்த சுமார் 50 அதிருப்தி எம்எல்ஏக்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
அதிகபட்சமாக ராஷ்டிரிய ஜனதா தளத்தை (ஆர்ஜேடி) சேர்ந்த 27 பேர் போட்டி வேட்பாளராகி உள்ளனர். இதையடுத்து ஐக்கிய ஜனதா தளத்தின் (ஜேடியு) 16 பேரும் பாஜகவின் 6 பேரும் போட்டி வேட்பாளராக களம் காண்கின்றனர்.
இதனால் கட்சியை விட்டு நீக்கப்பட்ட இவர்கள்...
குடிபோதையில் வாகனம் ஓட்டிய இளைஞருக்கு 1,000 துண்டுப் பிரசுரங்களை வழங்குமாறு புனே மோட்டார் வாகன நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் பிம்ப்ரி சின்ச்வாட்டின் ஹின்ஜாவாடி பகுதியில் கடந்த ஜூலை 22-ம் தேதி 28 வயது இளைஞர் ஒருவர் மதுபோதையில் வாகனம் ஓட்டி வந்து போலீஸாரிடம் சிக்கிக்கொண்டார்.
இதையடுத்து அவர் மீது மோட்டார் வாகன சட்டம் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவருக்கு, புனே மோட்டார் வாகன நீதிமன்றம்...
டெல்லியில் செயற்கை மழை பெய்விக்கும் திட்டம் தற்போதைக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காற்றின் தரம் மிக மோசமடைந்ததால் டெல்லியில் காற்று மாசை குறைக்க செயற்கை மழை பெய்விக்க கான்பூர் ஐஐடியுடன் இணைந்து செயல்பட டெல்லி அரசு முடிவு செய்தது.
இந்நிலையில் டெல்லியில் நேற்று முன்தினம் செயற்கை மழையைப் பெய்விக்க விமானம் புறப்பட்டது. ஆனால் போதுமான ஈரப்பதம் இல்லாததால் திட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஐஐடி கான்பூர் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறும்போது, “6 ஆயிரம்...
முதலீட்டாளர்கள் வெளியேற மத்திய அரசே காரணம்: கர்நாடக தொழில்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் குற்றச்சாட்டு
admin - 0
கர்நாடக தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் நேற்று மைசூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கர்நாடகாவில் பன்னாட்டு முதலீட்டாளர்கள் தொழில் தொடங்குவதற்கான அனைத்து வசதிகளும் நிறைந்துள்ளன. ஆனால் கடந்த சில மாதங்களாக கர்நாடகா மீது திட்டமிட்டு எதிர்மறை பிம்பங்கள் கட்டமைக்கப்படுகின்றன. இதனால் சில நிறுவனங்கள் கர்நாடகாவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளன. அந்த நிறுவனங்களுடன் அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
மத்தியில் ஆளும் பாஜக அரசு கர்நாடகாவுக்கு எதிரான மனநிலையில் உள்ளது. பன்னாட்டு முதலீட்டாளர்களுடன்...
டெல்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் அருகில் நிறுத்தப்பட்ட ஒரு பேருந்து நேற்று தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு உருவானது. டெல்லியில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கு விமான நிறுவனங்களுக்கு 'சாட்ஸ் ஏர்போர்ட் சர்வீசஸ்' என்ற நிறுவனம் பேருந்து சேவை வழங்கி வருகிறது.
இதற்கு சொந்தமான ஒரு பேருந்து நேற்று பிற்பகல் மூன்றாவது முனையத்தில் ஏர் இந்தியா விமானத்துக்கு அருகில் நின்றிருந்தது. இந்நிலையில் அந்தப் பேருந்து...
உலகளவில் பயணிகள் விமான தயாரிப்பில் ஏர்பஸ் மற்றும் போயிங் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்தியாவிடம் அனைத்து வளங்கள் இருந்தாலும் பல்வேறு இடையூறுகள் காரணமாக நீண்ட காலமாக பயணிகள் விமான தயாரிப்பை மேற்கொள்ள முடியாத சூழல் நிலவி வந்தது.
ஆனால், இப்போது, ரஷ்யா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவும் உள்நாட்டில் பயணிகள் விமான தயாரிப்பை சாத்தியமாக்க உள்ளது. இதற்காக, ரஷ்யாவைச் சேர்ந்த பொது கூட்டு பங்கு நிறுவனமான யுனைடெட் ஏர்கிராப்ட்...
பஞ்சாப் மாநிலத்தின் சங்ரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மன்பிரீத் சிங் (27). இவர் கனடாவின் டோரண்டோ நகரில் உள்ள பிராம்ப்டனில் கடந்த சில ஆண்டுகளாக வசித்து வருகிறார். அங்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமன்பிரீத் சய்னி என்ற இளம்பெண்ணை கடந்த வாரம் கொலை செய்துள்ளார்.
அமன்பிரீத்தின் உடலை லிங்கனில் உள்ள ஒரு பூங்காவில் இருந்து போலீஸார் கடந்த 21-ம் தேதி கைப்பற்றினர். அவரது உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்ததை போலீஸார்...








