டெல்லியில் நடைபெறும் காமன்வெல்த் நாடுகளின் சபாநாயகர்கள் மாநாட்டை, ஜன.15-ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரிட்டன், கனடா, இந்தியா உட்பட 56 நாடுகள் அங்கம் வகிக்கும், காமன்வெல்த் நாடுகளின் சபாநாயகர்கள் அமைப்பை, கடந்த 1969-ம் ஆண்டு கனடாவின் அப்போதைய சபாநாயகர் லுசியன் லாமரெக்ஸ் உருவாக்கினார். சபாநாயகர்கள், அவைத் தலைவர்கள் நாடாளுமன்றத்தை பாரபட்சமின்றி நடத்துவது, நேர்மையாக நடத்துவதை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஆண்டு...
மனிதர்களுக்கு ஏற்படும் ரேபிஸ் பாதிப்பை நோயாக டெல்லி அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் பங்கஜ் குமார் சிங் கூறியதாவது:
தெருநாய்கள் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளது. குறிப்பாக வெறிநாய் கடியால் மனிதர்களுக்கு ரேபிஸ் நோய் பரவுவதை தடுக்க ஆலோசனைகள் வழங்கப்பட்டு உள்ளன. இதன் ஒரு பகுதியாக மனிதர்களுக்கு ஏற்படும் ரேபிஸ் பாதிப்பை நோயாக டெல்லி அரசு அறிவித்து உள்ளது....
ஒரு விமான நிலையத்தில் இருந்து 150 கி.மீ. தொலைவுக்குள் மற்றொரு விமான நிலையத்தை அமைக்கக்கூடாது என்ற விதி மிக நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த விதியில் தற்போது தளர்வு செய்யப்பட்டிருக்கிறது.
தலைநகர் டெல்லியில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் செயல்படுகிறது. இந்த விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு சுமார் 72 கி.மீ. தொலைவில் நொய்டாவின் ஜேவரில் புதிய விமான...
ஹைதராபாத்தில் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் தொழிலதிபர் ஒருவர் ரூ.7 கோடியை இழந்துள்ளார். இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தை சேர்ந்த 81 வயது தொழிலதிபரை, கடந்த 27-ம் தேதி மர்ம நபர் வாட்ஸ் அப் அழைப்பில் தொடர்பு கொண்டார். தன்னை மும்பை போலீஸின் மூத்த அதிகாரி என்று அறிமுகம் செய்த மர்ம நபர், தொழிலதிபரை மிரட்டும் தொனியில் பேசினார். தொழிலதிபர் பெயருக்கு தாய்லாந்தில் இருந்து...
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மம்தானி, குரான் புனித நூலை சாட்சியாக வைத்து நியூயார்க் நகர மேயராக நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் தேர்தல் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. இதில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான ஜோரான் மம்தானி (34) போட்டியிட்டார். அப்போது, ஆளும் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த அதிபர் ட்ரம்ப், கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
எனினும்,...
விமானப்படை துணைத் தளபதியாக இருந்த ஏர் மார்ஷல் நம்தேஸ்வர் திவாரி நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார். இதையடுத்து தென்மேற்கு மண்டல தலைமை அதிகாரியாக பணியாற்றிய ஏர் மார்ஷல் நாகேஷ் கபூர் விமானப்படை துணைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.
இவர் டெல்லியில் உள்ள வாயு பவனில் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு விமானப்படை வீரர்கள் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். விமானப்படையில் கடந்த 1986-ம் ஆண்டு சேர்ந்த நாகேஷ் கபூர், பலவித போர் விமானங்களை...
உத்தர பிரதேசத்தில் 2.88 கோடி வாக்காளர்கள் தங்களுக்கான எஸ்ஐஆர் படிவங்களை வாங்க வரவில்லை. இதற்கு நிரந்தர இடம் பெயர்வு காரணம் என தெரியவந்துள்ளது.
உத்தர பிரதேசத்தில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில், 2.88 கோடி பேர் தங்களுக்கான படிவங்களை வாங்க வரவில்லை. இவர்களில் 1.30 கோடி பேர் நிரந்தரமாக இடம்பெயர்ந்திருந்தது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியின் போது அடையாளம் காணப்பட்டது. இவர்களின் சதவீதம்...
வீடியோவால் அம்பலமான கிட்னி திருட்டு விவகாரம்: திருச்சி மருத்துவருக்கு மகாராஷ்டிர போலீஸ் வலை!
admin - 0
சட்டவிரோத கிட்னி விற்பனையில் ஈடுபட்ட திருச்சியைச் சேர்ந்த மருத்துவர் ராஜரத்தினம் கோவிந்தசாமி தலைமறைவாக உள்ளதாக மகாராஷ்டிரா காவல் துறை தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவின் சந்திரபூரைச் சேர்ந்த இளம் சிறு விவசாயியான ரோஷன் குடே என்பவர் கடந்த மாதம் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், வட்டிக்கு பணம் கொடுப்பவரிடம் இருந்து தான் பெற்ற ரூ. 1 லட்சம் பணத்தை திருப்பிச் செலுத்துவதற்காக தனது ஒரு சிறுநீரகத்தை விற்றதாகவும், ஆனாலும், தான் வாங்கிய தொகை...
கொல்கத்தா- குவாஹாட்டி இடையிலான வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி விரைவில் தொடங்கி வைப்பார் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
நாடு முழுவதும் முக்கிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. விரைவான பயணம், வசதியான இருக்கைகள், ஏ.சி. வசதி, பயோ கழிப்பறை, தானியங்கி கதவுகள், சிசிடிவி கண்காணிப்பு என பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் அதி நவீன வசதிகளை கொண்ட இந்த ரயில்களுக்கு பயணிகள்...
புத்தாண்டையொட்டி ராஜஸ்தானில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதும் நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல், பிரியங்கா காந்தி வதேரா ஆகியோர் தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் நேற்று ரந்தம்போருக்கு வருகை தந்தனர்.
சவாய் மாதோபூர் மாவட்டத்தில் உள்ளது ரந்தம்போர் சரணாலயம். இது புலிகள் மற்றும் செழுமையான பல்லுயிர் பெருக்கத்திற்கான முக்கிய இடமாகும். மேலும், இது, சுற்றுலாப் பயணிகளுக்கு மிக விருப்பமான சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.
ஜெய்ப்பூர், ஜெய்சால்மர், உதய்பூர், ஜோத்பூர் மற்றும் முக்கிய மத...
