பிஹார் மாநிலம் பாட்னாவில் இறந்த நபர்கள் தொடர்பான ரயில்வே உரிமை கோரல் நிதியில் பெருமளவு மோசடி நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுபோன்ற இறப்பு உரிமை கோரல் தொடர்பான வழக்கில், நஷ்டஈட்டு தொகையை ரயில்வே உரிமை கோரல் தீர்ப்பாயம்தான் முடிவு செய்து உத்தரவிடுகிறது. இதில் பல கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டதாகவும் மோசடி நடந்துள்ளதாகவும் கூறப்பட்டது. இதுதொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
சிபிஐ வழக்கின் அடிப்படையில் சட்டவிரோதப்...
நடிகை ரன்யா ராவ் மீதான தங்க கடத்தல் வழக்கில் 15 பேருக்கு தொடர்பு இருப்பதாக கர்நாடக அரசு தனது இறுதி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கர்நாடக போலீஸ் டிஜிபி ராமசந்திர ராவின் வளர்ப்பு மகளும், நடிகையுமான ரன்யா ராவ் (32) துபாயில் இருந்து 14.8 கிலோ தங்கம் கடத்தி வந்ததாக கடந்த 3-ம் தேதி பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் அவர் மீது...
திருமலை திருப்பதி தேவஸ்தான வருடாந்திர பட்ஜெட் ரூ.5,258.68 கோடியில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு அறங்காவலர் குழு ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் 2025-26-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் நேற்று திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் அறங்காவலர் குழு முன் சமர்ப்பிக்கப்பட்டது. ரூ.5,258.68 கோடியில் தாக்கல் செய்யப்பட்ட இந்த பட்ஜெட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அறங்காவலர் குழு ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து அறங்காவலர்...
ஏக்நாத் ஷிண்டேவை பற்றி குணால் கம்ரா பேச்சு: நிகழ்ச்சி நடந்த ஸ்டுடியோவை இடித்த மும்பை மாநகராட்சி
admin - 0
மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை விமர்சனம் செய்த நிகழ்ச்சி நடைபெற்ற ஸ்டுடியோ விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதாகக் கூறி மாநகராட்சி ஊழியர்கள் அதை நேற்று இடித்தனர்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த குணால் கம்ரா அரசியல் நையாண்டி கலைஞர் ஆவார். இவர் ஸ்டாண்ட்-அப் நகைச்சுவையாளராகவும் உள்ளார். கடந்த மாதம் மும்பையில் உள்ள ஹேபிடட் ஸ்டுடியோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய குணால் கம்ரா, மாநில துணை முதல்வரும் சிவசேனா (ஷிண்டே) தலைவருமான...
எம்எல்ஏக்கள் ஹனி டிராப் செய்யப்படுவதாக கர்நாடக அமைச்சர் புகார்: பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம்
admin - 0
கர்நாடகாவில் எம்எல்ஏக்களை குறி வைத்து ஹனி டிராப் செய்யப்படுவதாக அமைச்சர் ராஜண்ணா புகார் தெரிவித்தது தொடர்பான மனுவை உச்ச நீதி மன்றம் விசாரணைக்கு ஏற்றுள் ளது. இதனால் அம்மாநில அரசி யலில் பரபரப்புஏற்பட்டுள்ளது.
கர்நாடக சட்டப்பேரவையில் கடந்த 21-ம் தேதி கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.என். ராஜண்ணா பேசும்போது, “சில எம்எல்ஏ-க்கள் தங்களது அரசி யல் எதிரிகளை பழி வாங்கு வதற்காக பெண்களை வைத்து பாலியல் வழக்கில் சிக்க வைக்க...
பிஹார் இப்தாரில் தொடங்கிய தேர்தல் அரசியல்: நிதிஷ், சிராக் விருந்துகளை புறக்கணித்த முஸ்லிம்கள்; லாலு அழைப்பை ஏற்றனர்
admin - 0
பிஹாரில் முதல்வர் நிதிஷ் தலை மையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) மீண்டும் தேர்தலை எதிர்கொள்கிறது. நிதிஷுக்கு பிஹார் முஸ்லிம் கள் கணிசமான எண்ணிக்கை யில் ஆதரவளித்தனர். ஆனால், வக்பு சட்டத் திருத்த மசோ தாவுக்கு நிதிஷ் குமாரின் ஐக் கிய ஜனதா தளம் கட்சி ஆதர வளித்ததால், தற்போது முஸ்லிம் கள் அதிருப்தியில் உள்ளனர்.
இந்நிலையில், இப்தார் விருந் தில் பங்கேற்க முதல்வர் நிதிஷ் குமார் அழைப்பு விடுத்தார்....
பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்றுடன் முடிவடைகிறது. இறுதி நாளில் இயற்பியல், பொருளாதாரம் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெறுகின்றன.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு, கடந்த மார்ச் 3-ம் தேதி தொடங்கியது. இத்தேர்வை பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள், சிறைவாசிகள் என சுமார் 8 லட்சத்து 21 ஆயிரம் பேர் எழுதி வருகின்றனர். இந்நிலையில், பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) முடிவடைகிறது. இறுதி நாளில் இயற்பியல், பொருளாதாரம் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள்...
பாஜக தொண்டர் சூரஜ் கொலை வழக்கில் மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
கேரளாவின் கண்ணூர் மாவட்டம், முழப்பிலங்காடு நகரை சேர்ந்தவர் சூரஜ். இவர் மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகியாக இருந்தார். கடந்த 2003-ம் ஆண்டில் அவர் பாஜகவில் இணைந்து அந்த கட்சியின் வளர்ச்சிக்காக தீவிரமாக உழைத்தார்.
இதன்காரணமாக மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகளுக்கும் சூரஜுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கடந்த 2005-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம்...
தொகுதி மறுவரையறை, நீதிபதி விவகாரத்தால் அமளி: இரு அவைகளும் ஒத்திவைப்பு; நாடளுமன்றத்தில் நடந்தது என்ன?
admin - 0
நாடாளுமன்ற கர்நாடக அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதாக குற்றம்சாட்டியதால் பாஜக - காங்கிரஸ் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
புதுடெல்லி: தொகுதி மறுவரையறை, நீதிபதி வீட்டில் பணம் சிக்கியது ஆகிய விவகாரங்களால் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. கர்நாடகாவில் முஸ்லிம்கள் இடஒதுக்கீடு தொடர்பாக பாஜக - காங்கிரஸ் எம்.பி.க்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு...
இந்திய பண்பாட்டுக்கு எதிரானவர்கள் அடையாள சின்னங்களாக்கப்பட்டனர்: ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர்
admin - 0
நாட்டின் பண்பாட்டுக்கு எதிராக செயல்பட்டவர்கள் எல்லாம் அடையாள சின்னங்களாக மாற்றப்பட்டனர் என அவுரங்கசீப் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபலே தெரிவித்துள்ளார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பில் முக்கிய முடிவுகளை எடுக்கும் அகில பாரதிய பிரதிநிதிசபா கூட்டம் பெங்களூருவில் முடிவடைந்தது. இந்நிகழ்ச்சியில் பேட்டியளித்த ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபலே கூறியதாவது:
கர்நாடாகாவில் அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோல் மதப்...










