ஆந்திராவில் மீண்டும் பேருந்தில் தீ விபத்து: ஓட்டுனர், நடத்துனர் உட்பட 7 பேர் உயிர் தப்பினர்
admin - 0
ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் தொடர்ந்து பேருந்து விபத்துகள் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். கடந்த மாதம் 24-ம் தேதி கர்னூல் அருகே பேருந்து தீப்பற்றி 20 பயணிகள் உயிரிழந்தனர். இந்த விபத்து அனைவரையும் உலுக்கியது. இதை தொடர்ந்து தெலங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டத்தில் தாண்டூரு அருகே கடந்த 3-ம் தேதி அரசு பேருந்து மீது டிப்பர் லாரி மோதியதில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில், ஆந்திர...
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நாட்டில் நக்சல் தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. இதையொட்டி நக்சலைட்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதேநேரத்தில் சரண் அடைவோருக்கு அரசு மறுவாழ்வு அளித்து வருகிறது. . சத்தீஸ்கரில் கடந்த மாதம் மட்டும் சுமார் 300 நக்சலைட்கள் சரண் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் சத்தீஸ்கரின் கேசிஜி (கைராகர்-சுய்காடன்-கண்டாய்) மாவட்டத்தில் முக்கிய பெண் நக்சலைட் ஒருவர் நேற்று சரண் அடைந்தார். கமலா சோடி (30)...
கடந்த 2022-ம் ஆண்டு காஷ்மீரை சேர்ந்த முகம்மது ஷரீப் ஷா என்பவர் ஜம்முவில் உள்ள முன்னாள் அமைச்சர் ஜதீந்தர் சிங் என்கிற பாபு சிங்கிடம் ரூ.6.9 லட்சம் ஹவாலா பணத்தை கொடுக்க முயன்றபோது போலீஸாரிடம் பிடிபட்டார்.
இந்தப் பணம் இந்தியாவில் போதைப் பொருள் விற்பனை மூலம் ஈட்டப்படுவதும் பிரிவினைவாத மற்றும் தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்படுவதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பாபு சிங் ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில்...
பிஹார் துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான விஜய் குமார் சின்ஹா, லக்கிசாராய் தொகுதியில் போட்டியிடுகிறார்.
அங்குள்ள வாக்குச் சாவடிக்கு அவர் நேற்று சென்றார். அப்போது ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்ஜேடி) தொண்டர்கள் அவரது காரை சூழ்ந்து தாக்க முயன்றனர். கற்கள் மற்றும் காலணிகளை கார் மீது வீசி எறிந்தனர்.
அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹாவை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விஜய்...
பிஹாரில் முதல்கட்ட தேர்தல் நேற்று நடந்தது. இதில் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் நேற்று பாட்னாவில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் தனது மனைவி ராப்ரி தேவி, மகனும் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோருடன் சென்று வாக்களித்தார்.
இது தொடர்பான புகைப்படத்தை ‘எக்ஸ்’ தளத்தில் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். இதில், “தவாவில் உள்ள ரொட்டியை புரட்டிப்போட வேண்டும். இல்லாவிடில் அது கருகிவிடும். 20...
பண மோசடி வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு தொழிலதிபர் அனில் அம்பானிக்கு (66) அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்ததாவது: அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழும நிறுவனங்கள் வங்கிகளில் கடன்பெற்று அதனை முறையாக செலவு செய்யாமல் பணமோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக அமலாக்கத் துறை ஏற்கெனவே சோதனை நடத்தி அனில் அம்பானி குழும நிறுவனங்களுக்கு சொந்தமான ரூ.7,500 கோடி மதிப்பிலான சொத்துகளை...
உ.பி.யின் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள சனூர் ஜங்ஷன் ரயில் நிலையத்தின் 4-வது நடைமேடையில் நேற்று காலை 9.15 மணிக்கு சோபன் - பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்றது.
இதில் இருந்து இறங்கிய பயணிகள் சிலர், எதிரில் உள்ள 3-வது நடைமேடைக்கு செல்ல படிக்கட்டுகளை பயன்படுத்தாமல் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றனர். அப்போது 3-வது லைனில் வேகமாக வந்த நேதாஜி எக்ஸ்பிரஸ் அவர்கள் மீது மோதியது. இதில் 6 பெண்கள்...
ஆந்திராவில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் அதிக லஞ்சம் வாங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, நேற்று ஒரே நேரத்தில் என்.டி.ஆர் மாவட்ட இப்ரஹிம்பட்டினம், பிரகாசம் மாவட்டம் ஓங்கோல், விஜயநகரம் மாவட்டம் போகாபுரம், சத்யசாய் மாவட்டம் சிலமத்தூரு, பல்நாடு மாவட்டம் நரசராவ் பேட்டா, திருப்பதி மாவட்டம் ரேணிகுண்டா உட்பட பல மாவட்டங்களில் 120 பத்திரப்பதிவு மற்றும் துணை பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.
ராணுவத்துக்கு மதம், ஜாதி ஆகியவை கிடையாது என ராகுல் கருத்துக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பதில் அளித்துள்ளார்.
பிஹார் மாநிலம் அவுரங்காபாத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘‘ நாட்டில் உயர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் 10 சதவீதம் பேர் உள்ளனர்.
இவர்கள் கட்டுப்பாட்டில்தான் கார்பரேட் நிறுவனங்கள், அரசு நிர்வாகம், நீதித்துறை, ராணுவமும் கூட இந்த 10 சதவீதத்தினர்...
கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் உள்ள மூடனஹள்ளியை சேர்ந்தவர் மஞ்சே கவுடா (55).
இவருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம் கர்நாடக வனத்துறை இடத்துக்கு அருகில் இருந்தது. இதனால் வனத்துறை அந்த நிலத்தை 3 ஆண்டுகளுக்கு முன்பு கையகப்படுத்தியது. தனது நிலத்துக்கு உரிய இழப்பீடை உடனடியாக வழங்குமாறு மண்டியா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மஞ்சே கவுடா மனு அளித்தார். ஆனால் அரசு இழப்பீடு வழங்காமல் காலம் தாழ்த்தியுள்ளது.
இந்நிலையில் மஞ்சே கவுடா...










