பிஹார், கேரள மாநிலங்களுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் நேற்று பதவியேற்றுக்கொண்டனர்.
பிஹார், கேரளா, மணிப்பூர், ஒடிசா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கடந்த வாரம் புதிய ஆளுநர்களை நியமித்தார்.
இதில் கேரள ஆளுநராக இருந்த ஆரிப் முகமது கான் பிஹார் ஆளுநராகவும், பிஹார் ஆளுநராக இருந்த விஸ்வநாத் அர்லேகர் கேரள ஆளுநராகவும் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் இவ்விரு மாநிலங்களின் புதிய ஆளுநர்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.
பிஹார் தலைநகர்...
உலக பணக்கார கடவுளாக பக்தர்களால் போற்றி வணங்கப்பட்டு வரும் திருப்பதி ஏழுமலையானுக்கு, கடந்த 2024-ம் ஆண்டில் உண்டியல் மூலம் ரூ.1,365 கோடி பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.
திருப்பதி ஏழுமலையானை தினமும் சுமார் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். இதில் வார கடைசியான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதலாக 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பக்தர்கள் சுவாமியை தரிசிப்பது...
தேசிய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (என்டிஏ) தலைமை வகிக்கிறது பாஜக. பிஹாரில் என்டிஏவுக்கு முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் தலைமை வகிக்கிறது. சுமார் 20 வருடமாக அசைக்க முடியாத முதல்வராக பிஹாரில் தொடர்கிறார் நிதிஷ். இடையில் அவர் மாறிய லாலு பிரசாத் தலைமையிலான மெகா கூட்டணி ஆட்சிலும் நிதிஷ் குமாரே முதல்வரானார். பிஹாரின் கடந்த பேரவை தேர்தலில் நிதிஷைவிட பாஜக அதிக தொகுதிகளில் வெற்றி...
ஜெகஜித் சிங்கின் உண்ணாவிரதத்தை முடிக்க நாங்கள் உத்தரவிடவில்லை: பஞ்சாப் அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
admin - 0
ஜெகஜித் சிங்கின் உண்ணாவிரதத்தை முடித்து வைக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல என்றும் அவருக்கு மருத்துவ உதவி வழங்க வேண்டும் என்றுதான் உத்தரவிட்டுள்ளோம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் வழங்கும் வகையில் சட்டம் இயற்றுவது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். ஆனால் எல்லையில் அவர்கள் தடுத்து...
தலைநகர் டெல்லியில் பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
டெல்லி அசோக் விஹாரில் குடிசை மறுவாழ்வு திட்டத்தின் கீழ் புதிதாக 1,675 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளன. இவற்றை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்து,பயனாளிகளுக்கு சாவிகளை வழங்குகிறார்.
டெல்லி நௌரோஜி நகரில் அமைக்கப்பட்டு உள்ள உலக வர்த்தக மையம் மற்றும் சரோஜினி நகரில் 2,500 வீடுகள் கொண்ட பொதுத் தொகுப்பு குடியிருப்புகளை பிரதமர் மோடி...
2024-ம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிப்பு: குகேஷ், மனு பாகர் உட்பட 4 பேருக்கு ’கேல் ரத்னா
admin - 0
பாரிஸ் ஒலிம்பிக்கில் இரட்டை பதக்கம் வென்ற துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாகர், உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற டி.குகேஷ், இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், பாரா தடகள வீரர் பிரவீன் குமார் ஆகிய 4 பேருக்கு மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 4 பேர் உட்பட 32 பேருக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
2024-ம் ஆண்டுக்கான...
நீட் தேர்வு தொடர்பான சிறப்பு குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.
இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர ஆண்டுதோறும் தேசிய அளவில் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்வின்போது வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றன. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் 40-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த 3 நீதிபதிகள்...
பிரதமர் மோடி, அமித் ஷா அழுத்தம் தரவில்லை: ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அறிவிப்பு
admin - 0
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரிடமிருந்து எங்களுக்கு எந்த அழுத்தமும் இல்லை என்று ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அறிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் முதல்வர் உமர் அப்துல்லா நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: மாநில அந்தஸ்தில் இருந்த ஜம்மு-காஷ்மீர் கடந்த 2019-ம் ஆண்டு இரண்டாகப் பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. இதை ஒரு தற்காலிக ஏற்பாடாக மட்டுமே நாம்...
கர்நாடக ஒப்பந்ததாரர் தற்கொலை வழக்கில் அமைச்சர் பிரியங்க் கார்கே பெயரை சேர்க்க பாஜக வலியுறுத்தல்
admin - 0
கர்நாடகாவில் ஒப்பந்ததாரர் தற்கொலை வழக்கில் அமைச்சர் பிரியாங்க் கார்கேவுக்கு தொடர்பு இருப்பதால் வழக்கில் அவரது பெயரை சேர்க்க வேண்டும் என மாநில பாஜக தலைவர் விஜயேந்திரா வலியுறுத்தினார்.
கர்நாடக மாநிலம் குல்பர்காவில் உள்ள பல்கியை சேர்ந்தவர் சச்சின் பஞ்சால் (26). குல்பர்கா மாநகராட்சி ஒப்பந்ததாரரான இவர் கடந்த டிசம்பர் 26-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன் அவர் எழுதிய கடிதத்தில், “ஊரக வளர்ச்சி மற்றும் தகவல் தொழில்நுட்ப...
மும்பை நாக்படா பகுதியில் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமுக்கு சொந்தமான ஒரு கடையை வருமான வரித்துறை கடந்த 2001 செப்டம்பரில் ஏலத்தில் விட்டது. ஜெயராய் பாய் தெருவில் 144 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்தக் கடையை உ.பி.யின் ஆக்ராவை சேர்ந்த ஹேமந்த் ஜெயின் என்பவர் வாங்கினார். தற்போது 57 வயதாகும் இவர் 23 ஆண்டுகளுக்கு முன் தனது 34-வது வயதில் ரூ.2 லட்சம் செலுத்தி இந்தக்...










